search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு ஆடித்திருவிழா
    X

    ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு ஆடித்திருவிழா

    • வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது
    • இரவு நாடகம் நடைபெற உள்ளது

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சி புரம் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 18-ம் ஆண்டு 3-வது வெள்ளி ஆடி திருவிழா நாளை தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு வலம்புரி விநாயகருக்கு கணபதி பூஜையும், ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும். 108 சங்கு அபிஷேகமும் நடைபெறும். மதியம் 12 மணிக்கு கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் கருமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை, முருகன் வீதி உலா நடைபெறும். 5-ந்தேதி (சனிக்கிழமை)மாலை 6 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு பரதநாட்டியமும், 7-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு நாடகமும் நடைபெற வுள்ளது.

    விழா விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் விழா குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×