என் மலர்
வேலூர்
- கிராம மக்கள் வரவேற்பு
- நேபாளத்தில் தடகள போட்டி நடந்தது
வேலூர்:
வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி- சாவித்திரி தம்பதியினரின் மகள் கோமதி.
இவர் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டை கடந்த மே மாதம் நிறைவு செய்தார்.
தஞ்சாவூரில் நடந்த 19 வயதுக்குட்பட்ட ஈட்டி எறிதலில் மாநில போட்டியில் கலந்து கொண்ட கோமதி, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஜம்முவில் நடந்த போட்டியிலும் 3-ம் இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து இந்தோ- நேபால் தடகள போட்டி நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் நடந்தது.
இதில் இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஈட்டி எறிதல் போட்டி கடந்த 13-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடந்தது.
இதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் வேலூரை சேர்ந்த கோமதி கலந்து கொண்டு 48.83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய வீராங்கனை கோமதிக்கு, கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க தடப்புடலாக ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி படித்த சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பிரதிநிதி பவுலின், வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க தலைவர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவரம் பள்ளி தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் வரவேற்றார்.
இதில் மாணவிக்கு மலர் மற்றும் சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- ஆயுதங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகிக்கும் வகையில் சிலர் தங்கி இருப்பதாக விருதம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் தங்கும் விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் (38), அவரது தம்பி கவுஸ்பாஷா (31), வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா (36), மோகன்குமார் (31) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் காட்பாடி பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மன்சூர், கவுஸ்பாஷா ஆகியோர் ரவுடி ஜானியின் கூட்டாளிகள் என்பதும், சதீஷ்குமார் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடி ராஜா மீது காஞ்சிபுரத்தில் 4 கொலை உள்ளிட்ட 17 வழக்குகள், ரவுடி மோகன்குமார் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் கூட்டுக்கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியதாக 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி
- சேண்பாக்கம் பாலாற்றில் பணிகள் நிறைவடைந்தது
வேலூர்:
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுப்பணி துறையின் மூலம் வேலூர் அடுத்த சேண்பாக்கம் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இதில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனால் கடந்த 8-ந் தேதி முதல் காவிரி குடிநீர் சப்ளை நிறுத்த பட்டது.
வேலூர் மாநகராட்சி, மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், ஆரணி ஆகிய நகராட்சி பகுதிகள் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கனியம்பாடி, வாலாஜா, ஆற்காடு ஒன்றிய பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் சீரமைக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் வேலூர் மாநகராட்சி பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். பல இடங்களில் பொதுமக்கள் லாரி டிராக்டர்களில் வழங்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சேண்பாக்கம் பாலாற்றில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று காலை முதல் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை
- மகிழ்ச்சியில் பொதுமக்கள்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது . தக்காளி ஒரு கிலோ ரூ. 130 வரை விற்கப்பட்டு உச்சத்தை தொட்டது.
சமையலுக்கு அத்தியாவசிய பொருளான தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது விலை சற்று குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேனில் கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது
இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று இரவு குடியாத்தம் பகுதியில் வேனில் எடுத்துவரப்பட்ட தக்காளி இரண்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதை அறிந்த பொதுமக்கள் தக்காளி வேனை சூழ்ந்து அதிகளவில் வாங்கிச் சென்றனர்
சந்தையிலும் கடைகளிலும் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் சாலையோரம் வாகனத்தில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் தக்காளி வாங்கி சென்றனர்.
- வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவரது மகள் ஷாஜ லதா (வயது 36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாஜ லதாவின் தாய் உடல் நல குறைவால் இறந்து விட்டார். தாய் இறந்தது முதல் ஷாஜலதா யாரிடமும் பேசாமல் விரட்டியில் இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு சற்று லேசான மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் அரியூருக்கு வந்த ஷாஜ லதா அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று இரவு தனது சகோதரர் லட்சுமி காந்திற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.
வாட்ஸ் அப்பில் தகவலை பார்த்த அவரது சகோதரர் அலறியடித்துக் கொண்டு வேலூருக்கு விரைந்து வந்தார். ஷாஜலதா தங்கி இருந்த லாட்ஜ் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாஜலதா பிணத்தை மீட்டு பிரத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பா றை அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ லதா தற்கொ லைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
- பெண்கள் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செய்தனர்
வேலூர்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணுதுர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவில் வளாகத்தில் கோபாலபுரம் இளம் நட்சத்திரங்கள் மற்றும் ஆடி பவுர்ணமி விழா குழுவின் சார்பில் சந்தனத்தால் உருவாக்கப்பட்ட பாலாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். முககவசம் அணிந்து வந்தவர்களூக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
படவேடு ரேணுகாம்பாள் கோவில் திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
- அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும்
- கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஊசூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பள்ளியில் இருந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மற்ற அரசு பள்ளிகளில் இருப்பது போல் இந்த அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதிலளித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து தெள்ளூர் ஊராட்சி, வீராரெட்டிபாளையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, சரவணன், ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி தலைவர் தேவிசுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மலைவாழ் மக்கள் 75 பேர் மனு அளித்தனர்
- ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து உதவி கலெக்டருக்கு பரிந்துரை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல்மலை, நச்சிமேடு மற்றும் பள்ளக்கொல்லை ஆகிய 4 மலை கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பொது மக்களுக்கு பெரும்பாலும் ஜாதி சான்றிதழ் இல்லை.
மலைவாழ் மக்களுக்கு எளிதில் ஜாதி சான்றிதழ் கிடைக்கும் வகையில், முதல்முறையாக இலவசமாக ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முகாம் நேற்று நடந்தது. குருமலை மலை அடிவாரத்தில் நடந்த இந்த முகாம்க்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தாசில்தார் வேண்டா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் 75 பேர் மனு அளித்தனர்.
படிப்பறிவற்ற ஏழை எளிய மக்கள் ஜாதி சான்றிதழை கேட்டு இணையத்தில் எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் தவித்தனர்.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் தனது சொந்த செலவில், 2 கம்ப்யூட்டர்களை வரவழைத்து அந்த இடத்திலேயே ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார்.
இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து சப்-கலெக்டர்க்கு பரிந்துரை செய்தனர்.
- ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ லதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஷாஜ லதா (வயது 36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாஜ லதாவின் தாய் உடல்நல குறைவால் இறந்துவிட்டார். தாய் இறந்தது முதல் ஷாஜலதா யாரிடமும் பேசாமல் விரட்டியில் இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு சற்று லேசான மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் அரியூருக்கு வந்த ஷாஜ லதா அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று இரவு தனது சகோதரர் லட்சுமி காந்திற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.
வாட்ஸ் அப்பில் தகவலை பார்த்த அவரது சகோதரர் அலறியடித்துக் கொண்டு வேலூருக்கு விரைந்து வந்தார். ஷாஜலதா தங்கி இருந்த லாட்ஜ் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாஜலதா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ லதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்
- நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர் நாராயணன், ஜெயக்குமார், குப்புசாமி, நிர்வாகிகள் ராகேஷ் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய வேலைவாய்ப்பு கட்டுப்படுத்த திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் தங்களது கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்.
- நாளை தொடங்கி வருகிற ஆகஸ்டு 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது
- ஸ்ரீஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் தகவல்
வேலூர்:
வேலூர், கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஆடி வெள்ளி திருவிழா நாளை தொடங்கி வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி வரை 6 வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
முதலாவது வெள்ளி மஞ்சள் காப்பு அலங்காரமும்,2-வது வெள்ளி குங்குமப்பூ அலங்காரமும்,3-வது வெள்ளி புஷ்ப பாவாடை அலங்காரமும், 4-வது வெள்ளி சந்தன காப்பு அலங்காரமும்,5-வது வெள்ளி மீனாட்சி அலங்காரமும் 6-வது வெள்ளி சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
மேலும் ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி கங்கா பாலா ஈஸ்வரர் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மழைவளம் பெருகி நீர்வளம் பெருகவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும் கூட்டு பஞ்சபூத மகா யாகம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- 3 முறை தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்
- போலீசார் விசாரணை
வேலுார்:
சேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் முன்னாள் ராணுவ வீரர்.
இவரது மனைவி சொர்ணலதா. தம்பதியினருக்கு லோகேஷ் (21) உட்பட 3 மகன்கள் உள்ளனர்.
லோகேஷ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்தார்.
இதற்கிடையில் அவரது தம்பி கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆள் சேர்ப்பு முகாமில் ராணுவத்துக்கு தேர்வு பெற்றார்.
ஆனால் லோகேஷ் 3 முறை ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டும் தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.
இதனால் விரக்தியடைந்த லோகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






