என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சனீஸ்வரர் குளத்தை தூய்மை செய்த முத்துரத்தினம் அரங்க பள்ளி மாணவர்கள்
    X

     தேங்காய்திட்டு சனீஸ்வரர் குளத்தை முத்துரத்தினம் அரங்க பள்ளி மாணவர்கள் தூய்மை செய்த காட்சி.

    சனீஸ்வரர் குளத்தை தூய்மை செய்த முத்துரத்தினம் அரங்க பள்ளி மாணவர்கள்

    • குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 10-வது வாரமாக தேங்காய் திட்டு மரப்பாலம் அருகில் உள்ள சனீஸ்வரர் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் அவர்கள் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றரை டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வாட்டர் ஆப் பாண்டிச்சேரி தினேஷ் மற்றும் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.

    Next Story
    ×