search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர் சாதனை
    X

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் சாதனை படைத்த அமலோற்பவம் பள்ளி மாணவிகளை பள்ளி தாளாளர் லூர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டிய காட்சி.

    அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர் சாதனை

    • புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார்.

    புதுச்சேரி:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இப்பள்ளியில் தேர்வு எழுதிய 690 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

    இப்பள்ளி மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார். இதுபோல் பள்ளி மாணவி தாரிகா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும் இப்பள்ளி மாணவிகள் பெல்பின் ரூபி, அதினா ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

    மேலும் இப்பள்ளி மாணவர்கள் 412 பேர் 75 சதவீதத்திக்கு மேலும் 60 சதவீதத்தில் இருந்து 74 சதவீதம் வரை 233 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதோடு கணிதத்தில் 4 மாணகளும் அறிவியலில் 3 மாணவர்களும் சமூக அறிவியலில் 4 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 490க்கும் மேல் மதிப்பெண்களை 4 மாணவர்களும் 480 முதல் 489 மதிப்பெண்கள் வரை 17 மாணவர்களும் 450 முதல் 479 மதிப்பெண்கள் வரை 85 மாணவர்களும் 400 முதல் 449 மதிப்பெண்கள் வரை 203 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் முதுநிலை முதல்வர், நிறுவனர் மற்றும் தாளாளருமான லூர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×