search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்த குழந்தைக்கு மாட்டுப்பால், கழுதைபால், தேன் கொடுக்க கூடாது
    X

    பிறந்த குழந்தைக்கு மாட்டுப்பால், கழுதைபால், தேன் கொடுக்க கூடாது

    • அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா நடந்தது
    • பச்சிளம் குழந்தைகளின் நிபுணர் பேச்சு

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவு சார்பில உலக தாய்ப்பால் வார தின விழா ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார்.

    குழந்தைகள் நலத்துறை தலைவர் கல்பனா, உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை டாக்டர் தாட்சியாயினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூடியதாவது:-

    குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும்.

    கட்டாயம் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். மாட்டு பசும்பால், பால் பவுடர், தேன், சர்க்கரை தண்ணீர், கழுதைபால் போன்றவை கொடுக்க கூடாது. தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது "கங்காரு" அரவணைப்பு போன்று பால் கொடுக்க வேண்டும்.

    அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை பால் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×