search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அ.ம.மு.க. ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் பேசிய காட்சி. அருகில் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், இணைச்செயலாளர் லாவண்யா மற்றும் பலர் உள்ளனர்.

    அ.ம.மு.க. ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் மற்றும் தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு திரளான அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி தலைமை கழகம் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த அறிவித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைச் செயலாளர் ரெங்கசாமி பேச உள்ளார். அதனால் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாநில அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா, மூத்தகுடி ரகுபதி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சீத்தாராமன், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ், இலக்கி அணி செயலாளர் பாலு, சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்கிற குமாரவேலு, ராமச்சந்திரன், கலியமூர்த்தி, பாலு, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மூர்த்தி, முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    Next Story
    ×