search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி கடற்கரை சாலை"

    • மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.
    • கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவையில் ஆண்டுதோறும் பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடைபெற்று வந்தது.

    பின்னர் கொரோனா காலத்தில் கண்காட்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் பாரம்பரிய கார் கண்காட்சி புதுவை கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்தது.

    கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயல், நாட்டிலே தனித்துவமான பழமையான ஒரே போர்டு பேன்சி, ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ், செவர்லெட், போர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற கார் நிறுவனங்களின் 36 கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.

    அதேபோல் முந்தைய கால 10 மோட்டார் சைக்கிள்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு காரிலும் அந்தந்த கார்களின் உரிமையாளர், தயாரிக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

    கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பழமையான கார்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    மேலும், அந்த கார்கள் முன்பு நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த கார்கள் அனைத்தும் இன்று காலை புதுவையில் இருந்து புறப்பட்டு சென்றன.

    ×