என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை- மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு
Byமாலை மலர்16 Jan 2022 7:43 AM GMT (Updated: 16 Jan 2022 7:43 AM GMT)
மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மந்திரிக்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, புதுவை கவர்னர் தமிழிசை கடந்த 9-ந் தேதி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை சிறையில் உள்ள தமிழகம், காரைக்கால் மீனவர்களை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பிரதமர் மோடி வழி காட்டுதலின்படி, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து இந்திய மீனவர்களின் விடு தலைக்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு கவர்னர் தமிழிசை நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X