search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூராட்சி கூட்டம்
    X

    பேரூராட்சி கூட்டம்

    • 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் வருகை தராமல் இருந்தனர். பேரூராட்சித் தலைவர் சத்யாவதி பாஸ்கரன் உட்பட 9 கவுன்சிலர்கள் வைத்து 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்திட்டம், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் போன்ற திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×