search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா எம்.பி மீது நடவடிக்கை கோரி சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    பா.ஜனதா எம்.பி மீது நடவடிக்கை கோரி சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    மல்யுத்த வீராங்கணைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜனதா எம்.பி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சி.ஐ.டி.யூ தலைவர் பிரபுராஜ் தலைமை வகித்தார். ராமமூர்த்தி முனியம்மாள், வின்சென்டன் கவுசிகன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.டபிள்யூ.ஏ அகிலு இந்திய துணைத்தலைவர் சுதாசுந்தர்ராமன், சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் சீனுவாசன், ஏ.ஐ.கே.எஸ் செயலாளர்கள் தமிழ்செல்வன், சங்கர், இளவரசி, வாலிபர் சங்க செயலாளர் ஆனந்த், மாணவர் சங்க செயலாளர் பிரவீன் கண்டன உரையாற்றினர்.

    போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×