என் மலர்
வேலூர்
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா நடந்தது
வேலூர்:
ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட திட்ட குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயுலின் ஜான் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆக்கி வீரர்கள் போட்டியில் சென்று வென்று வரவேண்டும் ஒரு காலத்தில் இந்தியா என்றால் ஆக்கி தான் விளையாடுவார்கள் அதுதான் முதலிடம்.
இப்போது கிரிக்கெட் பக்கம் சாய்ந்துள்ளது நாங்கள் கல்லூரி படிக்கும் போது ஆக்கித்தான். வாணியம்பாடி கல்லூரியில் நான் படிக்கும்போது ஆகிய தான் விளையாட வேண்டும் என விருப்பம் கொடுத்தேன.
நான் ஆக்கி விளையாடும் போது எனது காலில் ஒருவன் அடித்து விட்டான் நான் கோபத்தில் அவனை திருப்பி அடித்து விட்டேன் இதை பார்த்து ஆசிரியர் உனக்கு ஆக்கி விளையாட்டு சரிப்பட்டு வராது என கூறிவிட்டார்.
அதிலிருந்து நான் ஆக்கி விளையாடுவதில்லை ஆக்கி வீரர்களை ஊக்கப்படுத்திேய வருகிறேன்.
தமிழக அரசு விளையாட்டு துறையை இந்தியாவில் முதன்மை துறையாக மாநிலத்தின் முதன்மை துறையாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் பாடுபட்டு வருகிறார்.
அதனால் அவர் தன்னுடைய மகன் உதயநிதிடம் விளையாட்டு துறையை ஒப்படைத்துள்ளார் விளையாட்டு துறை இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முதன்மை துறையாக மாறிவிடும்.
இளம் வயதி உடலை யார் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களோ உள்ளத்தையும் அது பத்திரமாக பார்த்துக் கொள்ளும் உடலும் உள்ளமும் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இவர் அவர் பேசினார் விழாவில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜி வி செல்வம் டி.ஐ.ஜி. முத்துசாமி மாவட்ட எஸ் .பி மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்றது. அப்போது சுமார் முதியவர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடதுகால் ரெயில் பெட்டி மற்றும் பிளாட்பார கட்டிடத்திற்கு இடையே சிக்கிக்கொண்டது.
ரெயில் நிர்க்காமல் சென்றதில் அவரது கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அடைந்த காட்பாடி போலீசார் விரைந்து சென்று, முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 சதவீத மானியத்துடன் பெற விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக்குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் 10 சதவீத பயனாளிகளின் பங்களிப்பு 60 சதவீத வங்கி கடன் திட்டமானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்படவுள்ளது.
ரூ. 5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண்தொழி லாகவும் ரூ. 5 லட்சம் முதல் 15 லட்சம் வரையுள்ள தொழில் திட்டம் குறுதொழிலாகவும் ரூ. 15 லட்சத்திற்கும் மேல் உள்ள தொழில் திட்டம் சிறுதொ ழிலாகவும் இத்திட்டத்தின் மூலம் வரையறு க்கப்பட்டுள்ளது.
சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்தி றனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும். இணை மானிய திட்ட கடன் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறும். மேலும் பிற விபரங்களுக்கு வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில் மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பகவதி மலையடிவாரத்தில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன் பன்னபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
இதில் ஓம் சக்தி அம்மா கலந்து கொண்டு அம்மன், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்து தீபாராதனை காண்பித்தார்.
பூஜையில் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளைகள் தலைவர் தமிழ்புகழேந்தி செய்திருந்தார்.
- இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பி.டி.சி. ரோடு வாணி தெருவைச் சேர்ந்த சிவாஜி மகன் வினோத்குமார். இவர் தனது மாமியார் ஊரான திருவலம் இ.பி கூட்ரோட்டில் நடந்த திருவிழாவை காண சென்றார்.
சாமி வழிபாடு செய்த பொழுது அவரது மாமியார் சாமி வந்து ஆடினார். வினோத்குமார் அதை வீடியோ எடுத்த பொழுது திருவலம் இ.பி கூட்ரோட்டுச் சேர்ந்த சரவணன் என்கிற சரவண வேல் என்பவர் இங்கு பெண்களை வீடியோ எடுக்க கூடாது என்று கூறினார்.
வினோத்குமார் எனது மாமியாரை தான் நான் வீடியோ எடுக்கிறேன். உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதில் சரவணன் வினோத்தை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வினோத்குமார் சரவணன் வீட்டுக்கு சென்று என்னை ஏன் திட்டினாய் என்று கேட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சரவணன், வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கையாளும் இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். அங்கிருந்து தப்பி சென்ற வினோத் குமார் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
சரவணன் மீது ஏற்கனவே வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி கொலை முயற்சி கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டாமை மீது போலீசில் புகார்
- கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த பிஞ்சமந்தை மலைகிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்து, பொன்னுசாமி ஆகிய 2 பேர் கொலை வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
வழக்கின் விசாரணை முடிவில் 2 பேரும் நிரபராதிகள் என கோர்ட் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
ஜெயிலுக்கு சென்று வந்ததால் இந்த 2 பேர் உறவினர்கள் உள்பட 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக, பீஞ்சமந்தை நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்.
ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்றால் குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் வீதம் பஞ்சாயத்துக்கு அபராதம் கட்டிவிட்டு நீங்கள் ஊரில் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பணம் தர வசதி இல்லாததால் முத்து மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட உறவினர்கள் 5 குடும்ப த்தைச் சார்ந்த சுமார் 20 பேர் ஊரை காலி செய்து, சொந்த நிலத்தில் வீடு கட்டி கடந்த 6 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேப்பங்குப்பம் போலீசில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 வருடமாக ஊருக்குள் அனுமதிக்காமல் பணத்தைக் கேட்டு (ஊரான்) நாட்டாமை பழனி மிரட்டி வருகிறார். நாங்கள் செல்லும் வழியில் கொடிய முள்ளை போட்டும் வழிமறிப்பதோடு, குடிநீர் குழாய்களை உடைத்தும், கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்தும் துன்புறுத்தி வருகிறார். பணம் கேட்டு மிரட்டும் நாட்டாமையை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜவ்வாது மலைத்தொடர்களில் வாழும் சுமார் 120 மலை கிராமங்களில் இதுவரை ஊரானுக்கு எதிராக எந்தவித புகாரும் போலீசில் கொடுத்ததில்லை என்பது வரலாறாக உள்ளது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக மலைவாழ் மக்களே, ஊரானுக்கு எதிராக புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஒடுகத்தூர்:
ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையம், ராகவேந்திரா நகரைச் சேர்ந்த விஷ்னுகுமார் என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதனை கவனிக்காத விஷ்னுகுமார் குடும்பத்தினர். வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டினிலும் பாம்பு ஊர்ந்து சென்றதை திடீரென பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சசிதரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் புகுந்த நாகபாம்பை லாவகமாக பிடித்து அருகே உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
- விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அல்லனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கவுசல்யா. தம்பதியினருக்கு கிஷோர் ( வயது 3) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.
கவுசல்யா நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தார்.
வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது கிஷோர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கினான்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடனை திருப்பி செலுத்த முடியாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி ஒய்.ஆர்.எஸ்.எஸ். 2-வது தெருவை சேர்ந்தவர் கமால் (வயது 54). ஆட்டோ டிரைவர். இவர் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
டிரைவர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால் விரத்தி அடைந்த கமால் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கமால் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கமால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது
- இல்லத்தரசிகள் கவலை
வேலூர்:
தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது.
இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்கப்படுகிறது.
அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர்.
- ரூ.2.50 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தர வின் பேரில், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட் சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் குடியாத்தம் கஸ்பா அரசமர தெருவை சேர்ந்த விஷ்ணு என்ற வசீகரன் (வயது 21), மொய் தீன்பேட்டை பிரான் நகரை சேர்ந்த ஆசிம் (23) என்பது தெரியவந்தது.
இவர்கள் குடியாத்தம் நடுப்பேட்டை மற்றும் தரணம்பேட்டை பகுதிகளில் பைக் திருடியதும், தரணம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடை யில் 8 கிலோ செம்பு கம்பிகளை திருடியதும், அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட பைக் என்பதும் மேலும் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் கஸ்பா சுடுகாடு பகுதியில் மறைத்து வைத்திருந்த பைக்குகள், 8 கிலோ செம்பு கம்பிகளை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்ணு, ஆசிம் ஆகியோரை கைது செய்தனர்.
- 2 நாட்கள் நடைபெறுகிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டமானது வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விண்ண ப்பங்கள் இணையத்தில் பதிவு செய்யும் பணி 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள 68 ரேசன் கடைகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 38 கடைகள், ஊராட் சிகளில் 312 கடைகள் என மொத்தம் 418 கடைகளுக்கு 397 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முகாம் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே தெரு, நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக நடைபெற்று வரும் இந்த முகாமில் பதிவு செய்யாமல் விடுபட்ட மற்றும் விண்ணப்பபதிவு மேற்கொள்ளாத விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொள்ள வருகிற 3 மற்றும் 4-ந் தேதி அந்த மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி, விடுபட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களும் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.






