என் மலர்
வேலூர்
- 2-ம் வெள்ளியை முன்னிட்டு நடந்தது
- 1008 எலுமிச்சை பழத்தில் அலங்காரம் செய்யப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உமாமகேஸ்வரி உடனுறையான கைலாயநாதர் கோவிலில் ஆடி மாதம் 2-ம் வெள்ளியை முன்னிட்டு நேற்று 508 திருவிளக்கு பூஜை, கண்ணி பூஜை, சுமங்கலி பூஜை ஆகிய முப்பெரும் பூஜை நடைபெற்றது.
இதில், திருமணம் தடை, குழந்தை பாக்கியம், நோய் நொடி குணமாக, சுமங்கலி பூஜை, கண்ணிப் பூஜை, விளக்கு பூஜை மற்றும் உலக மக்கள் நன்மை வேண்டி 508 சுமங்கலி பெண் பக்தர்கள் விளக்கேற்றி மஞ்சள், குங்குமத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.
உடனுறையான உமாமகேஸ்வரி அம்மனுக்கு 1008 எலுமிச்சை பழத்தில் சிறப்பு ஆடை அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
- காப்பு காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள குருராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகேந்திரன் இவருக்கு சொந்தமாக திருமலை குப்பம் பகுதியில் விளை நிலம் உள்ளது.
இதில் வழக்கமாக பயிர்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நிலத்தை சுற்றி பார்க்க சுகேந்திரன் சென்றுள்ளார் அப்பொழுது நிலத்தின் நடுவே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுகேந்திரன் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமையிலான குழுவினர் உடனடியாக 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பை மீட்டு அருகே உள்ள சாணம் குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
- 2-வது ஆடி வெள்ளியொட்டி நடந்தது
- பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
வேலூர்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கி ழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தின் 2-ம் வெள்ளிக்கி ழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையளட்டு வழிபட்டனர்.
ரத்தினகிரி கோவில்
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கை யம்மன் கோவில், சத்துவா ச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பா ளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெட்டுவாணம்
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 2-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
படவேடு ரேணுகாம்பாள் கோவில் திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
- கண்ணீர் விட்டு கதறி பெண்கள் வாக்குவாதம்
- விசாரணை நடத்தி அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்
வேலூர்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தொரப்பாடியில் 160 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடுகளில் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மாற்றுத்திறனா ளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இதற்காக 24 மாற்று திறனாளிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் முன்னிலையில் குழுக்கள் நடந்தது. இதில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது.
இதனை கண்டதும் மற்ற மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மாற்றுத்திற னாளிகளுக்கு 25 வீடுகளுக்கு குலுக்கல் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் 8 பேருக்கு மட்டுமே தற்போது வீடு ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். மற்றவர்களுக்கான வீடு என்ன ஆனது.
உடனடியாக அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையான வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கிருந்த மாற்றுத்தி றனாளி பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தங்களுக்கு வீடு கிடைக்காததை எண்ணி அவர்கள் மனமுடைந்தனர்.
அவர்களிடம் உதவி கலெக்டர் கவிதா பேச்சுவார்த்தை நடத்தினார். கரிகிரி பகுதியில் மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்படுகின்றன. அதில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில் :-
தொரப்பாடி அடுக்குமாடி குடியிருப்பில் 25 பேருக்கு இன்று வீடுகள் வழங்குவதற்கான குலுக்கல் நடைபெறும் என அழைப்பு விடுத்தனர். ஆனால் 8 பேருக்கும் மட்டுமே வீடுகள் ஒதுக்கீடு செய்து தந்துள்ளனர். மற்ற வீடுகள் என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இது குறித்து முறையான விசாரணை நடத்தி அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அதிகாரிகள் கூறுகையில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது 8 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கைக்கு ஏற்கனவே வீடு தரப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளை ஒதுக்குவது குறித்து கலெக்டர் முடிவு செய்வார் என்றனர்.
- 42 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு
- வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா கடத்து பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களை தடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டவி ரோதமாக கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொ ருட்கள் விற்கப்படு கின்றனவா என திடீர் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
42 வழக்குகள் பதிவு
இதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.40,686 மதிப்புடைய சுமார் 7.056 கிலோ கிராம் குட்கா, ரூ.7,744 மதிப்புடைய 646 பீடிக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.வியாபாரிகள் மீது 42 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- வணிகர்கள் திடீர் சாலை மறியல்
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் அடுத்த கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளி நிர்வாகத்தனர் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அருகில் உள்ள லாரி மெக்கானிக் ஷெட்டுகளுக்கு லாரிகள் செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அருகில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் லாரி மெக்கானிக்குகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறிய லில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- வீடு தேடி உதவித்தொகை வரும்
- அஞ்சல் அதிகாரி தகவல்
வேலூர்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியம் என்ற நிலையில் வேலூர் கோட்ட அஞ்சலகங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம் என வேலூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முரளி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது. தகுதியுள்ள பயனாளிகள் மாதாந்திர உரிமைத் தொகையை அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்களிலும், டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலம் தங்கள் வீடுகளிலேயே தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெரும் பயனாளிகளும் இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவையை பயன்படுத்தி ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் ஆய்வு
- 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு மாற்றாக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.13 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடியாத்தம் விநாயகபுரம் பயணியர் விடுதி அருகே 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள குடிநீர் தேக்க தொட்டியும், எம்.பி.எஸ்.நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவும், அசோக்நகர் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் ஐதர்புரம் பாலாற்று பகுதியில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான 9 குடிநீர் சப்ளை செய்யப்படும் கிணறுகளில் இருந்து அம்ருத் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் பைப்புகள் இணைக்கப்பட உள்ளது இந்த குடிநீர் பைப்புகள் இணைக்கும் பாதையை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகராட்சி பொறியாளர், சிசில்தாமஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது நகரமன்ற உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், ரேணுகாபாபு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குடியாத்தம் நகராட்சியில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ரூ.13 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் இதனால் குடியாத்தம் நகராட்சி பொது மக்களுக்கு விரைவில் தினந்தோறும் குடிநீர் கிடைக்கும்.மேலும் தரைதள மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டும் பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் இதனால் குடியாத்தம் நகராட்சியில் குடிநீர் பஞ்சம் என்பது இருக்காது என்றார்.
- 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும்.
வேலூர்:
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் 1,700 கிலோ வெள்ளியால் ஸ்ரீசக்தி கணபதி விக்கிரகம் வடிவமைத்து கற்கோவில் கட்டப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வைடூரிய கிரீடத்தை நேற்று சக்திஅம்மா, ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.
இதுவரை உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக 700 கேரட் அளவிலான கல்லை கருதுகின்றனர்.
ஆனால் தற்போது ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைடூரிய கல்தான் உலகிலேயே மிகப்பெரிய கல்லாகும்.
இதன் தோராய மதிப்பு ரூ.5 கோடி இருக்கும். வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும். வைடூரிய கிரீடம் அணிந்த ஸ்ரீசக்தி கணபதியை நாம் தரிசிக்கும்போது பலவகையான தோஷங்கள் நீங்கி, மன அமைதி, ஞானம், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்கள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
- நெல் விவசாயத்தில் லாபம் எடுக்கும் நுட்பங்களை விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் சொல்லி கொடுக்க உள்ளனர்.
வேலூர்:
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய நெல் திருவிழா' வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் கூறியதாவது:
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு முன்னோடி இயற்கை விவசாயிகளும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்களும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். குறிப்பாக, இந்நிகழ்ச்சி விவசாயிகளை வெறும் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி தொழில்முனைவோராகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் விவசாயத்திற்காக பல்வேறு விருதுகளை வென்ற கேரளாவைச் சேர்ந்த முன்னோடி பெண் விவசாயி புவனேஸ்வரி, 120 நெல் ரகங்களை மீட்டெடுத்த தெலுங்கானா விவசாயி ஸ்ரீகாந்த், 5 ஏக்கர் நிலத்தில் 160 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்த கர்நாடகா விவசாயி பி.கே. தேவராவ், பிரபல பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆகியோர் நெல் விவசாயத்தில் லாபம் எடுக்கும் நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லி கொடுக்க உள்ளனர்.
அத்துடன் உணவு மருத்துவ நிபுணர் ஹீலர் சக்திவேல் யுவராஜ், பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்து பேச உள்ளார். மேலும், பாரம்பரிய அரிசியில் 214 பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்யும் பெண் தொழில் முனைவர் மேனகா, மதிப்பு கூடுதல் துறையின் சாதனை புரிந்து வரும் தான்யாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் மணி ஆகியோர் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பேச உள்ளனர்.
இதுதவிர, முன்னோடி விவசாயிகள் பெரிய சாமி (கரூர்), செந்தில் குமார் (திருவாரூர்), விஜய் மகேஷ் (தஞ்சாவூர்), மஹாலட்சுமி (காஞ்சிபுரம்) உள்ளிட்டோர் தங்களுடைய வெற்றி அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இதில் இடம்பெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இத்திருவிழா ஜூலை 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலூர் உழவர் சந்தையில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் பனம்பழங்களை, வட மாநிலத்தினர் தேடித்தேடி வாங்கி செல்கின்றனர்.
- பழத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை.
பனை மரத்தில் நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன் தரும் பகுதியாகும்.
பனம் பழத்தினுள் நார் நிறைந்திருக்கும். நார்களினுள் சிவந்த ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும். பனம் பழத்தை அவித்தும் சுட்டும் சாப்பிடலாம். பனம்பழம் சிறந்த சத்துணவாகும்.
பனம் பழத்தின் அருமை நம்மூர்காரர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் வடமாநிலத்தவர்கள் பனம் பழத்தை பல்வேறு உணவாக மாற்றி சாப்பிடுகின்றனர்.
வேலூர், சத்துவாச்சாரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிகிச்சைக்காக வந்துள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் சமைத்து சாப்பிடுகின்றனர்.
வேலூரில் விற்பனை செய்யப்படும் பனம் பழங்களை வாங்கிச் செல்லும் வட மாநிலத்தினர் அதனை தீயில் சுட்டு சாப்பிடுகின்றனர். மேலும் பனம்பழத்தை தோல் உரித்து கொட்டை மேல்புறத்தில் உள்ள நார் பகுதியை கூழாக்குகின்றனர். இதில் விதவிதமாக பஜ்ஜி மற்றும் போண்டாவாக சமைத்து சாப்பிடுகின்றனர்.
வேலூர் உழவர் சந்தையில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் பனம்பழங்களை, வட மாநிலத்தினர் தேடித்தேடி வாங்கி செல்கின்றனர்.
பார்ப்பதற்கே அரிய பொருளாக காணப்படும் பனம்பழத்தை உள்ளூர்வாசிகள் யாரும் வாங்குவதில்லை. அதனை கடைகளில் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். ஆனால் வட மாநிலத்தினர் இந்த பனம் பழத்தை தேடி தினந்தோறும் உழவர் சந்தைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 50 பழங்களையே வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்திலேயே வடமாநிலத்தினர் தேடி பிடித்து வாங்கி செல்வதால், உடனே தீர்ந்து விடுகிறது. பழத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உழவர் சந்தைக்கு பனம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப வட மாநிலத்தினரும் பனம்பழங்களை அதிகம் வருகின்றனர். அதிக பழங்கள் கொண்டு வந்தாலும் அவை அனைத்தும் சிறிது நேரத்திலேயே விற்பனையாகி விடுகிறது. பனம்பழம் விற்பனையும் சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது
- போலீஸ் குவிப்பு-பரபரப்பு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தலைமை தாங்கினார்.
தேர்தல் நடந்த கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் முகமது சகி ஆகியோர் அனுமதிக்க ப்பட்டனர்.
பின்னர் கூட்டரங்கு கதவுகள் மூடப்பட்டது. யாரும் உள்ளே செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியில் இன்று நடந்த தேர்தலின் போது 55 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். இந்த தேர்தலில் கவுன்சிலர்கள் 10 பேர் போட்டியிட்டனர்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது .இதில் கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக சென்று வாக்கு பட்டியில் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சக்கரவர்த்தி சித்ரா, சுதாகர் ,சேகர், நித்திய குமார், முருகன், ரஜினி, சண்முகம் மற்றும் கவுன்சிலர் அஸ்மிதா ஆகியோர் மாநகராட்சி மேல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன் 11 வாக்குகளை பெற்றதால் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 7 பேர் உள்ளனர். இந்தநிலையில் கூடுதலாக தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் சரவணனுக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலையொட்டி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தால் பரபரப்பாக காணப்பட்டது.
வரி விதிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புதிய கட்டிடங்கள் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, சொத்து வரி, தொழில் வரி பிற வரிகள் விதிப்பு, நில உரிமை மாற்றம் மாநகராட்சி நிலங்களை வேறு துறைகளுக்கு குத்தகைக்கு அனுமதித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிதி நிலை கட்டுப்பாடு, வரவு, செலவு திட்டம் பரிசீலித்தல் போன்றவை மேற்கொள்ள உள்ளது.






