என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரஸ் காய்ச்சல் பரவுகிறது"

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு
    • மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தி

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை செய்தபோது, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி உள்ளது.

    இதனால் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, எலி காய்ச்சல் போன்றவை வைரஸ் கிருமிகளால் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர தற்போதுள்ள காலநிலை மாற்றமும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை உண்டாக்குகிறது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் விட்டு விட்டு மழை பெய்தது.

    மாறுபட்ட இந்த காலநிலையால் சளி, இரு மல், தொண்டைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது.

    தும்மல், சளி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த வைரஸ் அடுத்துவரும் நாட்களில் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக வரும் நோயாளிகளைவிட தற்போது அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சளி, இரு மல், தொண்டை வலி போன்ற சாதாரண பாதிப்புகளுடன் குழந்தைகள் கடும் அவதிப்படுகிறார்கள்.

    இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்கள் அதில் இருந்து விடுபட ஒருவாரம் ஆகிறது.

    வேலூரில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. குழந்தை டாக்டரிடம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

    இயல்பு நிலையைவிட வெயில் அதிகரித்துள்ளதால் உடலில் உஷ்ணம் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    குளிர்ந்த தண்ணீர் குடிப்பது, ஏ.சி.யில் உறங்குவது போன்றவற்றால் சிலருக்கு சளி, இருமல் தொந்தரவு அதிகமாகி காய்ச்சல் பாதித்தது.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:- தற்போது ஒரு விதமான வைரஸ் பாதிப்பு உள்ளது. அது டெங்கு வைரஸ் இல்லை. ஆனால் டெங்குவிற்கான அறிகுறிகள் போலவே நோயாளிகளுக்கு உள்ளன.

    பரிசோதனை செய்து பார்த்தால் டெங்கு இல்லை என தெரிய வருகிறது. ஆனால் வேறு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெங்கு பாசிட்டிவ் கேஸ்கள் நிறைய வருகின்றன.

    அதனால் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான ஆகாரங் களை எடுக்க வேண்டும். கொசு பாதிப்பில் இருந்து காத்து கொள்ள பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கொசு மருந்து அடித்தல், தண்ணீரில் குளோரின் தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த துப்புற பணியின் மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×