என் மலர்
வேலூர்
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த முருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 54). கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.
இன்று அதிகாலை முருகம்பட்டு கிராமத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி தனது பைக்கில் சேகர் சென்று கொண்டிருந்தார். கீழ் ஆலத்தூர் அருகே வரும்போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக்கை போட்டார்.
அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கே வி குப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொய்கையில் செவ்வாய்க்கிழமைதோறும் மாட்டுச்சந்தை நடைபெறும்
- மாடுகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டன
வேலூர்:
வேலூர் அடுத்த பொய்கை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் மாட்டுச்சந்தை நடைபெறும்.
இந்த சந்தைக்கு உள்ளூர் மட் டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற் றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெளியூர்களில் இருந்து மாடுகள் வாங்கி செல்லவும், கொண்டு வரவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தை விட இன்று ஆயிரத் துக்கும் மேற்பட்ட மாடுகள், இதர கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி கலப் பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்கு வந்தது. இதனால் கடந்த வாரம் ரூ.60 லட்சத்துக்கு குறைவாக வர்த்தகம் இருந்தது.
இன்று ரூ.1 கோடிக்கு வியாபாரம் போனதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
- 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இதற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் வருகை தராமல் இருந்தனர். பேரூராட்சித் தலைவர் சத்யாவதி பாஸ்கரன் உட்பட 9 கவுன்சிலர்கள் வைத்து 15 வார்டுகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்திட்டம், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் போன்ற திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நகரமன்றத்தின் அவசரக் கூட்டம்
- நகராட்சி தலைவர் எச்சரிக்கை
குடியாத்தம்:
குடியாத்தம் நகரமன்றத்தின் அவசரக் கூட்டம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, ஆணையாளர் எம்.மங்கையர்க்கரசன், பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியவுடன் நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் பேசுகையில்:-
குடியாத்தம் நகரில் உள்ள பல கடைகளின் பெயர்பலகைகள் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ளது உடனடியாக 3 மாதத்திற்குள் அனைத்து பெயர்ப்பலகைகளிலும் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், சலவை தொழிலாளர்கள் நலன்கருதி சுண்ணாம்பேட்டை சுடுகாடு அருகே அவர்களுக்கு சலவைத்துறை கட்டித்தரப்படும், ஆற்றில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி விதிப்பிற்கு பணம் கேட்டால் இது குறித்து நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி இன்றி முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி இடத்தில் அரசு அலுவலகம் கட்ட அதிகாரிகள் ஆய்வு குறித்து எந்த தகவலும் வரவில்லை.
அது குறித்து முறைப்படி தகவல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு
- மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தி
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை செய்தபோது, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி உள்ளது.
இதனால் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, எலி காய்ச்சல் போன்றவை வைரஸ் கிருமிகளால் பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர தற்போதுள்ள காலநிலை மாற்றமும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை உண்டாக்குகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் விட்டு விட்டு மழை பெய்தது.
மாறுபட்ட இந்த காலநிலையால் சளி, இரு மல், தொண்டைவலி பாதிப்பு அதிகமாக உள்ளது.
தும்மல், சளி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த வைரஸ் அடுத்துவரும் நாட்களில் தொண்டை வலியை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வழக்கமாக வரும் நோயாளிகளைவிட தற்போது அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சளி, இரு மல், தொண்டை வலி போன்ற சாதாரண பாதிப்புகளுடன் குழந்தைகள் கடும் அவதிப்படுகிறார்கள்.
இந்த பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்கள் அதில் இருந்து விடுபட ஒருவாரம் ஆகிறது.
வேலூரில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. குழந்தை டாக்டரிடம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இயல்பு நிலையைவிட வெயில் அதிகரித்துள்ளதால் உடலில் உஷ்ணம் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குளிர்ந்த தண்ணீர் குடிப்பது, ஏ.சி.யில் உறங்குவது போன்றவற்றால் சிலருக்கு சளி, இருமல் தொந்தரவு அதிகமாகி காய்ச்சல் பாதித்தது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:- தற்போது ஒரு விதமான வைரஸ் பாதிப்பு உள்ளது. அது டெங்கு வைரஸ் இல்லை. ஆனால் டெங்குவிற்கான அறிகுறிகள் போலவே நோயாளிகளுக்கு உள்ளன.
பரிசோதனை செய்து பார்த்தால் டெங்கு இல்லை என தெரிய வருகிறது. ஆனால் வேறு வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெங்கு பாசிட்டிவ் கேஸ்கள் நிறைய வருகின்றன.
அதனால் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான ஆகாரங் களை எடுக்க வேண்டும். கொசு பாதிப்பில் இருந்து காத்து கொள்ள பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கொசு மருந்து அடித்தல், தண்ணீரில் குளோரின் தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த துப்புற பணியின் மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் கொணவட்டத்தை சேர்ந்தவர் சாமியுல்லா.
இவர் தனது மனைவி மாமனார் மாமியார் குழந்தைகளுடன் ேவனில் சென்னைக்கு சுற்றுலா சென்று இருந்தார். சுற்றுலா முடிந்து இன்று காலை வேனில் வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
வேன் சத்துவாச்சாரியில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. நாய் மீது வேன் மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறபடுத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா நடந்தது
வேலூர்:
ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட திட்ட குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயுலின் ஜான் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆக்கி வீரர்கள் போட்டியில் சென்று வென்று வரவேண்டும் ஒரு காலத்தில் இந்தியா என்றால் ஆக்கி தான் விளையாடுவார்கள் அதுதான் முதலிடம்.
இப்போது கிரிக்கெட் பக்கம் சாய்ந்துள்ளது நாங்கள் கல்லூரி படிக்கும் போது ஆக்கித்தான். வாணியம்பாடி கல்லூரியில் நான் படிக்கும்போது ஆகிய தான் விளையாட வேண்டும் என விருப்பம் கொடுத்தேன.
நான் ஆக்கி விளையாடும் போது எனது காலில் ஒருவன் அடித்து விட்டான் நான் கோபத்தில் அவனை திருப்பி அடித்து விட்டேன் இதை பார்த்து ஆசிரியர் உனக்கு ஆக்கி விளையாட்டு சரிப்பட்டு வராது என கூறிவிட்டார்.
அதிலிருந்து நான் ஆக்கி விளையாடுவதில்லை ஆக்கி வீரர்களை ஊக்கப்படுத்திேய வருகிறேன்.
தமிழக அரசு விளையாட்டு துறையை இந்தியாவில் முதன்மை துறையாக மாநிலத்தின் முதன்மை துறையாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் பாடுபட்டு வருகிறார்.
அதனால் அவர் தன்னுடைய மகன் உதயநிதிடம் விளையாட்டு துறையை ஒப்படைத்துள்ளார் விளையாட்டு துறை இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முதன்மை துறையாக மாறிவிடும்.
இளம் வயதி உடலை யார் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களோ உள்ளத்தையும் அது பத்திரமாக பார்த்துக் கொள்ளும் உடலும் உள்ளமும் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இவர் அவர் பேசினார் விழாவில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜி வி செல்வம் டி.ஐ.ஜி. முத்துசாமி மாவட்ட எஸ் .பி மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக புறப்பட்டு சென்றது. அப்போது சுமார் முதியவர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடதுகால் ரெயில் பெட்டி மற்றும் பிளாட்பார கட்டிடத்திற்கு இடையே சிக்கிக்கொண்டது.
ரெயில் நிர்க்காமல் சென்றதில் அவரது கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அடைந்த காட்பாடி போலீசார் விரைந்து சென்று, முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 சதவீத மானியத்துடன் பெற விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக்குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் 10 சதவீத பயனாளிகளின் பங்களிப்பு 60 சதவீத வங்கி கடன் திட்டமானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்படவுள்ளது.
ரூ. 5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண்தொழி லாகவும் ரூ. 5 லட்சம் முதல் 15 லட்சம் வரையுள்ள தொழில் திட்டம் குறுதொழிலாகவும் ரூ. 15 லட்சத்திற்கும் மேல் உள்ள தொழில் திட்டம் சிறுதொ ழிலாகவும் இத்திட்டத்தின் மூலம் வரையறு க்கப்பட்டுள்ளது.
சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்தி றனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும். இணை மானிய திட்ட கடன் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முகாம் நடைபெறும். மேலும் பிற விபரங்களுக்கு வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில் மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- சிறப்பு தீபாராதனை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பகவதி மலையடிவாரத்தில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன் பன்னபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
இதில் ஓம் சக்தி அம்மா கலந்து கொண்டு அம்மன், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்து தீபாராதனை காண்பித்தார்.
பூஜையில் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளைகள் தலைவர் தமிழ்புகழேந்தி செய்திருந்தார்.
- இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பி.டி.சி. ரோடு வாணி தெருவைச் சேர்ந்த சிவாஜி மகன் வினோத்குமார். இவர் தனது மாமியார் ஊரான திருவலம் இ.பி கூட்ரோட்டில் நடந்த திருவிழாவை காண சென்றார்.
சாமி வழிபாடு செய்த பொழுது அவரது மாமியார் சாமி வந்து ஆடினார். வினோத்குமார் அதை வீடியோ எடுத்த பொழுது திருவலம் இ.பி கூட்ரோட்டுச் சேர்ந்த சரவணன் என்கிற சரவண வேல் என்பவர் இங்கு பெண்களை வீடியோ எடுக்க கூடாது என்று கூறினார்.
வினோத்குமார் எனது மாமியாரை தான் நான் வீடியோ எடுக்கிறேன். உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டதால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதில் சரவணன் வினோத்தை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வினோத்குமார் சரவணன் வீட்டுக்கு சென்று என்னை ஏன் திட்டினாய் என்று கேட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சரவணன், வினோத் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கையாளும் இரும்பு ராடாலும் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். அங்கிருந்து தப்பி சென்ற வினோத் குமார் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
சரவணன் மீது ஏற்கனவே வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி கொலை முயற்சி கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டாமை மீது போலீசில் புகார்
- கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த பிஞ்சமந்தை மலைகிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்து, பொன்னுசாமி ஆகிய 2 பேர் கொலை வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
வழக்கின் விசாரணை முடிவில் 2 பேரும் நிரபராதிகள் என கோர்ட் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
ஜெயிலுக்கு சென்று வந்ததால் இந்த 2 பேர் உறவினர்கள் உள்பட 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக, பீஞ்சமந்தை நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்.
ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்றால் குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் வீதம் பஞ்சாயத்துக்கு அபராதம் கட்டிவிட்டு நீங்கள் ஊரில் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பணம் தர வசதி இல்லாததால் முத்து மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட உறவினர்கள் 5 குடும்ப த்தைச் சார்ந்த சுமார் 20 பேர் ஊரை காலி செய்து, சொந்த நிலத்தில் வீடு கட்டி கடந்த 6 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பழனி மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேப்பங்குப்பம் போலீசில் நேற்று புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 6 வருடமாக ஊருக்குள் அனுமதிக்காமல் பணத்தைக் கேட்டு (ஊரான்) நாட்டாமை பழனி மிரட்டி வருகிறார். நாங்கள் செல்லும் வழியில் கொடிய முள்ளை போட்டும் வழிமறிப்பதோடு, குடிநீர் குழாய்களை உடைத்தும், கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்தும் துன்புறுத்தி வருகிறார். பணம் கேட்டு மிரட்டும் நாட்டாமையை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜவ்வாது மலைத்தொடர்களில் வாழும் சுமார் 120 மலை கிராமங்களில் இதுவரை ஊரானுக்கு எதிராக எந்தவித புகாரும் போலீசில் கொடுத்ததில்லை என்பது வரலாறாக உள்ளது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக மலைவாழ் மக்களே, ஊரானுக்கு எதிராக புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.






