என் மலர்
வேலூர்
- போக்குவரத்து பாதிப்பு-பொதுமக்கள் அவதி
- பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வேண்டும்
வேலூர்:
வேலூர் மாநகரம், முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும் வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்றை கொண்டது. இந்தியாவில் அகழி யுடன் கூடிய ராணுவ ரீதியாக கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோட்டை என்ற பெருமை கொண்டது.
வேலூர் நகராட்சி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1947-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு 40 வார்டுகள் கொண்ட நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகர எல்லை விரிவாக்கத்தில் தாராபடவேடு, சத்துவாச்சாரி நகராட்சிகளுடன் அல்லாபுரம், தொரப்பாடி, சேண்பாக்கம் பேரூராட்சிகள் மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
தொழில் நகரமாக விளங்கும் வேலூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்து போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக காட்சி அளிக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மாநகராட்சி குப்பையை எரிக்காமல் முறையாக அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் மண்ணை சுத்தப்படுத்த மாற்று ஏற்பாடு, கோட்டை அகழி நீர் வெளியேறும் ஆங்கிலேயர் காலத்து கால்வாயை மீட்பது, கன்சால்பேட்டை, இந்திரா நகர் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்று வது, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு நோக்கங்களோடு தொடங்கப்பட்டது.
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநகரில் பூங்கா அமைத்தல், சாலைகள் புதுப்பித்தல், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.
இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகி விட்டன. சில தெருக்களில் சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் லேசான தூறல் விழுந்தாலே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட தெருக்கள் சேறும், சகதியுமாய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவி கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாக னங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து காயங்களுடன் செல்வது வாடிக்கையாகி விட்டது.
வேலூர் காகிதப்பட்டறை கிரவுண் தியேட்டரில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து பணிகள் முடிந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த 2 நாட்களாக பெய்துவரும் சாரல் மழையின் காரணமான, சாலை பள்ளங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கொட்டப்பட்டிருந்த மண் பூமி உள்வாங்கியது. இன்று காலை குடிநீர் கேன்களை ஏற்றி லோடு ஆட்டோ ஒன்று அந்த வழியாக சென்றது. சாலையில் ஆங்காங்கே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஆட்டோவின் சக்கரம் சிக்கிக்கொண்டது. என்னசெய்வது என தெரியாமல் தவித்த டிரைவர் நீண்ட நேரம் கழித்து, அந்த பகுதிகள் உதவியுடன் ஆட்டோவை பள்ளத்தில் இருந்து மீட்டு எடுத்து சென்றார்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதித்தது. இதே போல மாநகரில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் சின்னாபின்னாமாகுகிறது. பணிகள் தொடங்கி அரை குறையாக உள்ள இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டும்.
- பீஞ்சமந்தை மலைக்கு பஸ் இயக்கப்படும்
- அமைச்சர் துரைமுருகன் தகவல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்திற்க்கு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை சாலை வசதி இல்லை.
இதனை சுற்றி உள்ள மலை கிராமங்களில் 35 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
சாலை வசதி இல்லாததால் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டதோடு, உயிரிழப்புகளும் நடந்தது.
இதனால் தங்கள் மலை கிராமங்களுக்கு முறையான தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி, கோரிக்கை வைத்தனர்.
அதன்படி முதல் கட்டமாக முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை 6.4 கிலோ மீட்டர் தொலைவு ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் முதல் முறையாக தார்சாலை அமைக்கப்பட்டது.
இதனை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், அணைகட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ரிப்பன்வெட்டி துவக்கி வைத்தனர்.
இதனையடுத்து தொடர்ந்து பீஞ்சமந்தை மலை மீது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அரசின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மலைவாழ் மக்கள் சுயதொழில் தொடங்க நிதி உதவி, வீடு கட்ட ஆணை, சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை என ரூ.9 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் பேசியதாவது:-
பஸ் வசதி
இந்த ஊருக்கு ரோடு போடுவது தண்ணிபட்ட பாடு. என்னமோ இந்த பாரஸ்டே இவங்களது மாறி வனத்துறையினர் பண்ணுறாங்க மந்திரி சொன்னா கூட கேட்க மாட்டேங்குறாங்க. கொஞ்ச நீக்கு போக்கோடு நடந்துகொள்ள வேண்டும்.
பீஞ்சமந்தைக்கு தேவையான டவரை பாராளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டியது. கதிர் ஆனந்திடம் சொல்லி அமைத்துகொடுக்க சொல்கிறேன்.
இந்த ஆட்சி வந்தபிறகு மலை வாழ் மக்களுக்கு பல திட்டங்களை செய்துள்ளோம்.
நான் யூடியூப் பக்கம் போனால் மலைவாழ் மக்கள் வாழ்க்கையை தான் அதிகம் பார்ப்பேன். திம்மம் பாரஸ்ட், சந்தியமங்கலம் போன்ற இடங்களில் மக்கள் வாழ்வதை பார்பேன். அதில் பழங்குடி மக்கள் வாழ்க்கையை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். மிருகத்தோடு மிருகமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.
பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு விரைவில் சோதனை ஓட்டம் முடிந்த பின்பு, மினி பஸ் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர் சி.பாஸ்கரன், துணை பெருந்தலைவர் சித்ரா குமாரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் , துணைத் தலைவர் ரேணுகாதேவி, பீஞ்சமந்தை ஊராட்சி மன்றத் தலைவர் ரேகா ஆனந்தன், துணைத் தலைவர் கம்சலா சுந்தரேசன் வேப்பங்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
- பட்டா பெயர் திருத்தத்திற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
குடியாத்தம் அடுத்த தனகொண்ட பல்லி அருகே உள்ள கொட்டமிட்டா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
ஏழைகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.
இலவச வீட்டு மனை பட்டா வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படுகிறது.
இதனால் கூலி வேலை செய்யும் ஏழைகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.
எனவே இலவச வீட்டு மனை பட்டாவிற்கு லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
வேலூர் அடுத்த பொய்கை மோட்டூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் அக்னி வேல்முருகன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் மனு அளித்து உள்ளனர்.
மனுக்கள் அதிகமாக இருப்பதால் அதனை விசாரித்து தீர்வு காண காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.
எனவே பிறப்பு இறப்பு சான்று சிறப்பு முகாம் நடத்துவது போல் பட்டா பெயர் திருத்தத்திற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
- வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது
- 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் இன்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், வேலூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கினார் .
மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மாவட்டத் துணைத் தலைவர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
- போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பன்மடங்கி கிராமத்தைச் சேர்ந்த கோபி (வயது 23), சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி கோபி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர.
அதன்பேரில் போலீசார் கோபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
- பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
விண்ணப்பங்கள் பதிவு
இந்த திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 68 ரேசன் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 38 கடைகள், ஊராட் சிகளில் 312 கடைகள் என மொத்தம் 418 கடைகளுக்கு 397 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தெரு, நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சில இடங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது.
கூட்டம்
பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு விண்ணப்பங்களை கொடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேலூர், சலவன்பேட்டை பள்ளியில் நடந்த முகாமில் ஏரளமான பெண்கள் குவிந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை கட்டுப்படுத்தி, அனைவரும் வரிசையில் நின்று விண்ணப்பம் வழங்குமாறு அறிவுறுத்தினர்.
மேலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி 2-வது கட்டமாக அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்க உள்ளது.
- ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை ஆகிய மலை ஊராட்சிகளில் 86-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 35- ஆயிரத்துக்கும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களது 100 ஆண்டுகால முக்கிய கோரிக்கையாக இருப்பது சாலை வசதி மட்டுமே. முத்துக் குமரன் மலையடிவாரத் தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக, இந்த மலைக்கு செல்ல தார் சாலை வசதி இல்லாததால் மக்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்து வந்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தது.
முத்துக்கும ரன்மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை 6.55 கிலோ மீட்டர் தூரத் திற்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. பின்னர், 15.08 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு தார்சாலையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று பீஞ்சமந்தை ஊராட்சியில் நடந்தது.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன். தங்கம் தென்னரசு, மதிவேந்தன், சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று தார் சாலையை திறந்து வைத்து, மலைவாழ் மக்கள் 764 பயனாளிகளுக்கு ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு. தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்யாவதிபாஸ்கரன், துணைத் தலைவர் ரேணுகா தேவிபெருமாள்ராஜ், வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி, ஒன்றிய கவுன்சிலர் அரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் பீஞ்சமந்தை மலைக்கு என அரசு பஸ் போக்குவரத்து வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.
- கணியம்பாடி தி.மு.க. பிரமுகர் புகார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.
அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.
நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.
இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன்என்ப வரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பது இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும்
- விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 எக்டர் நிலத்திற்கு 6.4 எக்டர் அளவான மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட அந்த இடம் எங்களுக்கு வேண்டாம்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.
எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி வனத்துறையினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.
நேற்று வேலூர் சப்-கலெக்டர் கவிதா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
- தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.
அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.
நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.
இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன் என்பவரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும் இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் ஆய்வு
- பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
தார்சாலை அமைப்ப தற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர்.
தற்போது வழங்க ப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.
எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறை யினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.
அதன்படி இன்று காலை வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அளவீடு பணி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாலிபர் கைது
- 3 பேரை தேடி வருகின்றனர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் யுவராணி(வயது 39). இவர், சேம்பள்ளியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக, ஜங்காலப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த்(23) தன் நண்பர்கள் 3 பேருடன், யுவராணி பணிபுரியும் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் மாலை சென்று தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது யுவராணியை தாக்கிய நிறுவனத்தை சேர்ந்த திலகவதி என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து, அவரையும் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த வழியாக சென்ற மின்வாரிய ஊழியர் பாபு தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரையும் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து, இதுகுறித்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்த தாலுகா போலீசார், பெண் களையும் அரசு ஊழியரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில், ஸ்ரீகாந்தை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.






