என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.எஸ்.டோனி இந்திய அணி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - விராட் கோலி
Byமாலை மலர்16 Oct 2021 7:34 PM GMT (Updated: 16 Oct 2021 7:34 PM GMT)
இந்திய அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17-ல் தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.
20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.டோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது .
2007-ம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக ஜொலித்தவர் எம்.எஸ்.டோனி.
இந்நிலையில், எம்.எஸ்.டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மோதும் ஆட்டங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X