search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளையாட்டு துறை முதன்மையானதாக மாறிவிடும்
    X

    விளையாட்டு துறை முதன்மையானதாக மாறிவிடும்

    • அமைச்சர் துரைமுருகன் பேச்சு
    • ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா நடந்தது

    வேலூர்:

    ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட திட்ட குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயுலின் ஜான் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஆக்கி வீரர்கள் போட்டியில் சென்று வென்று வரவேண்டும் ஒரு காலத்தில் இந்தியா என்றால் ஆக்கி தான் விளையாடுவார்கள் அதுதான் முதலிடம்.

    இப்போது கிரிக்கெட் பக்கம் சாய்ந்துள்ளது நாங்கள் கல்லூரி படிக்கும் போது ஆக்கித்தான். வாணியம்பாடி கல்லூரியில் நான் படிக்கும்போது ஆகிய தான் விளையாட வேண்டும் என விருப்பம் கொடுத்தேன.

    நான் ஆக்கி விளையாடும் போது எனது காலில் ஒருவன் அடித்து விட்டான் நான் கோபத்தில் அவனை திருப்பி அடித்து விட்டேன் இதை பார்த்து ஆசிரியர் உனக்கு ஆக்கி விளையாட்டு சரிப்பட்டு வராது என கூறிவிட்டார்.

    அதிலிருந்து நான் ஆக்கி விளையாடுவதில்லை ஆக்கி வீரர்களை ஊக்கப்படுத்திேய வருகிறேன்.

    தமிழக அரசு விளையாட்டு துறையை இந்தியாவில் முதன்மை துறையாக மாநிலத்தின் முதன்மை துறையாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் பாடுபட்டு வருகிறார்.

    அதனால் அவர் தன்னுடைய மகன் உதயநிதிடம் விளையாட்டு துறையை ஒப்படைத்துள்ளார் விளையாட்டு துறை இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முதன்மை துறையாக மாறிவிடும்.

    இளம் வயதி உடலை யார் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களோ உள்ளத்தையும் அது பத்திரமாக பார்த்துக் கொள்ளும் உடலும் உள்ளமும் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    இவர் அவர் பேசினார் விழாவில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜி வி செல்வம் டி.ஐ.ஜி. முத்துசாமி மாவட்ட எஸ் .பி மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×