என் மலர்
புதுச்சேரி
- மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- ஜூன் மாதம் இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் அமைப்பின் நிர்வாக கமிட்டி ஒருங்கிணைப்பாளர், கன்வீனர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அறிவிக்க வேண்டும். மேலும் சென்டாக் கலந்தாய்வுக்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஆவன செய்யவேண்டும்.
ஜூலை மாதம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும்.
அதே போல் ஜூன் மாதம் இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 550 இடங்களில் 50 சதவீத இடங்களான 275 எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டராவதே லட்சியம் மாணவி சத்தியா ஸ்ரீ பேட்டி
- பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் மாணவி சத்தியாஸ்ரீ 10 வகுப்பு பொதுத் தேர்வில், 500-க்கு 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். திருவாண்டார்கோவில் ஸ்ரீ நவதுர்கா மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் படித்து வரும் இந்த மாணவி தற்போது புதுவை மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவிக்கு கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் நன்றாக படித்து மேற்கல்வி தொடர வேண்டுமென அமைச்சர் நமச்சிவாயம் மாணவியை கேட்டுக்கொண்டார். இந்த வெற்றி குறித்து மாணவி சத்தியஸ்ரீ கூறியதாவது:-
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிப்பின் மீது அதிக நாட்டம் கொண்டு படித்து வருகிறேன். எனது அப்பா குமார், அம்மா லட்சுமிதேவி ஆகியோர் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்து வருகிறார்கள். எனது அக்கா காவியா புதுச்சேரி மதர் தெரேசா கல்லூரியில் பி.எஸ்.சி எம்.எல்.டி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். எனது தம்பி நிரஞ்சன் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என எனது பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர். அதனால் இரவு பகல் பாராமல் ஆசிரியர்களுடைய வழிகாட்டுதல்படி நன்கு படித்து இந்த பொது தேர்வினை எழுதினேன். மாநில அளவில் எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் இந்த மதிப்பெண்கள் பெற பள்ளியின் துணை முதல்வர் விவேக் நடராஜன் மற்றும் பள்ளிக்கல்வி குழுவின் தலைவர் சத்யா நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு கொடுத்த ஊக்குவிப்புதான் காரணம். கலெக்டர் ஆவதே எனது லட்சியமாகக் கொண்டுள்ளேன். எனது குடும்பத்தாரையும், என்னை சார்ந்தவர்களையும் வறுமையில் இருந்து மீட்டெடுத்து அவர்களை மேம்படுத்த நான் தொடர்ந்து படிப்பேன். கிராமப்புறங்களில் என்னை போன்ற ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் நான் செயல்படுவேன் என்றார்.
- பா.ஜனதா வலியுறுத்தல்
- கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்து அதில் தோல்வியடைந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றியடைய கல்வித் துறை மீண்டும் தேர்வுகள் நடத்துகிறது.
ஆனால் ஆசிரியர்கள் வழிகாட்டு தலின்றி மாணவர்களால் தேர்வு எழுதி வெற்றி அடைவது என்பது மிகவும் கடினம். எனவே அரசு பள்ளியில் ேதால்வி அடைந்த மாணவர்கள் தேர்வு எழுத தயாராக தனியார் கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கட்டணத்தை செலுத்த முடியாத பல மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே புதுவை அரசு தோல்வி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அதே பள்ளியில் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
- முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.
தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.
மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.
அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார்.
கவர்னர் தமிழிசை டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை புதுவை, காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும். கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசு பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசு பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும் குறைந்துள்ளது. புதுவை, காரைக்காலில் மொத்தம் 287 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
இதில் புதுவையில் 84, காரைக்காலில் 7 என மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 107. இதில் புதுவையில் 7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணிதத்தில் 61, அறிவியலில் 49, சமூக அறிவியலில் 19 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ், கல்வித்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பிரியதர்ஷினி, துணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது.
- கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி:
காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் பரிசளித்து பாராட்டினார். காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 21-ந் தேதி வரை தீயணைப்பு தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டி யில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் திருநள்ளாறு பிரிவில் முதல் பரிசு பெற்ற சேத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த கிரிஷ் என்ற மாணவனுக்கு ரூ.900, 2-ம் பரிசு பெற்ற சக்தி என்ற மாணவனுக்கு ரூ.600 வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் பிரிவில் கோவில்பத்து அரசு பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ப வருக்கு ரூ.900, ஹரிஷ் ராகவா என்ற மாணவனுக்கு ரூ.600 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன், கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் சுரக்குடி தீயணைப்பு அதிகாரி ஹென்றிடேவிட், காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
- மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார்.
புதுச்சேரி:
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 690 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளி மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார். இதுபோல் பள்ளி மாணவி தாரிகா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும் இப்பள்ளி மாணவிகள் பெல்பின் ரூபி, அதினா ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.
மேலும் இப்பள்ளி மாணவர்கள் 412 பேர் 75 சதவீதத்திக்கு மேலும் 60 சதவீதத்தில் இருந்து 74 சதவீதம் வரை 233 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதோடு கணிதத்தில் 4 மாணகளும் அறிவியலில் 3 மாணவர்களும் சமூக அறிவியலில் 4 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 490க்கும் மேல் மதிப்பெண்களை 4 மாணவர்களும் 480 முதல் 489 மதிப்பெண்கள் வரை 17 மாணவர்களும் 450 முதல் 479 மதிப்பெண்கள் வரை 85 மாணவர்களும் 400 முதல் 449 மதிப்பெண்கள் வரை 203 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் முதுநிலை முதல்வர், நிறுவனர் மற்றும் தாளாளருமான லூர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- 116 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டாக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தோம். பள்ளிகளும் இயங்காததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கலாம். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
ஆனாலும் புதுவை அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளிகள்தான் 100 சதவீத தேர்ச்சி அளிக்கிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதுவையில் ஒட்டுமொத்தமாக 127 பள்ளிகளில் தற்போது வரை 116 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு ஏற்ப பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறோம். ஆங்கிலம், தமிழ் பாடத்துக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படும்.
அகில இந்திய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக அரசு பள்ளிகளாக மாற்றியுள்ளோம். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வரும்காலங்களில் நீட், ஜே.இ.இ. ஆகிய தேர்வுகளில் புதுவை மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
- புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்கி ன்றேன்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் கலா சாரத்தோடு பின்னிப்பி ணைந்த இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
15-க்கும் மேற்பட்டவர்க ளுக்கு பார்வை பறிபோய் உள்ளது. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் கிடைத்து ள்ளது. இந்த துயரமான செயலுக்கு பொறுப்பேற்று அதற்கான முக்கிய முடிவுகளை எடுக்காமல் தமிழக அரசும், புதுவை அரசும் தட்டி கழித்து வருகின்றனர்.
இந்த குற்றச்செயல் இரு மாநிலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இது போன்ற ஒரு துயரமான நிகழ்வுகள் ஏற்படாமல் நிரந்தரமாக தடுக்க முடியும், புதுவை மாநிலத்தை பொருத்தவரை 10 அடிக்கு ஒரு மதுபான கடை என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ளது. கஞ்சா போன்ற போதை பொருள்களும் தாராளமாக புதுவையில் புழக்கத்தில் உள்ளதாக மக்கள் கூறிக் கொள்கின்றனர்.
தேவையற்ற முறையில் ரெஸ்ட்ரோபார் என்ற மதுக்கடைகளை திறந்ததால் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பெரும்பாலான வர்கள் குடிப்பதற்கென்று புதுவை மாநிலத்திற்கு வரும் நிலையில் உள்ளதால் புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. கலால் வரி ஏய்ப்பும் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
எனவே புதுவை அரசு படிப்படியாக மதுக்கடை களை குறைத்து வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மங்கலம் தொகுதியில் புதிய குடிநீர் நிலையம் தொடங்கப்பட்டது.
- கிராமப்புற பகுதிகளில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணி துறையின் மூலம் புதிய குடிநீர் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் தேனி.ஜெயக்குமார் தலைமையில் சட்டமன்ற அறையில் நடந்தது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் பிரபாகரன், நீர்பாசன கோட்டம் அதிகாரிகள், செயற்பொறி யாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சேகர் மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சுதர்சனன், ரங்கமன்னார், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கெற்றனர்.
புதிய ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைப்பது மற்றும் கிராமப்புற பகுதிகளில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் வரை படிக்க வேண்டும் என்றார்.
- மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் ரொக்க பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்.
புதுச்சேரி:
கல்லூரி பட்டமளிப்பு விழா பிம்ஸ் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பேராசிரியை ஜெய் சங்கரி வரவேற்றார்.
செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி ஆண்டறிக்கை வாசித்தார். பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் காஞ்சனா கலந்து கொண்டு இளங்கலை 2016 மற்றும் 2017-ம் ஆண்டு, முதுகலை 2018-ம் ஆண்டு இளங்கலை பட்ட பிந்தைய வகுப்பு-2018/2019 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியாதவது:-
சமுதாயத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கு பட்டம் பெற்ற நீங்கள் மருத்துவ சேவைகள் புரிய வேண்டும். இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் வரை படிக்க வேண்டும் என்றார்.
பின்னர் முதுகலை மற்றும் இளங்கலை பட்ட படிப்பில் சிறந்து விளங்கி பல்வேறு பாட பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற சிறந்த மாணவியர் ஷீனா, வளர்மதி ஆல்வினாசாண்டி, ப்ரியதர்ஷனி ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் ரொக்க பரிசு சான்றிதழ்கள் வழங்கினர்.
மேலும் செவிலியர் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே மாணவி டாக்டர் ஆப்ரா பேர்ள் பாராட்டி கவுரவித்தார். பட்டமளிப்பு விழாவை கல்லூரி பேராசிரியர்கள் மலர்விழி, சுஜாதா தொகுத்து வழங்கினர்.
முன்னதாக பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் முதல்வர் மோனி தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
- சேர்மன் பார்த்தசாரதி மாணவர்களுக்கு வாழ்த்து
- தேர்வு முடிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை சேதராப்பட்டு விக்னேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை சாதனை புரிந்துள்ளனர்.
புதுவை சேதராப்பட்டு விக்னேஸ்வரா மேல்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு 12 அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான தேர்வு முடிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி அடைந்தனர்.
இது மட்டுமல்லாது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவி நர்மதா 600 க்கு 586 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடித்தார். மாணவிகள் காவியா, சுவேதா ஆகிய இருவரும் 575 மதிப்பெண்களும், மாணவர் நரேஷ் 566 மதிப்பெண்ணும், சக்திவேல் 562 மதிப்பெண்ணும், மாணவி சாந்தி 558 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்தனர்.
வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 100% தேர்ச்சி பெற்ற விக்னேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவர்களில் மாணவி ரேவதி 500க்கு 491 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடித்தார். மாணவி நந்தினி 478 மதிப்பெண்ணும், மாணவி தியா 469 மதிப்பெண்ணும், மாணவர் சக்திவேல் 462 மதிப்பெண்ணும் மாணவர் சந்தோஷ் 461 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் பார்த்தசாரதி, துணை முதல்வர் மோகன், பள்ளியின் பொறுப்பாசிரியை மகேஸ்வரி ஆகியோர் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளையும், பெற்றோரையும் பள்ளியின் சேர்மன் பார்த்தசாரதி பாராட்டினார் .






