என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காலாப்பட்டில் லாரி மோதியதில் மீன் வியாபாரி தலை நசுங்கி பலியானார்.
    புதுச்சேரி: 

    புதுவை சின்ன காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது27). இவர் மொத்தமாக மீன் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு மீன் விற்கும் தொழில் செய்துவந்தார்.  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தமிழரசனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் தமிழரசன் சின்ன காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடை அருகே ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்ததால் அந்த மறை விடத்தில் தமிழரசன் சிறுநீர் கழிக்க சென்றார்.

    அப்போது   தமிழரசன் நிற்பதை கவனிக்காமல் டிரைவர் திடீரென லாரியை ஓட்டினார். இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி தமிழரசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.  இதனை பார்த்ததும் லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்று விட்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தமிழரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தமிழரசன் மீது மோதிய லாரி மற்றும் அதன் டிரைவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    வில்லியனூரில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பி சென்றவர்களை விரட்டி சென்ற ‘பங்க்’ ஊழியரின் மோட்டார் சைக்கிள் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சுல்தான்பேட்டையில் கூட்டுறவு துறைக்கு   சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. அங்கு சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த பெட்ரோல் பங்குக்கு 2 மோட்டார்  சைக்கிள்களில் 3 பேர் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் நிரப்புமாறு ராஜ்குமாரிடம் கூறினர். 

    ராஜ்குமாரும் 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் பெட்ரோல்   நிரப்பினார். ஆனால், திடீரென அவர்கள் பணம் தராமல் அங்கிருந்து சென்றனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் பணம் தராமல் சென்றவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார்.வில்லியனூர் நோக்கி  3 கிலோ மீட்டர்  தூரம் விரட்டிச் சென்ற ராஜ்குமார்  வில்லியனூர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது அவர்களை  தடுத்து நிறுத்தினார்.

    அப்போது அவர்கள் ராஜ்குமாரை தாக்கிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    மேலும் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு   இருந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபர்களை தேடிவருகிறார்கள்.
    திருக்கனூர் அருகே கணவன் கண் எதிரே பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் செயினை பறித்து சென்றார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் புதுநகர் கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி பிரேமா (34).  இவர்கள்  செஞ்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை முடித்து விட்டு தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர். 

    திருக்கனூர் அருகே தமிழக பகுதியான பக்கிரிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த  போது, ஹெல்மெட்  அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்தார்.  உடனே பிரேமா சுதாரித்துக்கொண்டு 
    செயினை இருக்கமாக  பிடித்தார். ஆனாலும்,  3 பவுன் செயின்  திருடன் கையில் சிக்கிக் கொண்டது. மீதி 3 பவுன் செயின் மட்டுமே தப்பியது.

    இதையடுத்து அந்த மர்ம நபரை கருணாகரன் பிடிக்க முயன்ற போது அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டான். இந்த சம்பவத்தில்  நிலை தடுமாறி கீழே விழுந்த பிரேமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து பிரேமாவை அவரது கணவர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் இதுகுறித்து கருணாகரன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் உயிரிழந்தார். சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிர்தப்பினர்.
    காரைக்கால்:

    திருக்கனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று காலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதியம் 1 மணியளவில் மீண்டும் புதுச்சேரி புறப்பட்டனர். காரை ராஜமூர்த்தியின் மகன் முருகசாமி (35) ஓட்டினார். காரைக்கால் எல்லையான பூவம் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராஜமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் பயணம் செய்த ராஜமூர்த்தி மனைவி பச்சையம்மாள் (57), மகன் முருகசாமி (35), முருகசாமியின் மனைவி சுகன்யா (25), குழந்தைகள் விசுவநாதன் (12), சுபத்திரா (10), விஜயபாஸ்கரன் (5), சர்வேஸ்வரன் (4) ஆகிய 7 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.

    படுகாயமடைந்த ராஜமூர்த்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜமூர்த்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை கடற்கரை சாலையில் போர்வீரர் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் அருகே போர்வீரர் நினைவிடம் உள்ளது. இங்கு போர்வீரர் நினைவு தூண்கள் அமைக்கப்பட்டு நடுவில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி இருக்கும். அந்த துப்பாக்கியின் மேல் ஹெல்மெட் ஒன்று மாட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை இந்த ஹெல்மெட் மாயமாகி இருந்தது.இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நினைவு தூணில் இருந்த ஹெல்மேட்டை மர்ம ஆசாமிகள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஹெல்மெட்டை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். தற்போதும் அதேபோல் மீண்டும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தலைமை செயலகத்தில் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படியிருக்க அதன் எதிரேயே திருட்டு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரியில் அசுர வேகத்தில் கொரோனா பரவுவதால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதேநேரத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 19-ந்தேதி முதல் திருப்புதல் தேர்வும் தொடங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் வருகிற 31-ந்தேதி வரை 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 19-ந்தேதி தொடங்க உள்ள திருப்புதல் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி பாடத்திட்டத்தை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டமே பின்பற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி புதுவையிலும் கொரோனா தொற்று பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

    இதற்கிடையே மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பெற்றோரிடம் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இதற் கிடையே ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

    இந்தநிலையில் புதுவையில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுமா? என்று கல்வித்துறை பொறுப்பு வைக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 40 சதவீத மாணவர்கள் தடுப்பூசி போடவில்லை.

    பள்ளிகள் நடந்தால் தான் அவர்களுக்கு தடுப்பூசி போட முடியும். எனவே நேரடி வகுப்புகளை ரத்து செய்வது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
    புதுவையில் காணும் பொங்கல் களையிழந்தது. வழக்கமாக காலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம், ஊசுடு படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கூடுவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையில் காணும் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும்.

    புதுவை மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு காணும் பொங்கலன்று மக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருவர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை கிடைப்பதால் தென் மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு புதுவைக்கு வருவர்.

    சமீபகாலமாக உருமாறிய கொரோனா ஒமைக்ரான் தொற்று பரவலால் புத்தாண்டுக்கு பிறகு புதுவை யில் சுற்றுலா பயணிகளின் வருகை வார இறுதி நாட்களில் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த வாரமே ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    இதனால் மாநில எல்லைகளில் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் தமிழகத்திலிருந்து வருவோர் எண்ணிக்கை குறைந்தது.

    காணும் பொங்கலான இன்றும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தின் எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கனகசெட்டிகுளத்தில் தமிழக போலீசார் புதுவையிலிருந்து தமிழகத்துக்குள் செல்ல முயன்றவர்களை தடுப்பு அமைத்து தடுத்தனர்.

    தமிழகத்திலிருந்து புதுவைக்கு வந்தவர்களையும் புதுவை போலீசார் தடுத்தனர். மருத்துவம், அத்தியாவசிய காரணங்களுக்கு ஆதாரங்களுடன் வந்தவர்கள், 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தமிழக எல்லைக்குள் நுழைந்தே புதுவைக்குள் வர முடியும் என்பதால் அவர்களும் வரவில்லை. ஏற்கனவே, வெள்ளிக்கிழமையே வந்த சுற்றுலா பயணிகள் நேற்று இரவே சொந்த மாநிலத்துக்கு திரும்பி விட்டனர்.

    இதனால் புதுவையில் காணும் பொங்கல் களையிழந்தது. வழக்கமாக காலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம், ஊசுடு படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கூடுவார்கள்.

    ஆனால் இன்று சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்திலிருந்து புதுவைக்கும், புதுவையிலிருந்து தமிழகத்துக்கும் பஸ்கள் இயக்கப் படாததால் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் பிரதானசாலைகளை கைவிட்டு சில கிராமப்புற சாலைகள் வழியாக புதுவை எல்லைகளில் உள்ள மதுபான கடைகளுக்கு வந்து தமிழக பிரியர்கள் மது அருந்திச்சென்றனர்.

    அதேநேரத்தில் புதுவை மக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை வழக்கம் போல் வீடு தேடி சென்று சந்தித்து பொங்கல் பரிசு பெற்றனர்.

    மாலையில் கடற்கரை சாலை, பாண்டி மெரீனா, வீராம்பட்டினம் கடற்கரையில் புதுவை மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்பதிவு செய்தால் மட்டுமே புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:  
    புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் கடந்த 3 வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஆலோசனைக்கு  வருவோருக்கு  இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

    எனவே ஜிப்மரில் கொரோனா தொற்று அபாயத்தை குறைக்க வருகிற 18-ந் தேதி  முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    ஜிப்மர் டாக்டரிடம் ஆலோசனை பெற  விரும்பும்   நோயாளிகள், ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப் பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய  வேண்டும். 19-ந் தேதி முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் மட்டுமே நேரடி வருகைக்கு அனுமதிக்கப்படுவர். 
     
    வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஆலோசனைகள் வழங்கப்படும். ஒவ்வொரு துறையும் முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே  செயல்படும்.  சமூகத்திலும், ஆஸ்பத் திரியிலும் கொரோனா பரவும் அபாயத்தை குறைக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு  வருவோருக்கு முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படும். 

    அனைத்து நோயாளிகள், உதவியாளர்கள் முக கவசம் அணிதல், முன்பதிவு  செய்தல், ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர், தொலைபேசி மருத்துவ ஆலோனைகளை பின்பற்ற  வேண்டும்.  நோயாளிகளும்,  உதவி யாளர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவர். அனைத்து அவசர மருத்துவ, அறுவை சிகிச்சை பிரிவுகளும் வழக்கம்போல் இயங்கும். 

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பாண்டி மெரினா கடற்கரையில் செல்பி பாயிண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி: 

    புதுவை வம்பா கீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே  கடற்கரை மணல் பரப்பில் பாண்டி மெரினா பீச் 2019-ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. 

    அங்கு அழகிய பிரெஞ்சு கால கட்டிடக்கலை நயத்துடன் வணிக வளாகம்  கட்டப்பட்டது. அங்கு பல்வேறு விதமான  உணவு அரங்குகள், சுற்றுலா குடில்கள் அமைக் கப்பட்டுள்ளது. இங்கு பயணிகள் கடற்கரையின் அழகை ரசித்துக் கொண்டே உணவருந்த  பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளது. 

    குழந்தைகளை மகிழ்விக்க ரெயில், பவுன்சிங் கேசில் விளையாட்டு சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத னால் இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின்  கூட்டம் அலைமோதுகிறது. 

    இங்கு வரும் பயணி களை கவர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தும் பணி தொடங்கியது. இதற்காக  செல்பி பாயிண்டுகள் உரு வாக்கப்பட்டு வருகிறது. இங்கு அழகிய கண்கவர் ஓவியங்கள்   தீட்டப்பட்டு வருகிறது. ஓவியர் ரவி தலைமையிலான  குழுவினர் இயற்கை  காட்சிகள், பறவைகள்,  புதுவையின் சிறப்புகளை உள்ளடக்கிய கண்கவர் ஓவியங்களை தீட்டி வருகின்றனர்.
    புதுவையில் 17-ந்தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப் படுத்தும் நோக்கில்  16-ந்தேதி 
    முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ள ஊழியர்கள், மாணவர்கள்  மீண்டும்  திரும்ப ஏற்படும் சிரமத்தையும்,  ஒரே நேரத்தில் பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் மக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை உருவாகி தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை  கருத்தில் கொண்டு தமிழக அரசு 17-ந்தேதி, 18-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

    ஆனால், புதுவையில் அதுபோல் விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஊழியர்கள், மாண வர்கள் தமிழக பஸ்கள் இன்று இயக்கப்படாததால் பொங்கல்  கொண்டாட தங்கள் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் புதுவை திரும்ப முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். 

    எனவே, 17-ந்தேதி  புதுவையில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும், இந்த விடுமுறையை வருகிற சனிக்கிழமை அன்று  வேலை நாட்களாக அறிவித்து ஈடு செய்யலாம்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
    மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி: 

    இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்தார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, புதுவை கவர்னர் தமிழிசை கடந்த 9-ந் தேதி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை சிறையில் உள்ள தமிழகம், காரைக்கால் மீனவர்களை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

    பிரதமர் மோடி வழி காட்டுதலின்படி, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  இதையடுத்து இந்திய மீனவர்களின் விடு தலைக்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு கவர்னர் தமிழிசை நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் கொரோனாவுக்கு இளைஞர் பலியானார்.
    புதுச்சேரி: 

    புதுவை மாநிலத்தில் நேற்று 2657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் 1160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 974 பேர், காரைக்காலில் 129 பேர், ஏனாமில் 17 பேர், மாகியில் 40 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

    தற்போது மருத்துவமனைகளில் 133 பேர், வீட்டு தனிமையில் 7469 பேர் என ஒட்டுமொத்தமாக 7602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  உள்ளனர். இன்று 142 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 31 வயது வாலிபர் உயிரிழந்தார். கொரோனாவின் 2-வது அலையில் நடுத்தர வயதுடைய பலர் உயிரிழந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக உயிரிழப்பு வெகுவாக குறைந்திருந்தது. உயிரிழந்தவர்களும் 65 வயதிற்கு மேற்பட்டவர் களாகவே இருந்தனர். 

    இந்த நிலையில் புத்தாண்டிற்கு பிறகு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். இன்று 31 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளது குறிப்பித்தக்கது.

    புதுவையில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 710 பேருக்கு   கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில 1 லட்சத்து 28 ஆயிரத்து 21 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1887 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
    ×