என் மலர்
புதுச்சேரி
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர்.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி இந்து அறநிலையத்துறை மூலம் பிரசித்தி பெற்ற கோவில்க ளுக்கு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவி லுக்கென தனி அதிகாரி இல்லாமல் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
மேலும் புதியதாக அறங்காவலர் குழுவை தேர்ந்தெடுக்க கூடாது என்று நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த பாகூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக இந்து அற நிலைத்துறை அறங்காவல் குழுவுடன் புதிதாக தீ மிதி திருவிழாவிற்கென 9 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.
இந்த குழு வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்தில் இருந்து ஜூன் மாதம் 18-ந் தேதி வரை அதிகாரத்தில் இருக்குமென அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் கோவில் பத்திரிகை படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிலையில் தீமிதி குழுவை அழைக்காமல் அறங்காவல் குழு விழா ஏற்பாடுகளை செய்து இருந்தது. மேலும் பத்திரிக்கை படையலிட்டது. இதனால் தீமிதி விழா குழு தனியாக பத்திரிகை எடுத்து வந்து படையலிட வலியு றுத்தியதுடன், அறங்காவல் குழுவிற்கு அதிகாரம் இல்லை என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இரு தரப்பும் வாய்தகராறில் ஈடுபட்டனர். பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தனர். இருந்தபோதும் இரு தரப்பும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்து அறநிலைத்துறை குளறுபடியான உத்தரவால் பாகூர் தொகுதியில் தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே தொடர்ந்து எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில் இந்த உத்தரவால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி அமைதியான முறையில் திருவிழா நடத்த அரசு மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நகைகள் சில காணாமல் போயிருந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- வெளியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.
இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன்களை பெற்றுள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அந்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
அப்போது நகைகள் சில காணாமல் போயிருந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கூட்டுறவு கடன் சங்க பொறுப்பாளர் கதிரவன் (48) என்பவர் நகைகளை திருடி தனது நண்பர் மூலம் வெளியில் அடகு வைத்து ரூ.33 லட்சத்திற்கு மேல் பணம் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து கதிரவனை போலீசார் கைது செய்தனர்.
அவர் வெளியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- 3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சாராய வியாபாரிகளான மரக்காணம் பகுதியை சேர்ந்த அமரன், முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுவையில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்தது.
இது தொடர்பாக புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரை சேர்ந்த பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகிய 2 பேரை புதுவை போலீசார் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை வானரகம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பியிடம் மெத்தனால் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஏழுமலை, பர்க்த்துல்லா, இளையநம்பி ஆகிய 3 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
22 பேர் பலியான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கினர்.
சம்பவம் நடந்த மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் விசாரணை நடத்தினர்.
ஏழுமலையும், பர்கத்துல்லாவும் சென்னை வானகரம் தொழிற்சாலையில் இருந்து கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்தனர். அதனை புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.
அந்த மெத்தனாலை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர்.
அதனுடன் சேர்த்து கொரோனா காலத்தில் தயாரிக்கபட்ட காலாவதியான மெத்தனாலையும் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது பணம் சம்பாதிக்கும் நோக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க பர்கத்துல்லாவும், ஏழுமலையும் அதிகமாக மெத்தனாலை வாங்கி வைத்திருந்தனர். அதில் கள்ளச்சாராயம் தயாரித்தது போக மீதமுள்ள மெத்தனாலை பதுக்கி வைத்திருந்தனர்.
அந்த மெத்தனாலை தற்போது புதிதாக வாங்கிய மெத்தனாலுடன் கலந்து மரக்காணம், செங்கல்பட்டில் இருந்து வந்த சாராய வியாபாரிகளுக்கு விற்றுள்ளனர். அதனை அவர்கள் கள்ளச்சாராயத்துடன் கலந்து குடிமகன்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தனாலுடன் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டதால் அதனை வாங்கி குடித்தவர்கள் பலியானதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
- புதுவையில் எது நடந்தாலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு தயங்குகிறது.
புதுச்சேரி:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் இருந்து அனுமதி இல்லாமல் தமிழகப் பகுதிக்கு தினமும் பல்லாயிரம் லிட்டர் சாராயம் கண்டெய்னர் லாரி, மீன் பாடி வண்டி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கடத்தப்படுகிறது. சாராய வியாபாரிகளிடம் கலால்துறை முறையான கணக்கு கேட்பதில்லை. கலால்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் விடுவதாலே புதுவை சாராயம் பிற மாநில ங்களுக்கு கடத்தப்படுகிறது.
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு கடத்தப்பட்ட மெத்தனால் மூலமே மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 அப்பாவி கூலி தொழிலாளிகள் விஷ சாராயத்திற்கு பலியாகி உள்ளனர். புதுவையில் சாராயக் கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதால் இரவு நேரங்களில் சாராயம் கடத்தப்படுகிறது. இதேபோல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து போலி ஆவணங்கள் தயாரி க்கப்பட்டு கண்டெய்னர்னர் லாரி மூலமாக மது தயாரிக்கும் மூலப் பொருளான எரி சாராயம் புதுவைக்கு கொண்டுவரப்பட்டு - புதுவையில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலை களுக்கு ஒரு சில மாபியா க்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
கலால் துறைக்கு தெரிந்தே இந்த மோசடி நடந்து வருகிறது. விஷ சாராயம் இறப்பு சம்பவத்தில் விஷ சாராயம் விற்பனைக்கு உடந்தையாக இருந்தாக காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு தயவு தாட்சியமின்றி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் புதுவையில் எது நடந்தாலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு தயங்குகிறது.
புதுவையில் பதுக்கி வைக்கப்பட்ட மெத்தனால் தமிழக பகுதிக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதின் விளைவாகவே 22 பேர் இறந்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மரணங்களில் புதுச்சேரி அரசுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராய கடத்தலை தடுக்காததாக குற்றச்சாட்டு
- இட மாற்றத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளியாகி உள்ளது.
புதுச்சேரி:
தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய மூலப்பொ ருள்கள் புதுவையை சேர்ந்த வர்களால் தமிழகத்துக்கு கடத்தி செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை கலால் துறையின் துணை ஆணையர் டி.சுதாகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது இட மாற்றத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளியாகி உள்ளது.
புதுவையில் புதிதாக நடன மது பார்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார். அதோடு கலால்துறையில் லஞ்சம் பெற்று நகர்புற மதுபார்களை மாநில எல்லை பகுதிக்கு மாற்று வதாகவும் நாராயணசாமி புகார் கூறினார்.
மேலும் புதுவை கலால்துறையின் செய்ல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து தமிழக தலைமை செயலாளர் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த கடிதம் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் தூங்குவதாகவும் நாராயண சாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு கலால்துறையின் கடத்தலை கண்டு கொள்ளாத அலட்சிய போக்கே காரணம் என அரசியல் கட்சிகளும் குற்றஞ்சாட்டின.
கலால்துறை துணை ஆணையரை கண்டித்து உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.நேரு தலைமையில் கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நேற்று நடந்தது. இதனாலேயே கலால்துறை துணை ஆணையர் டி.சுதாகர் இட மாற்றம் செய்யப்பட்டு ள்ளார் என கூறப்பட்டுகிறது.
அவர் கலால்துறை யிலிருந்து விடுவிக்கப்பட்டு எழுது பொருள் அச்சகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூகநலத்துறை இயக்குனர் குமரனுக்கு கூடுதல் பொறுப்பாக கலால்துறை துணை ஆணையர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை செயலாளரின் கடிதத்தை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நேரடியாக தலையிட்டு கலால்துறை துணை ஆணையரை இடம் மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.
- பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.
புதுச்சேரி:
மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் புதுச்சேரி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுவை பகுதியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதிகளுக்கு மெத்தனால் மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க புதுவை-தமிழக எல்லையான ஆரோவில் கோட்டக்குப்பம் வானூர், மரக்காணம், கிளியனூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் ஈ.சி.ஆர். சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது புதுவையில் இருந்து 100 மில்லி சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த மரக்காணம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளிகண்ணு (வயது 35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மரக்காணம் பகுதியில் புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 லிட்டர் சாராயத்தை பழனி (64) என்பவரிடம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து பழனியை கைது செய்தனர்.
இதேபோல் கோட்டக்குப்பம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விபின் (25) என்பவரிடம் 4 பிராந்தி பாட்டில், 6 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் 17 பீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
பொம்மையார்பாளையம் பகுதியில் முகம்மத்ஆஷிப் என்பவரிடம் 5 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வினோத் பிரபு (40), என்பவரிடம் 4 பீர்பாட்டில் ஒரு பிராந்தி பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. வானூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது திண்டிவனப் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரிடம் 48 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் சாராயம் கடத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை எல்லையில் தமிழக மதுவிலக்கு போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி வருவதால் புதுவையில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவது குறைந்து வருகிறது.
- துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
- ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார்.
விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மடுகரை வி.எஸ்.ஆர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, பண்ட சோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு நிதியுதவி ஆகியவற்றை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
- இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
மல்யுத்த வீராங்கணைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜனதா எம்.பி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யூ தலைவர் பிரபுராஜ் தலைமை வகித்தார். ராமமூர்த்தி முனியம்மாள், வின்சென்டன் கவுசிகன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ அகிலு இந்திய துணைத்தலைவர் சுதாசுந்தர்ராமன், சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் சீனுவாசன், ஏ.ஐ.கே.எஸ் செயலாளர்கள் தமிழ்செல்வன், சங்கர், இளவரசி, வாலிபர் சங்க செயலாளர் ஆனந்த், மாணவர் சங்க செயலாளர் பிரவீன் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.
- அங்காளன் எம். எல்.ஏ வழங்கினார்
- அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கூலி,
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் பள்ளி சீருடை மற்றும் தையல் கூலி ஆகியவற்றை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 பயின்ற 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா பாய்கள், 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு துண்டுகள், மதகடிப்பட்டு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் தையல் கூலி, நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை மற்றும் தையல் கூலி, கலிதீர்த்தாள்குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி சீருடைகள் மற்றும் தையல் கூலி, சிலுக்காரிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி, ஆகியவற்றை அங்காளன் எம்.எல்.ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியை- ஆசிரியர்கள், பள்ளியின் பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜெகத்ரட்சகன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
- ஆசிரியர்கள் பள்ளி நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.யை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
புதுச்சேரி:
அகரத்தில் உள்ள ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி. எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
தேர்வில் அதிக மதிப் பெண்கள் எடுத்து சாதித்த மாணவ-மாணவிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் பள்ளி நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.யை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
அப் போது பள்ளியின் தாளாளர் ஜெ.சந்தானகிருஷ்ணன், முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜெகத்ரட்சகன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
- வில்லியனூரில் இருந்து புதுவை சாராயத்தை கேனில் வாங்கி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
- விற்பனை செய்ய வாங்கி வந்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான ஆரோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பூத்துறை காட்டு பகுதியில் சாராய விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் சென்று சாராய விற்பனையை கண்காணித்து வந்த நிலையில், அப்போது வில்லியனூரில் இருந்து புதுைவ சாராயத்தை கேனில் வாங்கி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தமிழக பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்தியவர் அதிரடி கைது தமிழக பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்தியவர் அதிரடி கைது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 55) என்பது தெரிய வந்தது. அவர் விற்பனை செய்ய வாங்கி வந்த ஐந்து லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பொம்மை விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பொம்மை விலை கேட்டுள்ளார்.
- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் சண்முகா வீதியை சேர்ந்தவர் அருண் (32) காமராஜர் சாலையில் உள்ள பிரபல திரையரங்கில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.
அருண் தனது மனைவி குழந்தைகள் மற்றும் நண்பர் ஸ்டீபன் ஆகியோருடன் புதுவை கடற்கரைக்கு சென்றார். அங்கு குழந்தைகள் பொம்மை கேட்டுள்ளனர்.
உடனே அவர் நேரு சிலை அருகே பொம்மை விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பொம்மை விலை கேட்டுள்ளார்.
அந்த பெண் அதிக விலை கூறியதாக தெரிகிறது. அதற்கு அருண் இவ்வளவு விலை சொல்கிறீர்களே என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் அவர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி சொன்ன விலைக்கு பொம்மையை வாங்கி செல்லுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பக்கத்தில் கடை வைத்திருந்த வாலிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோரும் அவர்களை திட்டி, இரும்பு பைப்பால் அருணையும், ஸ்டீபனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் பொம்மை கடை வைத்திருந்தது செல்வி என்பதும் பக்கத்து கடைக்காரர் மணி மற்றும் அவரது மனைவி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வி, மணி மற்றம் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.






