என் மலர்
வேலூர்
- பா.ஜ.க. பிரமுகர் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 38) இவர் பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
இவர் கடந்த 23-ந் தேதி சமூக வலைதளத்தில் (பேஸ்புக்) வீடியோ ஒண்றுக்கு கமாண்ட் பன்னி தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் அவரின் குடும்பத்தாரை இழிவு படுத்தி அனுப்பியுள்ளார்.
இதனைப்பார்த்த ஒடுகத்தூர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து வேப்பங்குப்பம் போலீசார் தலைமறைவாக இருந்த விமல்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒடுகத்தூரில் சுற்றி திரிந்த விமல்குமாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ஒடுகத்தூரில் சர்சையை ஏற்படுத்தியது.
- ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் அழைத்து சென்றனர்
- பழுதடைந்த மலை கிராம சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
அணைக்கட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த தீத்தானூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் ( வயது 17). இவர் கடந்த சில மாதங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
சந்தீப் ஜமுனாமரத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று புற நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்குள்ள டாக்டர்கள் சந்தீப்பை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர்.
சந்தீப் தனது சொந்த ஊரான தீத்தானூர் மலை கிராமத்திலிருந்து குடிகம் மலை, கத்தியப்பட்டுமலை, பெரியஏரியூர், ஒடுக்கத்தூர் வழியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி பைக்கில் சந்தீப் தனது பெற்றோருடன் குடிகம் வழியாக கத்தியப்பட்டு மலைகிராமத்தில் இருந்து இன்று காலை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சந்திப்புக்கு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார்.
இது குறித்து அந்த மலை கிராம மக்கள் பீஞ்சமந்தைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகன டிரைவருக்கு போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
பைக்கில் அழைத்து சென்றனர்
ஒரு மணி நேரம் கழித்து டிரைவர் சந்தீப் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். மலைகிராம சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் ஆம்புலன்ஸ் வாகனம் மலைப்பகுதியில் ஏறாது.
எனவே அவரை மலையடிவாரத்திற்கு அழைத்து வந்து விடுங்கள். அங்கிருந்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்து ள்ளார்.
இதன் அடுத்து மலை கிராம மக்கள் அவரை மிகவும் சிரமத்துடன் பைக்கில், பெரிய ஏரியூர் மலையடிவாரத்திற்கு அழைத்து வந்ததனர்.
அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அடுக்கம்பாறையில் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மலை கிராமங்களுக்கு அவசர நேரத்தில் உதவு வதற்காகவே ஆம்புலன்ஸ் சேவை தொடங்க ப்பட்டுள்ளது.
சரியான சாலை வசதி இல்லாததால் வானங்கள் சொல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் பழுதடைந்த மலை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்
- கொடுங்கோல் அரசன் ஒருவன் கொன்றதை துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது
வேலூர்:
வேலூரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், கர்பலா போரில் நபிகள் நாயகத்தின் பேரன் ஹுசைன் மற்றும் அவரின் குடும்பத்தினரை பட்டினியிட்டு கொடுங்கோல் அரசன் ஒருவன் கொன்றதை துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இன்று வேலூர் சைதாப்பேட்டை, பிடிசி சாலை ஆகிய இடங்களில் ஷியா இஸ்லாமியர்கள் மார்பில் கத்திபோட்டு ரத்தம் சொட்ட, சொட்ட புனித போரில் ஹுசைன் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் தங்களை தாங்களே வருத்திக் கொண்டு மொகரம் பண்டிகையை அனுசரித்தனர்.
மேலும் முக்கிய வீதிகளில் இஸ்லாமிய பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
- உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்தாரா?
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னை, திருநின்றவூர், கோமதிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 41). இவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் வணிகப்பிரிவில் கிளர்க்காக வேலை செய்து வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் காட்பாடி ரெயில்வே யார்டுக்கு எதிர்ப்புறத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமார் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தப்ப முயன்ற போது கை முறிந்தது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பாஷா, பெயிண்டு கடை உரிமையாளர்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர், இவரை செல்போ னில் தொடர்புகொண்டு, வசூர் ராஜா பேசுவதாகவும், ரூ. 3 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். பணம் தரவில்லை என்றால் உன்னையும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாஷா, தனது கடை ஊழி யர் சலீம் என்பவருடன் தனியார் ஷூ கம்பெனிக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
அப் போது, அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்து மடக் கிய வசூர் ராஜா, அவனது கார் டிரைவர் வெங்கடே சன் ஆகியோர், கத்தியைக் காட்டி, "நாளை உன் கடைக்கு வருவேன்.
ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து வை, இல்லை யென்றால் இந்த முறை கண்டிப்பாக கொலை செய்து விடுவேன்" என மிரட்டியதோடு, அவரிட மிருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சத்து வாச்சாரி போலீசில் பாஷா புகார் அளித்தார். இதையடுத்து வசூர் ராஜா பெருமுகையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரையும் அவருடன் இருந்த வெங்கடேசனையும் பிடிக்க முயன்றனர்.
அப்போது தப்பி செல்ல முயன்ற வசூர் ராஜா தவறி கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தொடர்ந்து அவரையும், வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன குமார் (வயது 30). இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தனகுமார் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த புது வசூரை சேர்ந்த வசூர் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் சந்தன குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.11, 500 -ஐ பறித்தனர்.
இதுகுறித்து சந்தன குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரிலும் போலீசார் வசூர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சப்- கலெக்டர் உத்தரவு
- உடனடியாக புதிய பணியிடத்தில் சென்று சேர வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி பீஞ்சமந்தையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த குணராஜ் அணைக்கட்டுக்கும், நந்திவர்மன் கீழ்கிருஷ்ணா புரத்தில் இருந்து வெட்டுவா னத்திற்கும், முனிரத்தினம் பொய்கையில் இருந்து பள்ளிகொண்டாவுக்கும், தமிழ்அரசு பூதூரில் இருந்து கீழாச்சூருக்கும், அபிலாஸ் சின்னபள்ளிக்குப்பத்தில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் பீஞ்சமந்தைக்கு கூடுதல் பொறுப்பு, கார்த்தி கீழாச்சூரிலிருந்து செதுவாலைக்கும், சிவமூர்த்தி ஒடுக்கத்தூரிலிருந்து கருங்காலிக்கும், தமிழழகன் அணைக்கட்டில் இருந்து திப்பசமுத்திரத்திற்கும், ஞானசுந்தரி பள்ளி கொண்டாவில் இருந்து பொய்கைக்கும், தங்கமுத்து வெட்டு வாணத்தில் இருந்து பூதூருக்கும், கிருஷ்ணவேணி கருங்காலியிலிருந்து கீழ்கிருஷ்ணாபுரத்திற்கும், குமரேசன் மேல்அர சம்பட்டில் இருந்து சின்ன பள்ளிக்குப்பத்திற்கும், அன்பு செதுவாலை யிலிருந்து மேல்அரசம்பட்டுக்கும் பணியிடமாற்றம் செய்து வேலூர் சப்-கலெக்டர் கவிதா உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பணியிட மாற்றம் செய்யப்ப ட்டவர்கள் உடனடியாக புதிய பணியி டத்தில் சென்று சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2-ம் வெள்ளியை முன்னிட்டு நடந்தது
- 1008 எலுமிச்சை பழத்தில் அலங்காரம் செய்யப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உமாமகேஸ்வரி உடனுறையான கைலாயநாதர் கோவிலில் ஆடி மாதம் 2-ம் வெள்ளியை முன்னிட்டு நேற்று 508 திருவிளக்கு பூஜை, கண்ணி பூஜை, சுமங்கலி பூஜை ஆகிய முப்பெரும் பூஜை நடைபெற்றது.
இதில், திருமணம் தடை, குழந்தை பாக்கியம், நோய் நொடி குணமாக, சுமங்கலி பூஜை, கண்ணிப் பூஜை, விளக்கு பூஜை மற்றும் உலக மக்கள் நன்மை வேண்டி 508 சுமங்கலி பெண் பக்தர்கள் விளக்கேற்றி மஞ்சள், குங்குமத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.
உடனுறையான உமாமகேஸ்வரி அம்மனுக்கு 1008 எலுமிச்சை பழத்தில் சிறப்பு ஆடை அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
- காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள குருராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகேந்திரன் இவருக்கு சொந்தமாக திருமலை குப்பம் பகுதியில் விளை நிலம் உள்ளது.
இதில் வழக்கமாக பயிர்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நிலத்தை சுற்றி பார்க்க சுகேந்திரன் சென்றுள்ளார் அப்பொழுது நிலத்தின் நடுவே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுகேந்திரன் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமையிலான குழுவினர் உடனடியாக 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பை மீட்டு அருகே உள்ள சாணம் குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
- 2-வது ஆடி வெள்ளியொட்டி நடந்தது
- பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
வேலூர்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கி ழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தின் 2-ம் வெள்ளிக்கி ழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையளட்டு வழிபட்டனர்.
ரத்தினகிரி கோவில்
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கை யம்மன் கோவில், சத்துவா ச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பா ளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெட்டுவாணம்
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
படவேடு ரேணுகாம்பாள் கோவில் திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
- கண்ணீர் விட்டு கதறி பெண்கள் வாக்குவாதம்
- விசாரணை நடத்தி அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்
வேலூர்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தொரப்பாடியில் 160 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகளில் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மாற்றுத்திறனா ளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இதற்காக 24 மாற்று திறனாளிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் முன்னிலையில் குழுக்கள் நடந்தது. இதில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது.
இதனை கண்டதும் மற்ற மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மாற்றுத்திற னாளிகளுக்கு 25 வீடுகளுக்கு குலுக்கல் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் 8 பேருக்கு மட்டுமே தற்போது வீடு ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். மற்றவர்களுக்கான வீடு என்ன ஆனது.
உடனடியாக அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையான வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கிருந்த மாற்றுத்தி றனாளி பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தங்களுக்கு வீடு கிடைக்காததை எண்ணி அவர்கள் மனமுடைந்தனர்.
அவர்களிடம் உதவி கலெக்டர் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார். கரிகிரி பகுதியில் மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன. அதில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில் :-
தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு இன்று வீடுகள் வழங்குவதற்கான குலுக்கல் நடைபெறும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் 8 பேருக்கும் மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு செய்து தந்துள்ளனர். மற்ற வீடுகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இது குறித்து முறையான விசாரணை நடத்தி அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அதிகாரிகள் கூறுகையில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது 8 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கைக்கு ஏற்கனவே வீடு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளை ஒதுக்குவது குறித்து கலெக்டர் முடிவு செய்வார் என்றனர்.
- 42 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு
- வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா கடத்து பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை தடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டவி ரோதமாக கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொ ருட்கள் விற்கப்படு கின்றனவா என திடீர் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
42 வழக்குகள் பதிவு
இதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.40,686 மதிப்புடைய சுமார் 7.056 கிலோ கிராம் குட்கா, ரூ.7,744 மதிப்புடைய 646 பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.வியாபாரிகள் மீது 42 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- வணிகர்கள் திடீர் சாலை மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் அடுத்த கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளி நிர்வாகத்தனர் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அருகில் உள்ள லாரி மெக்கானிக் ஷெட்டுகளுக்கு லாரிகள் செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அருகில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் லாரி மெக்கானிக்குகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறிய லில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






