என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையோர மரத்தில் கார் மோதியதில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் பலி
Byமாலை மலர்17 Jan 2022 3:32 AM GMT (Updated: 17 Jan 2022 3:32 AM GMT)
சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் உயிரிழந்தார். சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிர்தப்பினர்.
காரைக்கால்:
திருக்கனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று காலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதியம் 1 மணியளவில் மீண்டும் புதுச்சேரி புறப்பட்டனர். காரை ராஜமூர்த்தியின் மகன் முருகசாமி (35) ஓட்டினார். காரைக்கால் எல்லையான பூவம் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராஜமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் பயணம் செய்த ராஜமூர்த்தி மனைவி பச்சையம்மாள் (57), மகன் முருகசாமி (35), முருகசாமியின் மனைவி சுகன்யா (25), குழந்தைகள் விசுவநாதன் (12), சுபத்திரா (10), விஜயபாஸ்கரன் (5), சர்வேஸ்வரன் (4) ஆகிய 7 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
படுகாயமடைந்த ராஜமூர்த்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜமூர்த்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமூர்த்தி (வயது 70). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று காலை திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதியம் 1 மணியளவில் மீண்டும் புதுச்சேரி புறப்பட்டனர். காரை ராஜமூர்த்தியின் மகன் முருகசாமி (35) ஓட்டினார். காரைக்கால் எல்லையான பூவம் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராஜமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காரில் பயணம் செய்த ராஜமூர்த்தி மனைவி பச்சையம்மாள் (57), மகன் முருகசாமி (35), முருகசாமியின் மனைவி சுகன்யா (25), குழந்தைகள் விசுவநாதன் (12), சுபத்திரா (10), விஜயபாஸ்கரன் (5), சர்வேஸ்வரன் (4) ஆகிய 7 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
படுகாயமடைந்த ராஜமூர்த்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜமூர்த்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X