என் மலர்tooltip icon

    வேலூர்

    • அகரம் ஆற்றில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் கருங்காலி ஊராட்சி, அகரம் ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியுடைய டிரைவர் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.

    • சோதனை தீவிரபடுத்த டி.ஐ.ஜி. உத்தரவு
    • ஆந்திர எல்லையோர சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி நிலையத்தில் நேற்று மாலை வேலூர் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து பரதராமி அடுத்த கன்னிகாபுரம் அருகே தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக காவல்துறையின் சோதனை சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் பரதராமி சோதனை சாவடி முக்கியமானது. இரவு நேரங்களில் கூடுதலாக வெளிச்சம் தேவைப்படுவதால் இங்கு உடனடியாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த சோதனை சாவடியில் இரவில் மிளிரும் வகையிலான நவீன பேரிகார்டுகள் அமைக்கப்படும்.

    வெளி மாநிலங்களில் வரும் வாகனங்களை கனரக வாகனங்கள், பஸ்கள், லாரிகள், கார்கள் என தனித்தனியாக அதன் பதிவு எண்களை பதிவு செய்ய வேண்டும்.

    தொடர்ந்து தினம் தோறும் வரும் வாகனங்கள் பதிவு எண்களை தனியாக குறிப்பிட்டு அதில் சந்தேகப்படுமான பொருட்கள் இருந்தாலும் சந்தேகம் இருந்தாலும் உடனடியாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் விழிப்பு டன் இருக்க வேண்டும் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் போதைப் பொருட்க ளான கஞ்சா குட்கா உள்ளிட்டவை கடத்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஒரு சப் இன்ஸ்பெக்டர் 4 போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உறவினர்கள் கடும் வாக்குவாதம்
    • அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் இல்லை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லை. மேலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக வந்த நோயாளிகளை டாக்டர்கள் நிற்கவைத்து வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் ஆவேசமடைந்து உட்கார வைத்து வைத்தியம் பார்க்காமல் நிற்க வைத்தே வைத்தியம் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்
    • ஒடுகத்தூர் கால்நடை ஆஸ்பத்திரியில் பரபரப்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 13). இவர் சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த சேவலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஒடுகத்தூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சென்றதும் சேவல் திடீரென ஆஸ்பத்திரி பின் புறம் உள்ள புதருக்குள் பறந்து சென்றது.

    புதருக்குள் சென்ற சேவலை தேடி சந்துரு சென்றார். அப்போது அங்கிருந்த மலைப்பாம்பு சேவலை விழுங்கி கொண்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துரு என் சேவல் போச்சி, என் சேவல் போச்சி என அழுதுகொண்டே புதருக்குள் இருந்து வெளியே வந்தான்.

    டாக்டர்கள் சிறுவனை விசாரித்தபோது, மலைப்பாம்பு சேவலை விழுங்கியதை கூறினர். இதைதொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்து வந்த ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான படை வீரர்கள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

    • திருச்சியில் விவசாய கண்காட்சி நடைபெறுவதால் தேதி மாற்றம்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறஉள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    மேலும் கடந்த மாதம் விவசாயிகளிடம் இருந்துபெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    வழக்கமாக வெள்ளிக்கிழமை தான் குறைதீர்வுகூட் டம் நடைபெறும். இந்தமாதம் வருகிற வெள்ளிக்கிழமை திருச்சியில் விவசாய கண் காட்சி நடைபெறுவதால் அங்கு விவசாயிகள் செல்ல உள்ளதால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கண்ணில் பலத்த காயம்
    • போலீசார் விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி செங்குட்டை பகுதியில் கடந்த 21-ந் தேதி ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கூழ்வார்க்கும் திருவிழாவும், இரவு பாட்டுக் கச்சேரியும் நடந்தது. அப்போது அதே பகு தியை சேர்ந்தமோகன், மணி இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கும், அதே பகுதியை கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன், மணி ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிகிச் சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். மோகனை தேடி வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பு-பொதுமக்கள் அவதி
    • பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாநகரம், முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும் வேலூர் கோட்டை சிப்பாய் புரட்சியின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்றை கொண்டது. இந்தியாவில் அகழி யுடன் கூடிய ராணுவ ரீதியாக கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்த கோட்டை என்ற பெருமை கொண்டது.

    வேலூர் நகராட்சி 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1947-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு 40 வார்டுகள் கொண்ட நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகர எல்லை விரிவாக்கத்தில் தாராபடவேடு, சத்துவாச்சாரி நகராட்சிகளுடன் அல்லாபுரம், தொரப்பாடி, சேண்பாக்கம் பேரூராட்சிகள் மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.

    தொழில் நகரமாக விளங்கும் வேலூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்து போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக காட்சி அளிக்கிறது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் மாநகராட்சி குப்பையை எரிக்காமல் முறையாக அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் மண்ணை சுத்தப்படுத்த மாற்று ஏற்பாடு, கோட்டை அகழி நீர் வெளியேறும் ஆங்கிலேயர் காலத்து கால்வாயை மீட்பது, கன்சால்பேட்டை, இந்திரா நகர் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்று வது, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற பல்வேறு நோக்கங்களோடு தொடங்கப்பட்டது.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநகரில் பூங்கா அமைத்தல், சாலைகள் புதுப்பித்தல், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

    இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகி விட்டன. சில தெருக்களில் சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் லேசான தூறல் விழுந்தாலே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட தெருக்கள் சேறும், சகதியுமாய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவி கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாக னங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து காயங்களுடன் செல்வது வாடிக்கையாகி விட்டது.

    வேலூர் காகிதப்பட்டறை கிரவுண் தியேட்டரில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து பணிகள் முடிந்த நிலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக பெய்துவரும் சாரல் மழையின் காரணமான, சாலை பள்ளங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கொட்டப்பட்டிருந்த மண் பூமி உள்வாங்கியது. இன்று காலை குடிநீர் கேன்களை ஏற்றி லோடு ஆட்டோ ஒன்று அந்த வழியாக சென்றது. சாலையில் ஆங்காங்கே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஆட்டோவின் சக்கரம் சிக்கிக்கொண்டது. என்னசெய்வது என தெரியாமல் தவித்த டிரைவர் நீண்ட நேரம் கழித்து, அந்த பகுதிகள் உதவியுடன் ஆட்டோவை பள்ளத்தில் இருந்து மீட்டு எடுத்து சென்றார்.

    இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதித்தது. இதே போல மாநகரில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் சின்னாபின்னாமாகுகிறது. பணிகள் தொடங்கி அரை குறையாக உள்ள இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டும்.

    • பீஞ்சமந்தை மலைக்கு பஸ் இயக்கப்படும்
    • அமைச்சர் துரைமுருகன் தகவல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்திற்க்கு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை சாலை வசதி இல்லை.

    இதனை சுற்றி உள்ள மலை கிராமங்களில் 35 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டதோடு, உயிரிழப்புகளும் நடந்தது.

    இதனால் தங்கள் மலை கிராமங்களுக்கு முறையான தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி, கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி முதல் கட்டமாக முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை 6.4 கிலோ மீட்டர் தொலைவு ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் முதல் முறையாக தார்சாலை அமைக்கப்பட்டது.

    இதனை நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், அணைகட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ரிப்பன்வெட்டி துவக்கி வைத்தனர்.

    இதனையடுத்து தொடர்ந்து பீஞ்சமந்தை மலை மீது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அரசின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

    இதில் மலைவாழ் மக்கள் சுயதொழில் தொடங்க நிதி உதவி, வீடு கட்ட ஆணை, சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை என ரூ.9 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் பேசியதாவது:-

    பஸ் வசதி

    இந்த ஊருக்கு ரோடு போடுவது தண்ணிபட்ட பாடு. என்னமோ இந்த பாரஸ்டே இவங்களது மாறி வனத்துறையினர் பண்ணுறாங்க மந்திரி சொன்னா கூட கேட்க மாட்டேங்குறாங்க. கொஞ்ச நீக்கு போக்கோடு நடந்துகொள்ள வேண்டும்.

    பீஞ்சமந்தைக்கு தேவையான டவரை பாராளுமன்ற உறுப்பினர் செய்ய வேண்டியது. கதிர் ஆனந்திடம் சொல்லி அமைத்துகொடுக்க சொல்கிறேன்.

    இந்த ஆட்சி வந்தபிறகு மலை வாழ் மக்களுக்கு பல திட்டங்களை செய்துள்ளோம்.

    நான் யூடியூப் பக்கம் போனால் மலைவாழ் மக்கள் வாழ்க்கையை தான் அதிகம் பார்ப்பேன். திம்மம் பாரஸ்ட், சந்தியமங்கலம் போன்ற இடங்களில் மக்கள் வாழ்வதை பார்பேன். அதில் பழங்குடி மக்கள் வாழ்க்கையை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். மிருகத்தோடு மிருகமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

    பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு விரைவில் சோதனை ஓட்டம் முடிந்த பின்பு, மினி பஸ் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்,

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர் சி.பாஸ்கரன், துணை பெருந்தலைவர் சித்ரா குமாரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் , துணைத் தலைவர் ரேணுகாதேவி, பீஞ்சமந்தை ஊராட்சி மன்றத் தலைவர் ரேகா ஆனந்தன், துணைத் தலைவர் கம்சலா சுந்தரேசன் வேப்பங்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    • பட்டா பெயர் திருத்தத்திற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    குடியாத்தம் அடுத்த தனகொண்ட பல்லி அருகே உள்ள கொட்டமிட்டா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ஏழைகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.

    இலவச வீட்டு மனை பட்டா வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படுகிறது.

    இதனால் கூலி வேலை செய்யும் ஏழைகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர்.

    எனவே இலவச வீட்டு மனை பட்டாவிற்கு லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    வேலூர் அடுத்த பொய்கை மோட்டூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் அக்னி வேல்முருகன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் பெயர் திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் மனு அளித்து உள்ளனர்.

    மனுக்கள் அதிகமாக இருப்பதால் அதனை விசாரித்து தீர்வு காண காலதாமதம் ஏற்படுகிறது.

    இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

    எனவே பிறப்பு இறப்பு சான்று சிறப்பு முகாம் நடத்துவது போல் பட்டா பெயர் திருத்தத்திற்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    • வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது
    • 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் இன்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், வேலூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கினார் .

    மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மாவட்டத் துணைத் தலைவர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பன்மடங்கி கிராமத்தைச் சேர்ந்த கோபி (வயது 23), சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக கூறி கோபி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர.

    அதன்பேரில் போலீசார் கோபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

    • பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

    விண்ணப்பங்கள் பதிவு

    இந்த திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 68 ரேசன் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 38 கடைகள், ஊராட் சிகளில் 312 கடைகள் என மொத்தம் 418 கடைகளுக்கு 397 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தெரு, நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டது.

    இருப்பினும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சில இடங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது.

    கூட்டம்

    பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு விண்ணப்பங்களை கொடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேலூர், சலவன்பேட்டை பள்ளியில் நடந்த முகாமில் ஏரளமான பெண்கள் குவிந்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை கட்டுப்படுத்தி, அனைவரும் வரிசையில் நின்று விண்ணப்பம் வழங்குமாறு அறிவுறுத்தினர்.

    மேலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி 2-வது கட்டமாக அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்க உள்ளது.

    ×