என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, காந்தி நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் திருசீனிவாசன். மகன் கவுசல்ய குமார் (வயது 27). இவருக்கு அப்பில் ஒரு தகவல் வந்தது.

    அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை வாய்ப்பு தருவதாவும், கொடுக்கும் பணியை முடித்துக் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என நம்பிய கவுசல்ய குமார் அவர்கள் பகிர்ந்த இணைப்பில் தன்னை பதிவு செய்து கொண்டார். அவர்கள் தளத்தில் அனுப்பும் பணிகளை செய்து கொடுத்தார்.

    கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் ஜூலை மாதம் 19-ந் தேதி வரை பணிகளை முடிக்க பல்வேறு நிலைகளில் கவுசல்ய குமார் ரூ.58 லட்சத்து 69 ஆயிரத்து 32 -ஐ மர்ம கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தி வந்தார்.

    கவுசல்யா குமாரின் வங்கிக் கணக்கில் பணம் இருப்பது போல் காட்டியது. ஆனால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவுசல்யா குமார் தான் செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டார்.

    அதற்கு அவர்கள் மீதமுள்ள பணிகளை முடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும். அதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என பதில் அளித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கவுசல்யகுமார் இதுகுறித்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரம்
    • மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னஎட்டிபட்டு மலை கிராமத்தில் முத்து, பொன்னுசாமி, நாகராஜ், சுந்தரேசம் ஆகிய 4 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு சின்னசாமி என்பவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் முத்து, பொன்னு சாமி ஆகிய 2 பேரையும் வேப்பங்குப்பம் போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மேலும் வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவர்கள் இருவரின் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2 மாதத்திலேயே 2 பேரையும் நிரபராதிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

    இதனையடுத்து, சிறை சென்று வந்ததால் முத்து மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட 4 குடும்பங்களை நாட்டாமை (ஊரான்) பழனி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு ஒதுக்கிவைத்தார்.

    ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கிராமத்திற்குள் நுழையாமல், நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் சுப, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அகதிகள் போல் இவர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், நாட்டாமை பழனி பணம் கேட்டு மிரட்டி துன்புறுத்துவதாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பங்குப்பம் போலீசில் கண்ணீர் மல்க புகார் செய்தனர்.

    இது குறித்து செய்தி நமது மாலை மலர் நாளிதழில் வெளியிடப்ப ட்டது. இதன் எதிரொலியாக இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று 2 தரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது குற்றச்செயலாகும் இனி இது போன்று நடக்காமல் பாத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் நீங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது சட்டபடி குற்ற மாகும்.

    இதுதொடர்பாக இனி எந்த ஒரு புகாரும் வரக்கூடாது. மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு தரப்பினரிடமும் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டார்.

    இதையடுத்து இருதரப்பினரையும் கைகுலுக்கி சேர்த்து வைத்தார். இதனையடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக சொந்த ஊர் திரும்பினர்.

    • 67அணிகள் பங்கேற்றது
    • 10 அடி உயர கோப்பை, ரூ.7 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பனந்தோப்பு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 2 நாட்களாக நடந்தது.

    ஹிட்லர் பாய்ஸ் அணியினர் நடத்திய இந்த போட்டியில் சென்னை, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 67அணிகள் பங்கேற்றது. சுமார் 750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடினர்.

    இதில் பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்த ஜெய் அனுமான் அணியினர் சிறப்பாக விளையாடிய முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

    முதல் பரிசாக 10அடி உயர கோப்பையுடன் ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசாக 7 அடி கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

    • போலீசார் திடீர் சோதனை
    • மருந்து, மாத்திரைகளை பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர். தன்வீர் உள்ளிட்ட குழுவினர் மதனஞ்சேரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த குகன் (வயது 26) என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    • தொடர் மழையால் விளைச்சல் குறைந்தது
    • விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை

    வேலூர்:

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் , தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் வீழ்ச்சியடைந்தது, விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது .

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.170 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் உழவர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால், வியாபாரிகள் தக்காளிகளை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்தனர். புள்ளி விழுந்த மற்றும் பாதி அழுகிய தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் அழுகிப்போன மற்றும் ஓட்டை தக்காளிகள் கூட விற்பனை செய்தனர். தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர். 

    • தாயார் இறந்த வேதனையில் பரிதாபம்
    • மன உளைச்சலில் காணப்பட்டார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த மூஞ் சூர்பட்டு கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 27). இவர் 5 ஆண்டுக்கு முன் ஆரணி எஸ்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை திரு மணம் செய்துகொண்டு அங்கேயே வசித்து வந்தார்.

    இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். மேலும், ராதிகா 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார்.

    இந்த நிலையில், மூஞ் சூர்பட்டில் உள்ள ராதிகா வின் தாயார் சுமதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தாய் சுமதியை உடனிருந்து

    கவனித்துக்கொள்ள ராதிகா கடந்தவாரம் ஆரணியில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று மருத்துவ மனையில் சுமதியை உடனிருந்து கவனித்து வந்தார்.

    கடந்த 29-ந்தேதி காலை சிகிச்சை பலனின்றி சுமதி இறந்து விட்டார். தாய் இறந்ததால் ராதிகா மன உளைச்சலில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து வேலுார் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த முருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 54). கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.

    இன்று அதிகாலை முருகம்பட்டு கிராமத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி தனது பைக்கில் சேகர் சென்று கொண்டிருந்தார். கீழ் ஆலத்தூர் அருகே வரும்போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக்கை போட்டார்.

    அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கே வி குப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொய்கையில் செவ்வாய்க்கிழமைதோறும் மாட்டுச்சந்தை நடைபெறும்
    • மாடுகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டன

    வேலூர்:

    வேலூர் அடுத்த பொய்கை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் மாட்டுச்சந்தை நடைபெறும்.

    இந்த சந்தைக்கு உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற் றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரத்தை விட இன்று ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப் பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது. இதனால் கடந்த வாரம் ரூ.60 லட்சத்துக்கு குறைவாக வர்த்தகம் இருந்தது.

    இன்று ரூ.1 கோடிக்கு வியாபாரம் போனதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    • 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் வருகை தராமல் இருந்தனர். பேரூராட்சித் தலைவர் சத்யாவதி பாஸ்கரன் உட்பட 9 கவுன்சிலர்கள் வைத்து 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்திட்டம், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் போன்ற திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • நகரமன்றத்தின் அவசரக் கூட்டம்
    • நகராட்சி தலைவர் எச்சரிக்கை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரமன்றத்தின் அவசரக் கூட்டம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஆணையாளர் எம்.மங்கையர்க்கரசன், பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் துவங்கியவுடன் நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் பேசுகையில்:-

    குடியாத்தம் நகரில் உள்ள பல கடைகளின் பெயர்பலகைகள் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ளது உடனடியாக 3 மாதத்திற்குள் அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்.

    தவறும் பட்சத்தில் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், சலவை தொழிலாளர்கள் நலன்கருதி சுண்ணாம்பேட்டை சுடுகாடு அருகே அவர்களுக்கு சலவைத்துறை கட்டித்தரப்படும், ஆற்றில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரி விதிப்பிற்கு பணம் கேட்டால் இது குறித்து நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி இன்றி முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகராட்சி இடத்தில் அரசு அலுவலகம் கட்ட அதிகாரிகள் ஆய்வு குறித்து எந்த தகவலும் வரவில்லை.

    அது குறித்து முறைப்படி தகவல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு
    • மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தி

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை செய்தபோது, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி உள்ளது.

    இதனால் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, எலி காய்ச்சல் போன்றவை வைரஸ் கிருமிகளால் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர தற்போதுள்ள காலநிலை மாற்றமும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை உண்டாக்குகிறது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் விட்டு விட்டு மழை பெய்தது.

    மாறுபட்ட இந்த காலநிலையால் சளி, இரு மல், தொண்டைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது.

    தும்மல், சளி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த வைரஸ் அடுத்துவரும் நாட்களில் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக வரும் நோயாளிகளைவிட தற்போது அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சளி, இரு மல், தொண்டை வலி போன்ற சாதாரண பாதிப்புகளுடன் குழந்தைகள் கடும் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்கள் அதில் இருந்து விடுபட ஒருவாரம் ஆகிறது.

    வேலூரில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. குழந்தை டாக்டரிடம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    இயல்பு நிலையைவிட வெயில் அதிகரித்துள்ளதால் உடலில் உஷ்ணம் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    குளிர்ந்த தண்ணீர் குடிப்பது, ஏ.சி.யில் உறங்குவது போன்றவற்றால் சிலருக்கு சளி, இருமல் தொந்தரவு அதிகமாகி காய்ச்சல் பாதித்தது.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:- தற்போது ஒரு விதமான வைரஸ் பாதிப்பு உள்ளது. அது டெங்கு வைரஸ் இல்லை. ஆனால் டெங்குவிற்கான அறிகுறிகள் போலவே நோயாளிகளுக்கு உள்ளன.

    பரிசோதனை செய்து பார்த்தால் டெங்கு இல்லை என தெரிய வருகிறது. ஆனால் வேறு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெங்கு பாசிட்டிவ் கேஸ்கள் நிறைய வருகின்றன.

    அதனால் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான ஆகாரங் களை எடுக்க வேண்டும். கொசு பாதிப்பில் இருந்து காத்து கொள்ள பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கொசு மருந்து அடித்தல், தண்ணீரில் குளோரின் தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த துப்புற பணியின் மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கொணவட்டத்தை சேர்ந்தவர் சாமியுல்லா.

    இவர் தனது மனைவி மாமனார் மாமியார் குழந்தைகளுடன் ேவனில் சென்னைக்கு சுற்றுலா சென்று இருந்தார். சுற்றுலா முடிந்து இன்று காலை வேனில் வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    வேன் சத்துவாச்சாரியில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. நாய் மீது வேன் மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறபடுத்தினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×