search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amalolpavam School"

    • 160 நாட்டு நல பணி திட்ட தன்னார்வ தொண்டர்கள் இணைந்து தூய்மை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளியில் தூய்மை இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பள்ளியின் 9,10 மற்றும் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 160 நாட்டு நல பணி திட்ட தன்னார்வ தொண்டர்கள் இணைந்து தூய்மை விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    இப்பேரணி கொம்பாக்கம் திருவள்ளுவர் நகர், அரவிந்தர் வீதி, ஒட்டம்பாளயைம் சாலை, வில்லியனூர் முதன்மைச் சாலை வழியாக பள்ளியைச் சென்றடைந்தது அப்பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குச் சென்று அங்கு பயிலும் மாணவ-மாணவர்களுக்கு தூய்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு , சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தல் ஆகியவை தொடர்பான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    தூய்மை விழிப்புணர்வுப் பேரணியை மேற்கொண்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார். 

    • மதகடிப்பட்டுக்கு வேளாண் களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு மாணவர்கள் விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.
    • , கொய்யாவில் காற்று அடுக்குதல், மாம்பழத்தின் ஒட்டு கொய்யாவின் முதிர்வு அறிதல் பற்றியும் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    அமலோற்பவம் பள்ளியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவர்களுக்கு 'திறன்சார் கல்வி'யின்கீழ் விவசாய வகுப்புகளை நடத்தி வருகிறது .

    அதன் ஒரு பகுதியாக நேரடியாக விவசாய நிலங்களுக்கே சென்று அனுபவக்கல்வி பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள்  மதகடிப்பட்டுக்கு வேளாண் களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு மாணவர்கள் விவசாய நிலங்களை பார்வை யிட்டனர்.

    இப்பயணத்தின் போது வேளாண் ஆசிரியர்கள் பங்கேற்று நீர்வளம் உள்ள நிலம் மற்றும் நீர்வளம் இல்லா நிலங்களின் வேளாண்மை பற்றியும், பயிர்சுழற்சி முறை, நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்துதல் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் பற்றிய நுட்பங்களை எடுத்துரைத்தனர்.

    மேலும், கொய்யாவில் காற்று அடுக்குதல், மாம்பழத்தின் ஒட்டு கொய்யாவின் முதிர்வு அறிதல் பற்றியும் தெரிவித்தனர்.

    அப்போது மாணவர்கள் விவசாயி களுடன் உரையாடி அவர்களின் பலம் மற்றும் வலிகளையும் அறிந்ததுடன், பவர்டில்லர், பூச்சிக்கொல்லித் தெளிப்பு முறைகளையும் அறிந்து கொண்டனர். 

    • போதைபழகத்தினால் மாணவர்கள் சந்திக்கும்பிரச்னைகள் குறிந்து கலந்துரையாடினர்.
    • மாணவர்கள் எழுப்பிய சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., நோக்கு நிகழ்ச்சி நடந்தது.

    திட்ட அலுவலர் சகிகலா வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் தலைமை தாங்கினார். மாநில நோடல் அலுவ லர் சதீஷ்குமார், என்.எஸ். எஸ்., தன்னார்வலர்களின் செயல்பாடுகள், போதைபழகத்தினால் மாணவர்கள் சந்திக்கும்பிரச்னைகள்குறிந்து கலந்துரையாடினர்.

    என்.எஸ்.எஸ்., ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன் பேசுகையில், களை மாணவர் வழிநடத்துவதில் என்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றி வருகிறது.

    பொறுப்புள்ள, இரக்க முள்ள குடிமக்களாக மாறு வதற்கு என்.எஸ்.எஸ்., மாணவர்களை மேம்ப டுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில் என்.எஸ். எஸ்., தன்னார்வலர்க ளுக்கு இலக்குகள், வழக் கமான செயல்பாடுகள், சிறப்பு முகாமின் பயன்கள், சமூக பங்களிப்பு, தொண்டுகள் குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் எழுப்பிய சந்தேங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.டேவிட் செயிண்ட் ஆண்டனி நன்றி கூறினார்.

    • தேசிய அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் பள்ளியில் 3 நாட்கள் நடந்தது.
    • 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய செஸ் பெடரேஷன், புதுச்சேரி செஸ் அசோசியேஷன் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான செஸ் போட்டி அமலோற்பவம் பள்ளியில் 3 நாட்கள் நடந்தது.

    இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்குட் பட்டோர் பிரிவில் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா முதலிடமும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

    பரிசளிப்பு விழாவுக்கு புதுச்சேரி செஸ் அசோசி யேஷன் சங்கத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந் தினர்களாக வைத்திலிங்கம் எம்.பி., அமலோற்பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். முன்னதாக பொருளாளர் வரதராசு வரவேற்றார். முடிவில் துணைச்செய–லாளர் அழகுமணி நன்றி கூறினார். போட்டியில் வெற்றி பெற்றவர் மாணவர்கள் கஜகஸ்தானில் ஆகஸ்ட்டு மாதம் நடைபெறும் உலக போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார்.

    புதுச்சேரி:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அமலோற்பவம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் புதுவை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இப்பள்ளியில் தேர்வு எழுதிய 690 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

    இப்பள்ளி மாணவி திகழ்மதி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளியளவில் முதலிடமும் பெற்றார். இதுபோல் பள்ளி மாணவி தாரிகா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும் இப்பள்ளி மாணவிகள் பெல்பின் ரூபி, அதினா ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

     மேலும் இப்பள்ளி மாணவர்கள் 412 பேர் 75 சதவீதத்திக்கு மேலும் 60 சதவீதத்தில் இருந்து 74 சதவீதம் வரை 233 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதோடு கணிதத்தில் 4 மாணகளும் அறிவியலில் 3 மாணவர்களும் சமூக அறிவியலில் 4 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 490க்கும் மேல் மதிப்பெண்களை 4 மாணவர்களும் 480 முதல் 489 மதிப்பெண்கள் வரை 17 மாணவர்களும் 450 முதல் 479 மதிப்பெண்கள் வரை 85 மாணவர்களும் 400 முதல் 449 மதிப்பெண்கள் வரை 203 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் முதுநிலை முதல்வர், நிறுவனர் மற்றும் தாளாளருமான லூர்துசாமி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

     எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அமலோற்பவம் மேல்நிலை பள்ளியில் இருந்து 455 படைப்புகளும், லூர்து அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளி 336 படைப்புகள் இடம் பெற்றன.
    • கலை, அறிவியல், திறன் கல்வி ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறந்த 8 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டினர்.

    புச்சேரி:

    புதுவை அமலோற்பவம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற கண்காட்சி அமலோற்பவம் ஆரம்ப பள்ளி வளாகத்திலும், கொம்பாக்கம் அமலோற்பவம் லூர்து அகாதெமி வளாகத்திலும் நடைபெற்றது.

    இதில் அமலோற்பவம் மேல்நிலை பள்ளியில் இருந்து 455 படைப்புகளும், லூர்து அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளி 336 படைப்புகள் இடம் பெற்றன. கண்காட்சியை பள்ளி முதுநிலை முதல்வர் லூர்துசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    அறிவியல் படைப்புகள் பண்ணை வளர்ப்பு திட்டம், ஆட்டோமெட்டிக் தெருவிளக்கு, சென்சார் உதவியோடு குப்பைகளை சுத்தப்படுத்துதல், மழைக்காலங்களில் வீட்டுக்குள் நீர் புகாமல் மிதக்கும் வீடுகளாக அமைக்கும் தொழில்நுட்பம், காகித அட்டைகளை கொண்ட ரோபோடிக் வாக்கும் கிளீனர் உள்பட பல இருந்தன.

    புதுவையில் வேறெந்த பள்ளியில் இல்லாத வகையில் மாணவர்களின் பன்முக திறமையை வளர்க்கும் திறன்சார் கல்வி படைப்புகளும் இருந்தது. 9 மணி முதல் 5 மணி வரை நடந்த கண்காட்சியை பொதுமக்கள், பெற்றோர்கள் பலர் கண்டுகளித்தனர்.

    இதில், கலை, அறிவியல், திறன் கல்வி ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சிறந்த 8 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டினர்.

    இதில் சிறந்த வெற்றியாளராக தேர்வாகுவோருக்கு விரைவில் வெள்ளி பதக்கங்கள் வழங்கபடவுள்ளது.

    ×