என் மலர்
வேலூர்
- ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை ஆகிய மலை ஊராட்சிகளில் 86-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 35- ஆயிரத்துக்கும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களது 100 ஆண்டுகால முக்கிய கோரிக்கையாக இருப்பது சாலை வசதி மட்டுமே. முத்துக் குமரன் மலையடிவாரத் தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக, இந்த மலைக்கு செல்ல தார் சாலை வசதி இல்லாததால் மக்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்து வந்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தது.
முத்துக்கும ரன்மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை 6.55 கிலோ மீட்டர் தூரத் திற்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. பின்னர், 15.08 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு தார்சாலையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று பீஞ்சமந்தை ஊராட்சியில் நடந்தது.
விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன். தங்கம் தென்னரசு, மதிவேந்தன், சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று தார் சாலையை திறந்து வைத்து, மலைவாழ் மக்கள் 764 பயனாளிகளுக்கு ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
விழாவில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு. தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்யாவதிபாஸ்கரன், துணைத் தலைவர் ரேணுகா தேவிபெருமாள்ராஜ், வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி, ஒன்றிய கவுன்சிலர் அரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் பீஞ்சமந்தை மலைக்கு என அரசு பஸ் போக்குவரத்து வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.
- கணியம்பாடி தி.மு.க. பிரமுகர் புகார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.
அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.
நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.
இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன்என்ப வரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பது இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும்
- விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 எக்டர் நிலத்திற்கு 6.4 எக்டர் அளவான மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட அந்த இடம் எங்களுக்கு வேண்டாம்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.
எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி வனத்துறையினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.
நேற்று வேலூர் சப்-கலெக்டர் கவிதா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
- தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.
அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.
நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.
இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன் என்பவரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும் இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் ஆய்வு
- பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
தார்சாலை அமைப்ப தற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர்.
தற்போது வழங்க ப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.
எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறை யினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.
அதன்படி இன்று காலை வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அளவீடு பணி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாலிபர் கைது
- 3 பேரை தேடி வருகின்றனர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் யுவராணி(வயது 39). இவர், சேம்பள்ளியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக, ஜங்காலப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த்(23) தன் நண்பர்கள் 3 பேருடன், யுவராணி பணிபுரியும் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் மாலை சென்று தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது யுவராணியை தாக்கிய நிறுவனத்தை சேர்ந்த திலகவதி என்பவர் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து, அவரையும் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த வழியாக சென்ற மின்வாரிய ஊழியர் பாபு தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரையும் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து, இதுகுறித்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்த தாலுகா போலீசார், பெண் களையும் அரசு ஊழியரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கில், ஸ்ரீகாந்தை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
- அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.
மண்டல செயலாளர் குமார் பொருளாளர் பாபு மண்டல துணைத்தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கார்த்தி அண்ணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் கூடுதல் வகுப்பறைகளை கட்ட வேண்டும். காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவியை நிரப்ப வேண்டும்.
அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும். ஆறுகள் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.இந்து கோவில்களை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இளைஞர் அணி மண்டல தலைவர் மோகன் மற்றும் திரளான பாஜகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- போக்சோவில் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த அரிமலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 20).
இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணை சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அவர்களை கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் மைனர் பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெங்கடேசன், மைனர் பெண்ணை பாலியில் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மைனர் பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- 2 நாட்களாக பைப்லைன் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
- அதிகாரிகள் பேச்சு வார்த்தை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் கொண்டு வரப்படும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் வேலூர் மாநகராட்சிக்கு தண்ணீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களாக பைப் லைனில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் சைதாப்பேட்டை பிடிசி ரோடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி மூலம் குடிநீர் வழங்குவதாகவும் மறியலை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.
- வயது 18-லிருந்து 40 ஆக இருத்தல் வேண்டும்
- கட்டணம் ஏதும் கிடையாது
வேலூர்:
வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதில் பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18-லிருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்றவை ப்பவர், மின்சாரபயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர், உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இந்த பயிற்சி தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு வழங்கப்படும். பயிற்சியானது தையூரில் தமிழ்நாடு கட்டுமான கழகம் அமையுள்ள இடத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும், பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
தினமும் ரூ.800
மேலும் 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமான கழகம், எல்&டி திறன் பயிற்சி நிலையம் இணைத்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சிகள் 2023 ஆகஸ்டு 15-ந் தேதி முதல் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேலூர் மாநகராட்சியில் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறை
- வாகனங்களும் தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
அந்தந்த மண்டலங்களில் உள்ள குப்பை கிடங்குகளில் வைத்து பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சிமென்ட் தொழிற்சாலைக்கும் அனுப்பி வைத்தனர்.
இதற்காக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 200 பேர், ஒப்பந்த பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி முழுவதும் ஒட்டுமொத்த குப்பைகளையும் அகற்றும் பணி மாநகராட்சி வசம் இருந்தது.
இந்நிலையில் மாநகராட்சியில் குப்பைகள் அனைத்தையும், வீடு, வீடாக சென்று சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சம்பளம் முதற்கொண்டு டெண்டர் எடுக்கும் நிறுவனங்களே வழங்கிவிடும்.
மாநகராட்சி நிரந்த பணியாளர்கள் மூலம் கால் வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் குப்பைகள் அள்ள பயன்படுத்திய வாகனங்களும் தனியாருக்கு வாடகைக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தால், தனியாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான ஆலோச னைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தகவல்
- அணைக்கட்டில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
ஆணையாளர் சுதாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் சித்ரா குமார பாண்டியன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு பேசியதாவது:-
அணைக்கட்டு தொகுதியில் பொது மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாக முத்துக் குமரன் மலை அடிவாரத்தில்இருந்து பீஞ்ச மந்தை வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5.50 கோடியில் தார் சாலை பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.
நாளை மறுநாள் நீர்ப் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைத்து, அந்த வழித்தடத்தில் ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை வரை அரசு மினி டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
மேலும் ஆயிரக்க ணக்கான ஏழை எளிய மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
தொகுப்பூதியம்
இதனையடுத்து பேசிய கவுன்சிலர் சின்னப்பள்ளி குப்பத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை.
இரவு நேரங்களில் ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கவுன்சிலர் சுதாகர் பேசும்போது ஊராட்சி களில் மேற்கொள்ளப்படும் பணியினை ஒன்றிய பொறியாளர்கள் பார்வையிடுவதில்லை என்றார்.
அப்போது ஒரு கவுன்சிலர் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு மாததொகுப்பு ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த விதமான தொகுப்பூதியமும் வழங்குவதாக அறிவிக்க வில்லை. ஆகவே கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய கவுன்சிலர், ஒன்றியக் குழு தலைவர்களுக்கும் மாத ஊதியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையாளர் சுதாகரன் நாங்கள் இதுகுறித்து அரசுக்கு கடிதம் அனுப்புகிறோம். என்று கூறினார்.
முடிவில் அலுவலக உதவியாளர் நன்றி கூறினார்.






