search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jipmer"

    • முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம்.
    • சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வீடு, கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவில் அருகில் அமைந்துள்ளது. கோவிலில் தினசரி அன்னதானமும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று வாழையிலை போட்டு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம், சுற்றுவட்டார பகுதி ஆதரவற்றவர்கள், ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தினர் பயன்பெறுகின்றனர்.

    மேலும், தினமும் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம். அவர்களுக்கு தேவையான பண உதவிகள் செய்வதை முதலமைச்சர் ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சம்காஷி என்ற பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் கோரிமேடு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    தினமும் அவர் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதம் வீட்டு வாடகை கொடுத்து வந்த இவர் 3-வது மாதத்துக்கு வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

    முதலமைச்சர் ரங்கசாமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வெளிமாநில நோயாளிகளுக்கு பண உதவி செய்வதை மேற்கு வங்க பெண் சம்காஷி கேள்விப்பட்டார். இதையடுத்து சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.

    உடனே முதலமைச்சர் ரங்கசாமி அந்த பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி செய்து உடல் நலம் பெற ஆசி வழங்கினார். இதனை அந்த பெண் வீடியோவில் பதிவிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

    புதுச்சேரி:

    ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலவழி மையம் உள்ளது.

    இங்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் மண்ணாடிப்பட்டு எல்லைக் காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.


    இதில் ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் சிறியரக ட்ரோன் விமானத்தில் அவசரக்கால சிகிச்சைக்கான மருந்துகளை வைத்து அரை மணி நேரத்திற்கு பறக்க வைத்து சோதனை செய்தனர்.

    ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜ்குமார் சித்தரியா, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி மணிமொழி உள்ளிட்டோர் சோதனையை பார்வையிட்டனர். கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.

    • அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
    • காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியின் 5-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    படிப்பில்லாத மாணவர்கள் தீய வழியில் செல்கின்றனர். படிப்பு இருந்தால் மட்டுமே மாணவர்கள் நல்ல வழியில் செல்ல முடியும். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுவதால் கல்வியில் புதுவை மாநிலம் சிறந்து விளங்குகின்றது.

    தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிக்க விரும்பினால் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

    காரைக்காலில் ரூ.410 கோடியில் ஜிப்மர் கிளை கல்லூரிரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.460 கோடியில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இன்னும் 2 ஆண்டுகளில் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரிக்கு போதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். மாணவர்கள் தொழில்முறை படிப்புகளில் கவனம் செலுத்தி நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    காரைக்கால் வேளாண் கல்லூரியில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளில் பணிபுரிந்து வருவது பெருமைக்குரியது. அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    நான் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த போது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதற்காக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். அங்கு சென்று மேடையில் ஏறி பட்டம் பெற ஷூ, பட்டமளிப்பு கவுன், தொப்பி ஆகியவற்றை வாங்கி பட்டம் பெற்றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அரை நாள் விடுமுறை அறிவித்தது.
    • மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளன.

    இதற்கிடையே, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாளை மதியம் 2.30 மணிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனம் எழுந்தது.

    இதையடுத்து, நாளை அறிவிக்கப்பட்டிருந்த அரைநாள் விடுப்பை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றது. மருத்துவமனை நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது.

    இதேபோல், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அரைநாள் மூடப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், இந்த பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நடைபெறும் என மருத்துவமனை தரப்பில் கோர்ட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

    ஜிப்மரில் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • முன்னாள் எம்.பி அறிவுறுத்தல்
    • மத்திய நிறுவனத்தை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கக் கூடாது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     ஜிப்மரின் பணிகளை ஆய்வு செய்ய நடந்த கூட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள நியாயத்தை உணர்ந்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஜிப்மரை மக்களுக்கு உதவும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இந்தியாவின் 5 சிறந்த மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான ஜிப்மரின் புகழுக்கு களங்கம் விளை விக்கும் வகையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. ஜிப்மர் தன்னாட்சி பெற்ற நிறுவனம். அதனை நிர்வகிக்க நிர்வாகக் குழு, செயற்குழு இருக்கிறது. அதில் புதுவை எம்.பி, தலைமை செயலர் உறுப்பினர்களாக உள்ளனர். பரிந்துரைத்த விதிகள் தவறாக இருந்தால் அக்குழு தான் நீக்க வேண்டும்.

    மாநில அரசு தனக்குத் தானே ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அதன் ஆலோசனைகளை ஜிப்மர் நிர்வாக குழுவிடம் எழுத்து மூலம் கூறி குறைகளை களைந்து மக்களுக்கு நல்லது செய்யலாம். பாராளு மன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மத்திய நிறுவனத்தை ஆய்வு கூட்டம் என்ற பெயரில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கக் கூடாது. ஜிப்மர் மருத்துவமனை மட்டும் அல்ல அது உயர்ந்த கல்வி போதிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும் சமூக சேவைக்காக பாடுபடும் ஒரு தரமான தலைசிறந்த நிறுவனம் ஆகும். அதன் புகழைக் கட்டிக்காப்பது புதுவையின் புகழைக்காப்பதற்கு சமமாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவையில் பல் மருத்துவ கல்லூரியை நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு முயற்சிக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமை தாங்கி கொடியேற்றி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக ஒதியன்சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலை, 100 அடி சாலையில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஓம் சக்தி சேகர் கூறியதாவது:-

    புதுவையில் தி.மு.க.வின் துணையோடு ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்ற வில்லை. நாள் தோறும் கவர்னர் மீது குற்றம் சுமத்தி வரும் அரசியல் செய்து வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும் தினந்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், மக்கள் வீதியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே உடனடியாக உள்துறை அமைச்சகம் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுவையில் பல் மருத்துவ கல்லூரியை நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு கோரிக்கை வைத்துள்ளது.

    அரசு பல் மருத்துவ கல்லூரியை புதுவை அரசு நடத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, அரசு ஊழியர்களுக்கு சம்பள பற்றாக்குறை, அடிப்படை திட்டங்களை கூட நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களில் அரசு தவித்து வருகிறது.

    மாநில இணை செயலாளர் பேராசிரியர் ராமதாஸ், மாநில துணை செயலாளர் கோவிந்தம்மாள், மாநில மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, ஊசுடு செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வெரோனிக்கா, நந்தன், பழனி, ஞானபூங்கோதை, தொகுதி செயலாளர்கள் மணி, மணவாளன், சக்கரவர்த்தி, கணேசன், சுபதேவ் சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் சதா, சேகர், மாநில பிற அணி விக்னேஷ் கவிநாதன், மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஜிப்மர் கலந்தாய்வு தொடங்குகிறது. #Jipmer
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150, காரைக்கால் ஜப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

    ஜிப்மர் எம்.பி.பி.எஸ். இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு, கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் தேர்வினை எழுதினர்.

    புதுவையில் 1,795 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜிப்மர் இணையதளத்தில் www.jipmer.puducherry.gov.in வெளியிடப்பட்டது.

    அகில இந்திய ஒதுக்கீட்டில், மாணவர் அன்கடலா அனிரூத் பாபு 99.9987799 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் அகில்தம்பி 99.9986570 மதிப்பெண் எடுத்து 2-ம் இடமும், பிரிராக்திரிபாதி 99.9975598 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    அகில இந்திய பொது பிரிவு, மாற்றுத்திறனாளி, புதுவை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வரும் 26-ந்தேதி, புதுவை நிர்வாக பிரிவு கட்டிடத்தில் காலை 8 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

    அகில இந்திய ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 27-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    புதுவை பொதுபிரிவு ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ. அல்லது ஓ.சி.ஐ. மாணவர் களுக்கு 28-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது.

    ஜிப்மர் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களுடைய மதிப்பெண் பற்றிய விபரங்களை www.jipmer.puducherry.gov.in அல்லது www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 11 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். #Jipmer
    ×