என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
    X

    வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

    • கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் பாகாயத்தை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று இரவு பாகாயம் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிம றித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    இது குறித்து மணி பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து வழிப்ப றியில் ஈடுபட்ட வேலூர் ஓல்டு டவுன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி உதயா (எ)உதயகுமார்(40) என்பவரை கைது செய்தனர் . மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×