என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். தொடரில் நான்காவது முறை வென்ற கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது.
    துபாய்:

    துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    2-வது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 
    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பாப் டுபிளெசிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    துபாய்:

    துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
     
    இறுதிப்போட்டியில் வழங்கப்பட்ட விருதுகள்:

    ஆட்ட நாயகன் விருது  சென்னை அணியின் பாப் டுபிளெசிசுக்கு வழங்கப்பட்டது.

    எமர்ஜிங் பிளேயர் - ருதுராஜ் கெய்க்வாட் 

    கேம் சேஞ்சர் விருது - ஹர்ஷல் படேல்

    சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - ஹெட்மையர்

    அதிக சிக்சருக்கான விருது - கே.எல்.ராகுல் 

    பவர் பிளேயர் விருது - வெங்கடேஷ் அய்யர்
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 213 போட்டிகளில் டோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில்130 வெற்றி, 81 தோல்விகள் அடங்கும்.
    துபாய்:

    கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த எம்.எஸ்.டோனி நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

    நேற்று நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் எம்.எஸ்.டோனி 20 ஓவர்  கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
      
    இந்தியாவுக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து 41 வெற்றியைக் கொடுத்துள்ளார். இதில் தான் கேப்டன் பொறுப்பு வகித்த ஆரம்ப கட்டத்திலே இந்தியாவுக்கு முதல் இருபது ஓவர் உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த (2007) பெருமையும் அடங்கும்.

    இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டேரன் சமி டி20 போட்டிகளில் 208 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களை தொடர்ந்து இந்தியாவின் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் முறையே 170 மற்றும் 153 ஆட்டங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
    கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் ஷர்துல் தாக்குர் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

    முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் 32 ரன்கள், உத்தப்பா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    63 ரன் சேர்த்த டுபிளசிஸ், மொயீன் அலி ஜோடி

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ரன் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ரன்னில் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்தார்.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெசிஸ் முதலில் நிதானமாக ஆடினர். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. கெய்க்வாட் 32 ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.

    கெய்க்வாட்

    கொல்கத்தா பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ், 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய உத்தப்பா, தன் பங்கிற்கு 31 ரன்கள்  குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். 86 ரன்கள் குவித்த டூ பிளெசிஸ் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

    20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் குவித்தது. மொயீன் அலி 37 ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
    ஐபிஎல் லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

    சென்னை அணி: டூ பிளெசிஸ், கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, டோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹாசில்வுட்

    கொல்கத்தா அணி:  வெங்கடேஷ் அய்யர், சுப்மான் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (கேப்டன்),  தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, லோக்கி பெர்குசன்.

    லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் சென்னை அணியினர் களமிறங்கி உள்ளனர். 

    கொல்கத்தா அணியை பெருத்தவரை பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. எனவே, சென்னை அணிக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை முடிந்த பிறகே நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    20 ஓவர் போட்டிகள் நவம்பர் 17, 19 மற்றும் 21-ந் தேதிகளில் ஜெய்ப்பூர், ராஞ்சி, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் நவம்பர் 25-29 வரை கான்பூரிலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-7 மும்பையிலும் நடக்கிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ‌ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட், ஹர்‌ஷல் படேல், வெங்கடேஷ் அய்யர் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

    இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிகிறது. இதனால் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர் ஏற்கனவே இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு தலைவராகவும் உள்ளார். இலங்கை சென்ற இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் சமீபத்தில் பயிற்சியாளர் பொறுப்பை வகித்தார்.நியூசிலாந்து தொடருக்கு பிறகு அவர் முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்படலாம்.

    14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    துபாய்:

    14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.  துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு  7 மணிக்கு தொடங்குகிறது. லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது.

    கொல்கத்தா அணியை பெருத்தவரை பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. அந்த அணியின் சுனில் நரைன் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் எதிரணிகளுக்கு  சிம்ம சொப்பனமாய் விளங்கி வருகின்றனர்.  பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் அய்யர், சுப்மன் கில் ஆகியோரது பார்ம் அசுரபலமாக உள்ளது.

    சென்னை அணியை பொருத்தவரை பேட்டிங்கில் சிறப்பாக உள்ளது.  பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டூபிளசியின் அனுபவமும், ருதுராஜின் நேர்த்தியான ஆட்டங்களும் பெரும் பலமாக பார்க்கப்படுகின்றன. உத்தப்பா முக்கிய கட்டத்தில் பார்மிற்கு திரும்பியிருப்பதும், ராயுடு, மொயின் அலி ஆகியோரது பங்களிப்பும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.பந்து வீச்சில் ஹேசல் வுட், ஷர்தூல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பிராவோவின் மித வேகப்பந்துகள் இறுதி ஓவர்களுக்கு முக்கிய அஸ்திரமாக பார்க்கப்படுகிறது.

    டோனி  தலைமையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 9 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டி இது. கொல்கத்தா அணிக்கு இது ஐபிஎல்லில் 3 ஆவது இறுதிப்போட்டி. கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது ஒரு முறை கூட தோல்வியுற்றதில்லை. சென்னை அணி 3 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும்  கோப்பைகளை வென்றுள்ளன.
    டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா வரும் 24-ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
    துபாய்:

    டி20 உலக கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

    இதில், இந்தியா வரும் 24-ம் தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 18-ம் தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பையை நிச்சயம் வெல்வோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அமீரகத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விளையாடி வருகிறோம். அங்கு நிலவும் சீதோஷ்ண நிலைமை எங்களுக்கு அத்துப்படி. எனவே, நாங்கள் டி20 உலக கோப்பையை நிச்சயம் வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
    20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று கிறிஸ் கெய்ஸ் கூறியுள்ளார்.
    துபாய்:

    கிறிஸ் கெய்ல் சமீப காலமாக சரியாக ஆடவில்லை. அதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் ஆடும் லெவனில் அவரை சேர்ப்பதில் முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்லி அம்புரோஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
    இதனால் கோபமடைந்துள்ள அதிரடி வீரர் 42 வயதான கிறிஸ் கெய்ல், ‘ மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அம்புரோஸ் இவ்வாறு விமர்சிக்கிறாரா? என்பது தெரியவில்லை.

    அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. எப்போது அவரை பார்த்தாலும் எதிர்மறையாக பேசுவதை நிறுத்திவிட்டு அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறுவேன். மற்ற முன்னாள் வீரர்கள் தங்களது அணிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இதே போல் 20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது?’ என்றார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணி நாளை இறுதிப்போட்டியில் களம் காணுகிறது.
    துபாய்:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது டெல்லி கேப்பிட் டல்சை எதிர்கொள்கிறது.புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனி கடைசி ஓவரில் 3 பவுண்டரி விளாசியது, ரசிகர்களை பரவசப்படுத்தியது. அதே போன்று இறுதிப்போட்டியிலும் கலக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே தொற்றிக் கொண்டு விட்டது.

    சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (603 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (547 ரன்) பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்கிறார்கள். ருதுராஜ் இன்றைய ஆட்டத்தில் 24 ரன்கள் எடுத்தால் அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு நிற தொப்பியை லோகேஷ் ராகுலிடம் (626 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார். பவுலிங்கில் தீபக் சாஹரின் பந்து வீச்சு கொஞ்சம் பலவீனமாக தென்படுகிறது. கடந்த 5 ஆட்டங்களில் 2 விக்கெட் மட்டுமே எடுத்துள்ள அவர் தொடக்க கட்ட பவுலிங்கில் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.

    சென்னை அணி இந்த சீசனில் 2-வது பேட்டிங் செய்த ஆட்டங்களில் தோற்றதில்லை. 6 முறை வெற்றிகரமாக சேசிங் செய்திருக்கிறது. அதனால் டாஸ் ஜெயித்தால் 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நெருக்கடியை சாதுர்யமாக கையாளும் டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி 4-வது முறையாக (ஏற்கனவே 2010, 2011, 2018-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது) பட்டத்தை உச்சிமுகருமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    போட்டிக்கான பரிசுத்தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டு போன்றே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6¼ கோடியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடிக்க மாலத்தீவை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    மாலத்தீவில்  தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்விர் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக 45-வது நிமிடத்தில் மாலத்தீவு கோல் அடித்தது. இதனால் இந்தியா- மாலத்தீவு1-1 என சமநிலை பெற்றன.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் அபாரமாக விளையாடினார். அவர் 62 மற்றும் 71-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சுனில் சேத்ரி 124 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்தார்.
    ×