search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanee Jayakumar"

    • சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரி களுடன் சட்ட சபையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.

    கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்க மன்னர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மங்கலம் தொகுதி சேர்ந்த உதவியாளர் திருக்காஞ்சி கணுவாப்பேட்டை, பங்கூர், அரியூர் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் பூஜைகள் செய்து பணிகள் தொடங்கப்படாமல் உள்ள இடங்கள் பற்றியும் அதற்கான காரணம் குறித்தும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கேட்டறிந்தார்.

    பிறகு அடுத்த கட்டமாக மங்களம் தொகுதியில் நடைபெறவிருக்கும் தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    • மங்கலம் தொகுதியில் புதிய குடிநீர் நிலையம் தொடங்கப்பட்டது.
    • கிராமப்புற பகுதிகளில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணி துறையின் மூலம் புதிய குடிநீர் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் தேனி.ஜெயக்குமார் தலைமையில் சட்டமன்ற அறையில் நடந்தது.

    கூட்டத்தில் பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் பிரபாகரன், நீர்பாசன கோட்டம் அதிகாரிகள், செயற்பொறி யாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சேகர் மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சுதர்சனன், ரங்கமன்னார், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கெற்றனர்.

    புதிய ஆழ்துளை கிணறு, பைப்லைன் அமைப்பது மற்றும் கிராமப்புற பகுதிகளில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் தடுப்பணைகள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கால்நடைகளின் கண்காட்சி நடைபெறும்.
    • கண்காட்சியில் கால் நடைத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கால்நடைகளின் கண்காட்சி நடைபெறும்.

    கடந்த 6 ஆண்டுகளாக கால்நடை கண்காட்சி புதுவையில் நடைபெற வில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கால்நடை துறை சார்பில் மங்கலம் கிராமத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுபுற கிராம பகுதியைச் சேர்ந்த கிடாரி, ஜெர்சி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகள் மற்றும் சண்டை சேவல் நாட்டுக்கோழி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோழிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

    கண்காட்சியில் கால் நடைத் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 46 கால்நடைகள், கோழிகளுக்கு சிறப்பூ பரிசும் கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து கால்நடைக ளுக்கும் ஆறுதல் பரிசும் வளர்ப்போருக்கு வழங்கி னார். நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இயக்குனர் லதா மங்கேஸ்கர், கால்நடை மருத்துவர்கள் அனந்தராமன் ஆர்த்தி சரளாதேவி மற்றும் கால்நடை விவசாயிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிய முறையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • உழவர் சந்தையில் இயற்கை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உழவர் சந்தையில் இயற்கை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அங்காடியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார். இங்கு பொதுமக்கள் இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிய முறையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை கிராமப்புற இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை, பூங்கா தூயமல்லி, கிச்சிடி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்ய புதுவை உழவர் சந்தையில் இயற்கை அங்காடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் அதிகாரிகள் இயற்கை விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ.88 லட்சத்து 67 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.
    • மலையாளத்தான் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்குட்பட்ட வில்லியனூர் - பாகூர் சாலை, கோட்டைமேடு சந்திப்பில் இருந்து உறுவையாறு சந்திப்பு வரையிலும் மற்றும் உறுவையாறு சந்திப்பில் இருந்து திருக்காஞ்சி வழியாக கீழ்அக்ராஹாரம் வரையிலும் உள்ள சாலைகளை பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ.88 லட்சத்து 67 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை விழா உறுவையாறு சந்திப்பில் நடந்தது.அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து சாலை பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரராஜி, உதவிப்பொறியாளர் கோபி, இளநிலைப்பொறியாளர் நடராஜன், ஒப்பந்ததாரர்கள் அருணகிரி, மலையாளத்தான் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்களை தள்ளுபடி செய்வதாக சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
    • விவசாய பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றி, விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    புதுச்சேரி:

    அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் புதுவை சோரப்பட்டு வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சீதாராமன், துணைத் தலைவர் யுவ ராஜ், இயக்குனர்கள் மாரி முத்து, ராமகிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்களை தள்ளுபடி செய்வதாக சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதனால், தற்போது கடன் தள்ளுபடி திட்டத்தில் உள்ள விவசாய உறுப்பினர்கள், புதிதாக பயிர் கடன் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    எனவே அவர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், விவசாய பயிர் கடன் தள்ளு படி திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றி, விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்க நட வடிக்கை எடுக்க வேண் டும்

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    மங்கலம் தொகுதி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டைமேடு டோபி கானா முதல் புதுநகர் வரை சங்கராபரணி ஆற்றங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 39 ஆயிரம் செலவில் தூர்வார் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டைமேடு டோபி கானா முதல் புதுநகர் வரை சங்கராபரணி ஆற்றங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 39 ஆயிரம் செலவில் தூர்வாருதலும், கோட்டைமேடு கிராம பஞ்சாயத்தில் உள்ள வில்லியனூர் வாய்க்கால் ஆலப்படுத்துதல் பணிக்கான தொகை ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும் நடைபெறுகிறது.

    இதற்கான பணிகளை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் விஜய் அருணாச்சலம், கிராமத்திட்ட ஊழியர்கள் பிரதாப் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட உருவையாறு ஏரிக்கரை முதல் செல்வா நகர் வழியாக ஆற்றுக்கு செல்லும் ஏரி வாய்க்கால் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை.
    • இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உடனடியாக ரூ.2 லட்சம் செலவில் ஏரிவாய்க்காலை தூர்வார உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட உருவையாறு ஏரிக்கரை முதல் செல்வா நகர் வழியாக ஆற்றுக்கு செல்லும் ஏரி வாய்க்கால் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படவில்லை.

    மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளில் சூழ்வதால் ஏரி வாய்க்காலை தூர்வாரி தரும்படி அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உடனடியாக ரூ.2 லட்சம் செலவில் ஏரிவாய்க்காலை தூர்வார உத்தரவிட்டார்.

    இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஜெயராமன், வில்லியனூர் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்க மன்னார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • மங்கலம் தொகுதி ஆச்சார்யாபுரம் அன்புநகர், மங்கலம் உள்ளிட் பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை எனவும், அசுத்தம் கலந்த குடிநீர் வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி ஆச்சார்யாபுரம் அன்புநகர், மங்கலம் உள்ளிட் பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை எனவும், அசுத்தம் கலந்த குடிநீர் வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ரூ.22 லட்சம் செலவில் அப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

    இதற்காகான பணி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், இளநிலைபொறியாளர் ரங்கமன்னார் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மங்களம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கீழ்நீரம்மன் கோவில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் புனரமைக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல்கள் உண்டாகி சேதம் அடைந்திருந்தது.
    • இதனைய்டுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    மங்களம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த செங்கீழ்நீரம்மன் கோவில் உள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் புனரமைக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல்கள் உண்டாகி சேதம் அடைந்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கோவிலை புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் புனரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் முறையிட்டனர்.

    இதனைய்டுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்க தனது சொந்த பணம் ரூ.3 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

    மேலும், கோவில் திருப்பணிகளை விரைவாக முடிக்குமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகளிடம் கூறினார்.

    கோவில் நிர்வாகிகளும், அந்த பகுதி மக்களும் திருப்பணியை தொடர நிதி அளித்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இன்னும் ஒரிரு நாளில் கோவில் திருப்பணி தொடங்க உள்ளது.

    ×