என் மலர்
உள்ளூர் செய்திகள்

பகவதி அம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பகவதி மலையடிவாரத்தில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன் பன்னபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
இதில் ஓம் சக்தி அம்மா கலந்து கொண்டு அம்மன், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்து தீபாராதனை காண்பித்தார்.
பூஜையில் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளைகள் தலைவர் தமிழ்புகழேந்தி செய்திருந்தார்.
Next Story






