என் மலர்
உள்ளூர் செய்திகள்

நோயாளிகளை நிற்க வைத்து வைத்தியம் பார்த்ததாக புகார்
- உறவினர்கள் கடும் வாக்குவாதம்
- அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் இல்லை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லை. மேலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக வந்த நோயாளிகளை டாக்டர்கள் நிற்கவைத்து வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் ஆவேசமடைந்து உட்கார வைத்து வைத்தியம் பார்க்காமல் நிற்க வைத்தே வைத்தியம் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






