என் மலர்tooltip icon

    வேலூர்

    • பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
    • பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள்.

    அணைக்கட்டு:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

    • லாக்கை உடைத்து துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பா ளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது21). இவர் ரங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் மெக்கா னிக்காக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஸ்ரீதர் தனது பைக்கை வழக்கம்போல், ரங்காபுரத்தில் உள்ள கடைக்கு எதிரே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் அங்கிரு ந்த கடை ஊழியர்களுடன் அருகிலுள்ள்ள பகுதிகளில் பைக்கை தேடினார்.

    அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் பைக்கின் லாக்கை உடைத்துவிட்டு தள்ளி சென்றதை பார்த்தனர். உடனடியாக 2 பேரையும் பிடித்து சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் ஓட்டேரி அடுத்த குளவிமேட்டைச் சேர்ந்த சிபிராஜ் (21) மற்றும் சத்துவாச்சாரியைச் சேர்ந்த யுவராஜ் (23) என்பதும் தெரியவந்தது.

    இதில் சிபிராஜ் மீது ஆந்திர மாநிலம் பாகாலா, காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சைக்கிள், பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
    • 50 முறைக்கு மேல் போன் செய்து கொண்டே இருக்கிறார்

    வேலூர்:

    வேலூர் எஸ் பி அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது வேலூர் அடுத்த காட்பாடி பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் மனு அளித்தார்.

    மனுவில் அவர் கூறி இருப்பதாவது, நானும் எனது கணவரும் பீடி வேலை செய்து வருகிறோம். கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனது செல்போன் வீடியோ காலில் வந்தார்.

    அப்போது அவர் உடை இல்லாமல் நிர்வாணமாக தோன்றினார். மேலும் எனது உடல் உறுப்புகள் எப்படி உள்ளது என ஆபாசமான வார்த்தைகளை பேசினார்.

    ஒரு நாளைக்கு 50 முறைக்கு மேல் போன் செய்து கொண்டே இருக்கிறார்.

    எனவே வீடியோ காலில் நிர்வாணமாக வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    நந்தினி என்ற பெண் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் சீவூரை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது எனது பெற்றோர் நகை பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் நகைகளை விற்று விட்டனர்.

    பின்னர் எனது மாமியார் சியாமளா நாத்தனார் யுவஸ்ரீ உட்பட குடும்பத்தினர் அனைவரும் கூடுதலாக வரதட்சணை வாங்கி வர வேண்டும் என எண்ணை அடித்து கொடுமைப்படுத்தி துன்புறுத்தினார்.

    மேலும் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது. கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தும் கணவர் உட்பட அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    • 800 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயக மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திருவலம், பொன்னை ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, பொன்னை குமரகுண்டா பகுதியில் சாலை ஓரமாக கேட்பாரற்று கிடந்த மூட் டைகளை சோதனை செய்தனர். அதில் 800 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து திருவலம் நுகர் வோர் பாதுகாப்பு கிடங் கில் ஒப்படை க்கப்பட்டது. மேலும் அரிசி கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக்கரத்தில் சிக்கி பரிதாபம்
    • ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள ஏரிகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). திருமணம் ஆகாத இவர் விவசாயம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஏரிக்கொல்லை கிராமத்திலிருந்து அணைக்கட்டு நோக்கி சக நண்பர்களுடன் வெவ்வேறு பைக்கில் சென்றனர். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டுள்ளனர்.

    ஆவின் டேங்கர் லாரிக்குள் பிரபு நிலை தடுமாறி விழுந்தார். பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோருடன் பாச போராட்டம்
    • போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்

    அணைக்கட்டு:

    பொள்ளாச்சியில் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வந்த போலீசார். இதனை அறிந்து வேப்பங்குப்பம் போலீசின் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமானார்கள். இன்னிலையில் காதலன் தான் வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

    • ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, காந்தி நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் திருசீனிவாசன். மகன் கவுசல்ய குமார் (வயது 27). இவருக்கு அப்பில் ஒரு தகவல் வந்தது.

    அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை வாய்ப்பு தருவதாவும், கொடுக்கும் பணியை முடித்துக் கொடுத்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என நம்பிய கவுசல்ய குமார் அவர்கள் பகிர்ந்த இணைப்பில் தன்னை பதிவு செய்து கொண்டார். அவர்கள் தளத்தில் அனுப்பும் பணிகளை செய்து கொடுத்தார்.

    கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் ஜூலை மாதம் 19-ந் தேதி வரை பணிகளை முடிக்க பல்வேறு நிலைகளில் கவுசல்ய குமார் ரூ.58 லட்சத்து 69 ஆயிரத்து 32 -ஐ மர்ம கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தி வந்தார்.

    கவுசல்யா குமாரின் வங்கிக் கணக்கில் பணம் இருப்பது போல் காட்டியது. ஆனால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவுசல்யா குமார் தான் செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டார்.

    அதற்கு அவர்கள் மீதமுள்ள பணிகளை முடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும். அதற்கு கூடுதலாக பணம் தர வேண்டும் என பதில் அளித்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கவுசல்யகுமார் இதுகுறித்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஊரை விட்டு ஒதுக்கிய விவகாரம்
    • மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னஎட்டிபட்டு மலை கிராமத்தில் முத்து, பொன்னுசாமி, நாகராஜ், சுந்தரேசம் ஆகிய 4 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு சின்னசாமி என்பவரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் முத்து, பொன்னு சாமி ஆகிய 2 பேரையும் வேப்பங்குப்பம் போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மேலும் வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவர்கள் இருவரின் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் 2 மாதத்திலேயே 2 பேரையும் நிரபராதிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

    இதனையடுத்து, சிறை சென்று வந்ததால் முத்து மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட 4 குடும்பங்களை நாட்டாமை (ஊரான்) பழனி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு ஒதுக்கிவைத்தார்.

    ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கிராமத்திற்குள் நுழையாமல், நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் சுப, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அகதிகள் போல் இவர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், நாட்டாமை பழனி பணம் கேட்டு மிரட்டி துன்புறுத்துவதாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பங்குப்பம் போலீசில் கண்ணீர் மல்க புகார் செய்தனர்.

    இது குறித்து செய்தி நமது மாலை மலர் நாளிதழில் வெளியிடப்ப ட்டது. இதன் எதிரொலியாக இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று 2 தரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது, ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது குற்றச்செயலாகும் இனி இது போன்று நடக்காமல் பாத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் நீங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது சட்டபடி குற்ற மாகும்.

    இதுதொடர்பாக இனி எந்த ஒரு புகாரும் வரக்கூடாது. மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு தரப்பினரிடமும் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டார்.

    இதையடுத்து இருதரப்பினரையும் கைகுலுக்கி சேர்த்து வைத்தார். இதனையடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக சொந்த ஊர் திரும்பினர்.

    • 67அணிகள் பங்கேற்றது
    • 10 அடி உயர கோப்பை, ரூ.7 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பனந்தோப்பு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 2 நாட்களாக நடந்தது.

    ஹிட்லர் பாய்ஸ் அணியினர் நடத்திய இந்த போட்டியில் சென்னை, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 67அணிகள் பங்கேற்றது. சுமார் 750-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடினர்.

    இதில் பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்த ஜெய் அனுமான் அணியினர் சிறப்பாக விளையாடிய முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

    முதல் பரிசாக 10அடி உயர கோப்பையுடன் ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசாக 7 அடி கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

    • போலீசார் திடீர் சோதனை
    • மருந்து, மாத்திரைகளை பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர். தன்வீர் உள்ளிட்ட குழுவினர் மதனஞ்சேரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த குகன் (வயது 26) என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    • தொடர் மழையால் விளைச்சல் குறைந்தது
    • விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை

    வேலூர்:

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் , தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் வீழ்ச்சியடைந்தது, விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது .

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.170 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    வேலூர் உழவர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால், வியாபாரிகள் தக்காளிகளை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்தனர். புள்ளி விழுந்த மற்றும் பாதி அழுகிய தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் அழுகிப்போன மற்றும் ஓட்டை தக்காளிகள் கூட விற்பனை செய்தனர். தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர். 

    • தாயார் இறந்த வேதனையில் பரிதாபம்
    • மன உளைச்சலில் காணப்பட்டார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த மூஞ் சூர்பட்டு கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 27). இவர் 5 ஆண்டுக்கு முன் ஆரணி எஸ்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை திரு மணம் செய்துகொண்டு அங்கேயே வசித்து வந்தார்.

    இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். மேலும், ராதிகா 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார்.

    இந்த நிலையில், மூஞ் சூர்பட்டில் உள்ள ராதிகா வின் தாயார் சுமதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தாய் சுமதியை உடனிருந்து

    கவனித்துக்கொள்ள ராதிகா கடந்தவாரம் ஆரணியில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று மருத்துவ மனையில் சுமதியை உடனிருந்து கவனித்து வந்தார்.

    கடந்த 29-ந்தேதி காலை சிகிச்சை பலனின்றி சுமதி இறந்து விட்டார். தாய் இறந்ததால் ராதிகா மன உளைச்சலில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து வேலுார் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×