என் மலர்tooltip icon

    வேலூர்

    • வீடு தேடி உதவித்தொகை வரும்
    • அஞ்சல் அதிகாரி தகவல்

    வேலூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியம் என்ற நிலையில் வேலூர் கோட்ட அஞ்சலகங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம் என வேலூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முரளி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது. தகுதியுள்ள பயனாளிகள் மாதாந்திர உரிமைத் தொகையை அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்களிலும், டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலம் தங்கள் வீடுகளிலேயே தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெரும் பயனாளிகளும் இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவையை பயன்படுத்தி ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் ஆய்வு
    • 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு மாற்றாக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடியாத்தம் விநாயகபுரம் பயணியர் விடுதி அருகே 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள குடிநீர் தேக்க தொட்டியும், எம்.பி.எஸ்.நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவும், அசோக்நகர் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் ஐதர்புரம் பாலாற்று பகுதியில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான 9 குடிநீர் சப்ளை செய்யப்படும் கிணறுகளில் இருந்து அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் பைப்புகள் இணைக்கப்பட உள்ளது இந்த குடிநீர் பைப்புகள் இணைக்கும் பாதையை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகராட்சி பொறியாளர், சிசில்தாமஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், ரேணுகாபாபு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    குடியாத்தம் நகராட்சியில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் இதனால் குடியாத்தம் நகராட்சி பொது மக்களுக்கு விரைவில் தினந்தோறும் குடிநீர் கிடைக்கும்.மேலும் தரைதள மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் இதனால் குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் பஞ்சம் என்பது இருக்காது என்றார்.

    • 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும்.

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் 1,700 கிலோ வெள்ளியால் ஸ்ரீசக்தி கணபதி விக்கிரகம் வடிவமைத்து கற்கோவில் கட்டப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தற்போது 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வைடூரிய கிரீடத்தை நேற்று சக்திஅம்மா, ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.

    இதுவரை உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக 700 கேரட் அளவிலான கல்லை கருதுகின்றனர்.

    ஆனால் தற்போது ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைடூரிய கல்தான் உலகிலேயே மிகப்பெரிய கல்லாகும்.

    இதன் தோராய மதிப்பு ரூ.5 கோடி இருக்கும். வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும். வைடூரிய கிரீடம் அணிந்த ஸ்ரீசக்தி கணபதியை நாம் தரிசிக்கும்போது பலவகையான தோஷங்கள் நீங்கி, மன அமைதி, ஞானம், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
    • நெல் விவசாயத்தில் லாபம் எடுக்கும் நுட்பங்களை விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் சொல்லி கொடுக்க உள்ளனர்.

    வேலூர்:

    பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் கூறியதாவது:

    திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு முன்னோடி இயற்கை விவசாயிகளும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்களும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். குறிப்பாக, இந்நிகழ்ச்சி விவசாயிகளை வெறும் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி தொழில்முனைவோராகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பாரம்பரிய நெல் விவசாயத்திற்காக பல்வேறு விருதுகளை வென்ற கேரளாவைச் சேர்ந்த முன்னோடி பெண் விவசாயி புவனேஸ்வரி, 120 நெல் ரகங்களை மீட்டெடுத்த தெலுங்கானா விவசாயி ஸ்ரீகாந்த், 5 ஏக்கர் நிலத்தில் 160 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்த கர்நாடகா விவசாயி பி.கே. தேவராவ், பிரபல பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆகியோர் நெல் விவசாயத்தில் லாபம் எடுக்கும் நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லி கொடுக்க உள்ளனர்.

    அத்துடன் உணவு மருத்துவ நிபுணர் ஹீலர் சக்திவேல் யுவராஜ், பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்து பேச உள்ளார். மேலும், பாரம்பரிய அரிசியில் 214 பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்யும் பெண் தொழில் முனைவர் மேனகா, மதிப்பு கூடுதல் துறையின் சாதனை புரிந்து வரும் தான்யாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் மணி ஆகியோர் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பேச உள்ளனர்.

    இதுதவிர, முன்னோடி விவசாயிகள் பெரிய சாமி (கரூர்), செந்தில் குமார் (திருவாரூர்), விஜய் மகேஷ் (தஞ்சாவூர்), மஹாலட்சுமி (காஞ்சிபுரம்) உள்ளிட்டோர் தங்களுடைய வெற்றி அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இதில் இடம்பெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இத்திருவிழா ஜூலை 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலூர் உழவர் சந்தையில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் பனம்பழங்களை, வட மாநிலத்தினர் தேடித்தேடி வாங்கி செல்கின்றனர்.
    • பழத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை.

    பனை மரத்தில் நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும்.

    பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினுள் சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் சாப்பிடலாம். பனம்பழம் சிறந்த சத்துணவாகும்.

    பனம் பழத்தின் அருமை நம்மூர்காரர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் வடமாநிலத்தவர்கள் பனம் பழத்தை பல்வேறு உணவாக மாற்றி சாப்பிடுகின்றனர்.

    வேலூர், சத்துவாச்சாரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிகிச்சைக்காக வந்துள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் சமைத்து சாப்பிடுகின்றனர்.

    வேலூரில் விற்பனை செய்யப்படும் பனம் பழங்களை வாங்கிச் செல்லும் வட மாநிலத்தினர் அதனை தீயில் சுட்டு சாப்பிடுகின்றனர். மேலும் பனம்பழத்தை தோல் உரித்து கொட்டை மேல்புறத்தில் உள்ள நார் பகுதியை கூழாக்குகின்றனர். இதில் விதவிதமாக பஜ்ஜி மற்றும் போண்டாவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.

    வேலூர் உழவர் சந்தையில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் பனம்பழங்களை, வட மாநிலத்தினர் தேடித்தேடி வாங்கி செல்கின்றனர்.

    பார்ப்பதற்கே அரிய பொருளாக காணப்படும் பனம்பழத்தை உள்ளூர்வாசிகள் யாரும் வாங்குவதில்லை. அதனை கடைகளில் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். ஆனால் வட மாநிலத்தினர் இந்த பனம் பழத்தை தேடி தினந்தோறும் உழவர் சந்தைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 50 பழங்களையே வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    அதிகாலை நேரத்திலேயே வடமாநிலத்தினர் தேடி பிடித்து வாங்கி செல்வதால், உடனே தீர்ந்து விடுகிறது. பழத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உழவர் சந்தைக்கு பனம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    அதற்கேற்ப வட மாநிலத்தினரும் பனம்பழங்களை அதிகம் வருகின்றனர். அதிக பழங்கள் கொண்டு வந்தாலும் அவை அனைத்தும் சிறிது நேரத்திலேயே விற்பனையாகி விடுகிறது. பனம்பழம் விற்பனையும் சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது
    • போலீஸ் குவிப்பு-பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமை தாங்கினார்.

    தேர்தல் நடந்த கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் முகமது சகி ஆகியோர் அனுமதிக்க ப்பட்டனர்.

    பின்னர் கூட்டரங்கு கதவுகள் மூடப்பட்டது. யாரும் உள்ளே செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியில் இன்று நடந்த தேர்தலின் போது 55 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். இந்த தேர்தலில் கவுன்சிலர்கள் 10 பேர் போட்டியிட்டனர்.

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது .இதில் கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக சென்று வாக்கு பட்டியில் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சக்கரவர்த்தி சித்ரா, சுதாகர் ,சேகர், நித்திய குமார், முருகன், ரஜினி, சண்முகம் மற்றும் கவுன்சிலர் அஸ்மிதா ஆகியோர் மாநகராட்சி மேல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன் 11 வாக்குகளை பெற்றதால் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 7 பேர் உள்ளனர். இந்தநிலையில் கூடுதலாக தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் சரவணனுக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலையொட்டி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தால் பரபரப்பாக காணப்பட்டது.

    வரி விதிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புதிய கட்டிடங்கள் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, சொத்து வரி, தொழில் வரி பிற வரிகள் விதிப்பு, நில உரிமை மாற்றம் மாநகராட்சி நிலங்களை வேறு துறைகளுக்கு குத்தகைக்கு அனுமதித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிதி நிலை கட்டுப்பாடு, வரவு, செலவு திட்டம் பரிசீலித்தல் போன்றவை மேற்கொள்ள உள்ளது.

    • வருகிற 31-ந் தேதி முதல் வழங்க உத்தரவு
    • அசல் நகல் வருகிற 28-ந் தேதி (நாளைக்குள்) ஒப்படைக்க வேண்டும்

    வேலூர்:

    தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது.

    மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் வகையில் உடனடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண் சான்றிதழ் வைத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். மேலும் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    அந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா, அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவர்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் நகல் வருகிற 28-ந் தேதி (நாளைக்குள்) ஒப்படைக்க வேண்டும்.

    இதைத் தொடர்ந்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் வருகிற 31-ந் தேதி முதல் மாணவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திடீரென சாலையின் குறுக்கே வந்தது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அடுத்த செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). இவர் தனது பைக்கில் நண்பருடன் காட்பாடியில் இருந்து செங்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப் போது, சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்தது, அதன்மீது ரமேஷ் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக, அங்கி ருந்தவர்கள் படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
    • அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது

    வேலூர்:

    தமிழ் ஆட்சி மொழி சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்று அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளது.

    இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை தந்தை, தாய், ஊர் பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என்று ஆணை வெளியி டப்பட்டது.

    ஆனால் அரசு அலுவலர்கள் கூட முன்னெழுத்தை முழுமையாக தமிழில் எழுதுவதில்லை என்றும், எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பினை செயற்ப டுத்தும் வகையிலும் உயர் அலுவலர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் பெயர்களை எழுதும்போதும், கையொப்பமிடும்போதும் தமிழிலேயே எழுதப்பட்ட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பாவது:-

    அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க் கப்படுகிறது. அதில் தெரி வித்துள்ளவாறு, அரசு அலுவலகங்களில் பணிபு ரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறை களின்படி தங்களின் பெயர்களை எழுதும்போது கையொப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே எழுத வேண்டும். இவ்லாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    மருத் துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு-2 பணிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் ஆட்சேர்ப்புக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

    முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் முன்னாள் படைவீரர்களுக்கு வயது உச்ச வரம்பு எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம் பிசி, டிஎன்சி இனப்பிரி வினை சார்ந்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல் லை, ஓசி பிரிவி னைச் சார்ந்தவர்களுக்கு 50 வயதும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பட்டுள்ளது.

    தகுதிவாய்ந்த முன்னாள் படைவீரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் www. mrb.tn.gov.in என்ற இணையதள மூலம் விண் ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் அறிய, வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சாலை அமைக்க தீவிரம்
    • இட வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை மலை ஊராட்சி, அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.

    அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 எக்டர் நிலத்திற்கு 6.4 எக்டர் அளவான மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

    வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட அந்த இடம் எங்களுக்கு வேண்டாம்.

    தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.

    எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

    இதையடுத்து வனத்துறையினருக்கு இடம் வழங்க, வருவாய்த் துறையினர் வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினருடன், வனத்து றையினர் இணைந்து காகிதப்பட்டறை மலையில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    நடந்து சென்று கலெக்டர் ஆய்வு

    வனத்துறைக்கு இடம் அளந்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அல்லேரி மலையில் சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

    வரதலம்பட்டு மலை கிராம அடிவாரத்தில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்லேரி மலை உச்சிக்கு கலெக்டர் நடந்து சென்று, எந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

    சாலையை அடித்து செல்லாத வகையில் மழை நீரை எவ்வாறு அப்புறப்ப டுத்துவது, வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் அளவிற்கு இட வசதி உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரேகாஆனந்தன், துணை தலைவர் கம்சலா சுந்தரேசன், அலாலேரி கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உள்ளிட்டோர் உள்ளிட்டனர்.

    • ரூ.11.50 லட்சம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி கிடைத்தது
    • பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை செலுத்துகின்றனர்

    அணைக்கட்டு:

    வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் சயெ்து செல்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இந்நிலையில், நேற்று எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, வேலூர் சரக ஆய்வாளர் சுரேஷ்குமார், குடியாத்தம் சரக ஆய்வாளர் பாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    இதில், பக்தர்கள் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள், தன்னார்வ லர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    ×