என் மலர்
நீங்கள் தேடியது "வணிகப்பிரிவில் கிளர்க்காக வேலை"
- உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்தாரா?
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னை, திருநின்றவூர், கோமதிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 41). இவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் வணிகப்பிரிவில் கிளர்க்காக வேலை செய்து வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த முத்துக்குமார் நேற்று முன்தினம் காட்பாடி ரெயில்வே யார்டுக்கு எதிர்ப்புறத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமார் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.






