என் மலர்
புதுச்சேரி
- திடுக்கிடும் தகவல்கள்
- எதிர்தரப்பால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஊருக்குள் வராமல், மடுகரையில் உள்ள நண்பர் ராம்ஜி வீட் டில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலைநகரை சேர்ந்தவர் மணிமாறன் என்ற டூம் மணி (35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடி தடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிரபல ரவுடியான முத்தி யால்பேட்டை
அன்புரஜினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று இவர், சில மாதங் களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இவர் எதிர்தரப்பால் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஊருக்குள் வராமல், மடுகரையில் உள்ள நண்பர் ராம்ஜி வீட் டில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார்.மணிமாறனின் பிறந்தநாளான மடுகரை காலனி பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவரை நோட்டமிட்டு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிமாறனை வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து திருபுவனை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப் பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை நேற்று முன்தினம் இரவும், ஒருவரை நேற்றும் போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நெட் டப்பாக்கம் சூரமங்கலம் மேட்டுத்தெருவை சேர்ந்த சிவராஜ் (22), சூரமங்கலம் பேட் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்த வினோ தன் (29), டி.நகர் ஜீவா னந்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த தர்மதுரை (22), வாணரப் பேட்டை கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த விஸ்டம், ரெயின்போ நகரை சேர்ந்த சங்கர் (28) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட தில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
லாஸ்பேட்டை ரவுடி சோழன் தலை மையிலான கும்பல்தான் கடந்த 2019-ம் ஆண்டு அன்புரஜினியை கொலை செய்ததும், அவரது தம்பி ஜெரிக்கோ கொலையில் தொடர்புடையவர்களை பழிதீர்க்க முடிவு செய்து அன்புரஜினி கொலையில் தொடர்புடைய ஜெரோம் பிரபுவை கடந்த 2021-ம் ஆண்டு சென்னை நீலாங்க ரையில் கொலை செய்தும் கடந்த மே மாதம் அனிச் சக்குப்பத்தை சேர்ந்த விமல் (35) என்பவரை ஆரோவில் பொம்மையார் பாளையம் சாலையில் வெட்டி கொலை செய் தததும், தொடர்ச்சியாக, தற்போது மணிமாறனை கொலை செய்ததும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் பிரான்சில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மர் ஷல் என்பவர் அன்புரஜி னியின் தீவிர ஆதரவாளர் என்பதும் தற்போது அவருடன்தான் அன்புரஜினியின் தம்பி ஜெரிக்கோ வசித்து வருவதும் பிரான்சில் இருந்து கொண்டு அன்புரஜினி கொலையில் தொடர்பு டையவர்களை ஒவ்வொ ருவராக கொல்ல மர்ஷல் தான் நிதியுதவி அளித்து வந்துள்ளார்.
அவர் கொடுத்த நிதியுதவி மூலம் மணிமாறன் உட்பட 3 பேரையும் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, போலீ சார் இந்த கொலை வழக்கில் ஜெரிக்கோ, மர்ஷல் ஆகியோரையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்துள்ள னர். மேலும், பிரான்சில் இருந்து இருவரையும் புதுவை அழைத்து வரவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
- வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திரளான அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
வருகிற 17-ந்தேதி தலைமை கழகம் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த அறிவித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைச் செயலாளர் ரெங்கசாமி பேச உள்ளார். அதனால் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாநில அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா, மூத்தகுடி ரகுபதி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீத்தாராமன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ், இலக்கி அணி செயலாளர் பாலு, சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேலு, ராமச்சந்திரன், கலியமூர்த்தி, பாலு, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மூர்த்தி, முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 10-வது வாரமாக தேங்காய் திட்டு மரப்பாலம் அருகில் உள்ள சனீஸ்வரர் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றரை டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வாட்டர் ஆப் பாண்டிச்சேரி தினேஷ் மற்றும் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.
- மதகடிப்பட்டுக்கு வேளாண் களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு மாணவர்கள் விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.
- , கொய்யாவில் காற்று அடுக்குதல், மாம்பழத்தின் ஒட்டு கொய்யாவின் முதிர்வு அறிதல் பற்றியும் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
அமலோற்பவம் பள்ளியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவர்களுக்கு 'திறன்சார் கல்வி'யின்கீழ் விவசாய வகுப்புகளை நடத்தி வருகிறது .
அதன் ஒரு பகுதியாக நேரடியாக விவசாய நிலங்களுக்கே சென்று அனுபவக்கல்வி பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மதகடிப்பட்டுக்கு வேளாண் களப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கு மாணவர்கள் விவசாய நிலங்களை பார்வை யிட்டனர்.
இப்பயணத்தின் போது வேளாண் ஆசிரியர்கள் பங்கேற்று நீர்வளம் உள்ள நிலம் மற்றும் நீர்வளம் இல்லா நிலங்களின் வேளாண்மை பற்றியும், பயிர்சுழற்சி முறை, நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்துதல் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் பற்றிய நுட்பங்களை எடுத்துரைத்தனர்.
மேலும், கொய்யாவில் காற்று அடுக்குதல், மாம்பழத்தின் ஒட்டு கொய்யாவின் முதிர்வு அறிதல் பற்றியும் தெரிவித்தனர்.
அப்போது மாணவர்கள் விவசாயி களுடன் உரையாடி அவர்களின் பலம் மற்றும் வலிகளையும் அறிந்ததுடன், பவர்டில்லர், பூச்சிக்கொல்லித் தெளிப்பு முறைகளையும் அறிந்து கொண்டனர்.
- சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
- கவிஞர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை சார்பில் பாரதியார் நினைவு நாள் மற்றும் புதுவையில் தமிழ் வளர்ச்சி துறையின் தேவை குறித்த உரையரங்கம் மற்றும் கவியரங்கம் சாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது.
பேரவையின் துணைத்தலைவர் சுசிலா தலைமையில் பாரதியாரின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயலாக்கக்குழு தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார். பேரவையின் தலைவர் கவிஞர் கோ.செல்வம்,கலாச்சார புரட்சி இயக்கதலைவர் பிரான்சுவா பிரான்கிலின், பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கவுசல்யா வரவேற்றார். இதனை தொடர்ந்து கவிஞர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுவை மாநிலத்தில் தமிழ் வளர்ச்சி துறையை தனி இயக்குனர் தலைமையில் அமைக்க அரசு ஆணையிட வேண்டும். புதுவையை போதை இல்லாத மாநிலமாக அரசு உடனே அறிவிக்க வேண்டும்.
இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்று வதை கைவிட வேண்டும். புதுவை மாநிலத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மணிவண்ணன் திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
- இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியான தோமாஸ் அருள் திடலில் வசிப்பவர் மணிவண்ணன் (வயது 36). இவர் காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோன்ற சமயத்தில், தனது உறவினர் வீட்டு அருகில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். நாளடைவில் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக ஒதுங்கி நின்ற குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பூச்சி கடித்ததில் பாதிக்கப்பட்டனர்.
- சம்பவம் குறித்து திருநள்ளாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள அய்யனார் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவில் அருகில் இருந்த அரச மரத்தில் இருந்து திடீரென்று விஷப்பூச்சிகள் பறந்து வந்து பக்தர்களை கடித்துள்ளது. இதில் அங்கிருந்து பக்தர்கள் அனைவரும் அலறடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக ஒதுங்கி நின்ற குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பூச்சி கடித்ததில் பாதிக்கப்பட்டனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருநள்ளாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சூரக்குடியில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதி மரங்களில் விஷப் பூச்சிகள் கூடு கட்டியுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
- சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
- கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9-ந் தேதி கவர்னர் தமிழிசை உரையுடன் தொடங்கியது.
13-ந்தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 14 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
சட்டசபையை 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி இந்த மாதத்தில் சட்டசபையை கூட்ட வேண்டும். இதற்காக வருகிற 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது. இதை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அன்றைய தினம் ஒரு நாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் எதிர்கட்சிகள் தரப்பில் பேனர் கலாச்சாரம், சிலிண்டருக்கு மானியம் வழங்காதது, ரேஷன்கடைகளை திறக்காதது, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமரை சந்திக்காதது குறித்து பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
- காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தல்
- அதிகாரத்தை பயன்படுத்துவது போலீஸ் சூப்பிரண்டு வேலை தான். எனவே இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை சஸ்பெண்டு செய்தது கண்டிக்கத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் புதுவை கவர்னர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பன் கலையரங்கில் முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச்செயலாளர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது உருளையன் பேட்டைதொகுதி எம்.எல்.ஏ. நேரு உள்ளே செல்ல முயன்றார். இன்ஸ்பெக்டர் கண்ணன் அவரை தடுத்து நிறுத்த முயன்ற போதும் போலீசாரை மீறி அவர் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்றார்.
இந்த சம்பவத்தில் நேரு எம்.எல்.ஏ.வை உள்ளே விடக்கூடாது என்ற எந்த வாய்மொழி உத்தரவும் போலீசாருக்கு பிறப்பிக்கப்பட வில்லை.
அதே வேளையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வை இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்த அதிகாரம் இல்லை.
இந்த அதிகாரத்தை பயன்படுத்துவது போலீஸ் சூப்பிரண்டு வேலை தான். எனவே இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை சஸ்பெண்டு செய்தது கண்டிக்கத்தக்கது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவு வானளாவிய அதிகாரம் படைத்தவை. ஆனால் அவரது உத்தரவு இதுவரை அமல்படுத்தப்பட வில்லை.
எனவே இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு அளிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து உடனே அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். மேலும் காவல் துறையில் நீண்ட நாட்களாக போலீஸ் சூப்பிரண்டு பதவிகள் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ளது.
எனவே அதனை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.
- இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது40).
இவர் புதுவை அரசு பல்நோக்கு ஊழியர் ஆவார். இவர் தனது அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.
இதற்காக அவர், அந்த செயலியில் அவரின் செல்போன்களில் உள்ள அனைத்து தகவல்களை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்தார்.
அதையடுத்து அவருக்கு உடனே கடன் வழங்கப்பட்டது. கடன் பெற்ற ஒரு வாரத்திலேயே அந்த தொகையை ஆண்ட்ரூஸ் திரும்ப செலுத்திவிட்டார்.
ஆனால் அவரை ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆண்ட்ரூசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர், நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் உனது நிர்வரண படத்தை உறவினர்கள், நண்பர்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டினார். மேலும் ஆண்ட்ரூசின் நிர்வாண படத்தையும் அவரது செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரூஸ் பல்வேறு தவணைகளாக ரூ.3லட்சம்வரை வங்கிகணக்கு மூலம் செலுத்தினார்.
ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.
இதையடுத்து ஆண்ட்ரூஸ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக இதேபோன்று நிர்வாண படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார்கள் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதனை பொருடப்படுத்தாமல் பலர் பணம் செலுத்தி ஏமாறுகின்றனர்.
- தனக்கு பிரசவவலி வந்த நிலையில் வீட்டிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
- யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டைப்பையில் வைத்து அருகில் இருந்த வீட்டின் எதிரே வைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த திருபுவனை சீனிவாச நகரை சேர்ந்தவர் தேசிங்.
இவரது வீட்டின் அருகில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து வந்ததது. இதனை கேட்டு தேசிங் சத்தம் நடந்த இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு கட்டைப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் திருபுவனை போலீசிக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டு திருபுவனை சுகாதார மையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த குழந்தை திருபுவனையை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிறந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நட்பாக பழகிய ஒருவர், அந்த இளம்பெண்ணை திருமண செய்து கொள்வதாக ஏமாற்றி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கிய விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.
தனக்கு பிரசவவலி வந்த நிலையில் வீட்டிலேயே அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டைப்பையில் வைத்து அருகில் இருந்த வீட்டின் எதிரே வைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
- கூட்டுறவு சங்க மேலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
புதுச்சேரி:
திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற நபர்கள் பதவி ஏற்கும் விழா திருபுவனையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க மேலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். சங்கத் தலைவர் பாண்டியன் என்ற வெங்கடாஜலபதி துணைத்தலைவராக வடிவேலு இயக்குனர்களாக முருகன் என்ற சுப்பிர மணியன் , உதயசூரியன், சரவணன், அருள்வாணன் ராம கிருஷ்ணன், ரவிக்குமார், சத்தியசீலன் ஆகியோர் பதவி ஏற்றனர்.
பதவி ஏற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்






