என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்தார்.
    மாலே:

    5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 

    இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 49-வது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தார். மொத்தத்தில் இது அவரது 80-வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை (80 கோல்) சமன் செய்தார். 

    சேத்ரியை தொடர்ந்து சுரேஷ் வாங்ஜாம் (50-வது நிமிடம்), சஹால் சமாத் (90-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர். 1993-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய அணி இந்த கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும்.
    உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
    துபாய்:

    இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற பேச்சு கிளம்பியதாலும் இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

    இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.

    முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

    சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வருகிற 24-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்த கொரோனா காலத்தில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இங்கு தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்திருப்பதால் இங்குள்ள சீதோஷ்ண நிலைமையும், மைதானத்தின் தன்மையும் பெரும்பாலான வீரர்களுக்கு இப்போது அத்துப்படி. ஆக, ஐ.பி.எல். அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு அனுகூலமாக அமையும்.

    2007-ம் ஆண்டு டோனி தலைமையில் உலக கோப்பைக்கு முத்தமிட்ட இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் படையெடுத்துள்ளது. டோனி ஓய்வு பெற்று விட்டாலும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், இஷான் கிஷன் என்று பேட்டிங் வரிசையில் அதிரடிக்கு குறைவில்லாத வீரர்கள் உள்ளனர். இதே போல் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாக்குர், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தலாம். இன்னும் தனது கேப்டன்ஷிப்பில் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் விராட் கோலிக்கு அந்த ஏக்கத்தை தணிக்க இது அருமையான சந்தர்ப்பமாகும். இந்த உலககோப்பையுடன் அவர் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவது நினைவு கூரத்தக்கது.

    ஆனால் இந்தியாவுக்கு, ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் சரவெடியாய் வெடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, இவின் லீவிஸ், ஆந்த்ரே ரஸ்செல், ஹெட்மயர், பூரன் என்று நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது அசுர பலமாகும். இதே போல் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் அவர்களும் அபாயகரமான அணி தான். அதனால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    20 ஓவர் கிரிக்கெட் என்றாலே ரன்வேட்டையைத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, ஜாசன் ராய் , லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து), விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா (இந்தியா), பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), டிவான் கான்வே, கப்தில் (நியூசிலாந்து) , குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா), கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) உள்ளிட்டோர் இந்த உலக கோப்பையில் கவனிக்கத்தக்க வீரர்களாக வலம் வருகின்றனர். முன்னணி அணிகள் போட்டிக்கு முன்பாக தங்களை மேலும் பட்டை தீட்டிக் கொள்ள சில பயிற்சி ஆட்டங்களிலும் விளையாட உள்ளன.

    உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி, கைல் கோட்ஸிர் தலைமையிலான ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது சென்னை அணியின் டுபிளெசிசுக்கும், தொடர் நாயகன் விருது பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேலுக்கும் வழங்கப்பட்டது.
    துபாய்:

    துபாயில் நடந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    வெற்றி பெற்ற சென்னை அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூ.12.50 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

    மொத்தம் 635 ரன்கள் சேர்த்து ரன் குவிப்பில் முதலிடம் பிடித்த சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தியதுடன் ரூ.10 லட்சம் பரிசையும் பெற்றார்.

    எம்.எஸ்.டோனி

    பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.டோனி, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடுவது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவில் தான் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எது சிறந்ததாக இருக்குமோ அந்த முடிவை எடுப்போம். நான் இன்னும் சென்னை அணியில் தான் நீடிக்கிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், சாம்பியன் பட்டம் பெற்றதற்கான வெற்றி கொண்டாட்டம் எப்போது? என்பதற்கு சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சென்னை அணியின் கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் கிடையாது. தற்போது டோனி 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆலோசகராக இந்திய அணியுடன் இணைந்து விட்டார். எனவே உலக கோப்பை முடிந்து டோனி இந்தியா திரும்பிய பிறகு சிறிய அளவிலான கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வோம். அவரது வருகைக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்போம் என குறிப்பிட்டார்.

    இந்திய அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17-ல் தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 

    20 ஓவர் உலக கோப்பை  தொடரில் இந்தியாவின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.டோனி  இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது .

    2007-ம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் எம்.எஸ்.டோனி.  

    இந்நிலையில், எம்.எஸ்.டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும்  என தெரிவித்துள்ளார்.

    நவம்பர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
    மஸ்கட்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி நாளை தொடங்கி நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி மோதும் ஆட்டங்கள் வருமாறு:-

    அக்டோபர் 24: பாகிஸ்தானுடன் மோதல் (இரவு 7.30)

    அக்டோபர் 31: நியூசிலாந்துடன் மோதல் (இரவு 7.30)

    நவம்பர் 3: ஆப்கானிஸ்தானுடன் மோதல் (இரவு 7.30)

    நவம்பர் 5: தகுதி சுற்று அணியுடன் மோதல் (இரவு 7.30)

    நவம்பர் 8: தகுதி சுற்று அணியுடன் மோதல் (இரவு 7.30)

    20 ஓவர் உலக கோப்பையில் ஆடும் இந்தியா அணி வருமாறு:-

    வீராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரி‌ஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், ‌ஷர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ‌ஷமி, இஷான் கி‌ஷன்.
    20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எதிர் கொள்கிறது.
    மஸ்கட்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் உலக கோப்பையை கைப்பற்றியது.

    இதுவரை 20 ஓவர் உலக கோப்பை போட்டி 6 முறை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் 2 தடவை (2012, 2016) சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை கோப்பையை வென்று உள்ளன.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடத்துகிறது.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி நாளை (17-ந் தேதி) தொடங்குகிறது. நவம்பர் 14 வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாடும்.

    இலங்கை, வங்காள தேசம் உள்ளிட்ட 8 நாடுகள் தகுதி சுற்றில் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

    தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.

    தொடக்க நாளான நாளை 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பி பிரிவில் உள்ள ஓமன் -பப்புவா நியூகினியா (மாலை 3.30), வங்காளதேசம்- ஸ்காட்லாந்து (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

    18-ந் தேதி நடைபெறும் ஆட்டங்களில் அயர்லாந்து- நெதர்லாந்து, இலங்கை- நமீபியா மோதுகின்றன. வருகிற 22-ந் தேதியுடன் தகுதி சுற்றான முதல் ரவுண்டு முடிகிறது. 2-வது ரவுண்டான சூப்பர் 12 சுற்று வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி குரூப்-2ல் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் (பி1, ஏ2) அந்த பிரிவில் இடம்பெறும்.

    குரூப் 1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் (ஏ1, பி2) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் துபாயில் இந்திய நேரபடி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டம் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நவம்பர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். 10 மற்றும் 11-ந் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்கள் அபுதாபி மற்றும் துபாயில் நடக்கிறது.

    இறுதிப்போட்டி நவம்பர் 14-ந் தேதி துபாயில் நடக்கிறது. மொத்தம் 45 ஆட்டங்கள் ஓமனில் உள்ள மஸ்கட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஏற்கனவே வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அவி பரோட் தலைமையில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது.

    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அவி பரோட். 29 வயதான அவர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் 20 ஓவர் உலக கோப்பையுடன் முடிகிறது.

    20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    ஐ.பி.எல். இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. இந்த போட்டிக்கு பிறகு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் ராகுல் டிராவிட்டை சந்தித்தனர். அப்போது அவர் பயிற்சியாளராக இருக்க ஒப்புக்கொண்டார்.

    ராகுல் டிராவிட் - பிராஸ் மாம்ரே

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ராகுல் டிராவிட் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராவது உறுதியாகி விட்டது. அவர் விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்றார்.

    ராகுல் டிராவிட் 2023 வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். பந்துவீச்சு பயிற்சியாளராக பிராஸ் மாம்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

    டிராவிட் ஏற்கனவே இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

    நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம் எனவும் சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் எனவும் டோனி தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

    இந்த வெற்றிக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்து விட் டேன். அடுத்த ஆண்டு சீசனுக்கு இரு அணிகள் புதியதாக வருகின்றன. எனவே சி.எஸ்.கே. அணிக்கு எது சிறந்ததாக முடிகிறதோ அந்த முடிவை எடுப்போம். எந்த காரணத்தினாலும், நிர்வாகம் பாதிக்கப்படக் கூடாது.

    தக்க வைக்கப்படும் வீரர்களில் நான் இருப்பேனா என்று தெரியாது. வலிமையான வீரர்களை கொண்ட அணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்யக்கூடிய வலிமையான அணியை உருவாக்க வேண்டும்.

    அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் நான் விளையாடுவது என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எது சிறந்ததோ அந்த முடிவை எடுப்போம். அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார்கள். அதே நேரத்தில் கோப்பையை வெல்ல நாங்கள் தகுதியானவர்கள். நாங்கள் வீரர்களை மாற்றி அமைத்தோம். சில போட்டிகளின் வெற்றிக்கு பின் மேட்ச் வின்னர்கள் கிடைத்தார்கள்.

    ஒவ்வொரு இறுதிப்போட்டியும் சிறப்பானது. புள்ளி விவரங்களை பார்த்தால் நாங்கள் இறுதிப் போட்டியில் பலமுறை கோட்டையை விட்டுள்ளோம். அதற்காக நாங்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை. பயிற்சியின்போது என்ன பேசுகிறோமோ அதுவே எங்களின் மீட்டிங்காக இருந்தது.

    எங்களின் பயிற்சிகள் சிறப்பாகவே இருந்துள்ளன. நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    தென் ஆப்பிரிக்காவில் விளையாடியபோதும் சி.எஸ்.கே. ரசிகர்கள் திரண்டுவந்து ஆதரவு தெரிவித்தார்கள். அனைவருக்கும் நன்றி.

    நாங்கள் துபாயில் விளையாடினாலும், சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனிக்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. 40 வயதாகும் எம்.எஸ். டோனி கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி சாக்‌ஷி என்பரை திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். டோனி- சாக்‌ஷி தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜிவா எனப் பெயர் சூட்டியிருந்தார்.

    நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை எம்.எஸ். டோனியின் மனைவி மகள், சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா மற்றும் குழந்தைகள் கொண்டாடினர்.

    எம்.எஸ். டோனி, ரெய்னா குடும்பம்

    இந்த நிலையில்  டோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளார். விரைவில் ஜிவாவுக்கு சகோதரி அல்லது சகோதரன் வரப்போகிறான் என்ற செய்தியை பிரியங்கா ரெய்னா உறுதிப்படுத்தியதாக இணைய தளங்களில் செய்திகள் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.
    14வது ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் டுபிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
    துபாய்:

    ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அவர் கூறியதாவது:

    நான் இன்னும் நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை.

    தென் ஆப்பிரிக்கா, துபாய் என எங்கு விளையாடினாலும் ஆதரவு கொடுத்து வரும் சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி.

    அடுத்த ஆண்டு சென்னையில் மீண்டும் ரசிகர்கள் முன் விளையாடுவோம் என உற்சாகமாக தெரிவித்தார்.
    ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்த ருதுராஜ் கெயிக்வாட் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
    துபாய்:

    ஐபிஎல் 14-வது சீசனில் தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. 

    இந்த லீக் ஆட்டங்களில் அதிக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.
     
    அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராக் கெயிக்வாட் 16 போட்டிகளில் ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

    15 போட்டிகளில் 32 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படேல் பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

    ஹர்ஷல் படேல்

    மேலும் விருது பெற்றவர்கள்:

    வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) - ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே)

    ஃபேர் பிளே விருது - ராஜஸ்தான் ராயல்ஸ் 

    சிறந்த கேட்ச் விருது - ரவி பிஷ்னோய்  
    ×