என் மலர்
வேலூர்
- கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ வைரல்
- பேட்டரியையும் திருடி சென்றனர்
வேலூர்:
வேலூர் மாநகரம், காட்பாடி, சித்தூர் பஸ் நிலையம், சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன.
சாலைகளை சுற்றி திரியும் மாடுகளை மர்ம கும்பல் வாகனத்தில் வந்து திருடி செல்வது தொடர்கதையாக உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கும் மாடுகளை திருடி சென்று வெளிச்சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரி சாலையில் உள்ள காகிதப்பட்டறை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே சாலையில் மாடுகள் படுத்திருந்தன கொண்டிருந்தது.
இதனை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல்கள் நோட்டமிட்டு மாடுகளை திருடி சென்றது.
இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள சோளாபுரி அம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து பேட்டரியை மர்ம கும்பல் திருடி சென்றனர்.
பேட்டரி திருடி செல்லும் காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- இணையதளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது-
பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவ னங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்து றையில் ஒப்புதல் பெற்றி ருக்க வேண்டும்.
மத்திய கூட்டுறவுத் துறையில் பதிவு செய்யாத கூட்டுறவு சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. தற் போது, பாரதீய கூட்டுறவு பொதுக்காப்பீடு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் செயல்பட 829 பயிர் காப் பீடு உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்ய உள்ளதாக அந்நிறுவனத் தின் பெயரிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில் இப்ப ணியிடத்திற்கு விரும்புப வர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என இணையதளத்தில் தவ றான தகவல் பரவி வரு கிறது.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசின் வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையின் மூலம் இத்தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டிருப்ப தால் இத்தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 8 டிரைவர்களுக்கு மெமோ
- போலீஸ் ரோந்து பணிக்காக 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ரோந்து பணிக்காக 42 நான்கு சக்கர வாகனங்களும், 44 பைக்குகள் என மொத்தம் 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாதம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி வேலூர் நேதாஜி மைதானத்திற்கு இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்படன வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் போலீசாரின் வாகனங்களை ஆய்வு செய்தார்.
அப்போது வாகனங்களில் சரியான அளவு என்ஜின் ஆயில் மற்றும் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்ப டுகிறதா என ஆய்வு செய்தார். ஆய்வின்போது வாகனங்களை சரிவர பராமரிக்காத 8டிரைவர்க ளுக்கு மெமோ வழங்கினார். அதேபோல் வாகனங்களை முறையாக பராமரித்து இருந்த 4 டிரைவர்களுக்கு ரிவார்டு வழங்கினார்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 127 வாகனங்களில் இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 வாகனங்கள் மற்றொரு நாள் ஆய்வு செய்யப்படும்.
ஒழுங்காக வாகனங்களை பராமரிக்காத டிரைவர்க ளுக்கு பழைய வாகனங்கள் வழங்கப்படும். முறையாக பராமரிப்பு செய்த டிரைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், டி.எஸ்.பி.க்கள் மனோகரன், திருநாவுக்கரசு, ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
- ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் பாகாயத்தை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று இரவு பாகாயம் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிம றித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து மணி பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து வழிப்ப றியில் ஈடுபட்ட வேலூர் ஓல்டு டவுன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி உதயா (எ)உதயகுமார்(40) என்பவரை கைது செய்தனர் . மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா நடந்தது
- பச்சிளம் குழந்தைகளின் நிபுணர் பேச்சு
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவு சார்பில உலக தாய்ப்பால் வார தின விழா ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார்.
குழந்தைகள் நலத்துறை தலைவர் கல்பனா, உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை டாக்டர் தாட்சியாயினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூடியதாவது:-
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும்.
கட்டாயம் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். மாட்டு பசும்பால், பால் பவுடர், தேன், சர்க்கரை தண்ணீர், கழுதைபால் போன்றவை கொடுக்க கூடாது. தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது "கங்காரு" அரவணைப்பு போன்று பால் கொடுக்க வேண்டும்.
அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை பால் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
வேலூர்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடி மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையளட்டு வழிபட்டனர்.
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.
அதேபோல் படவேடு ரேணுகாம்பாள் கோவில், கணியம்பாடி கடம்ப வனவாசவி அம்மன், சாத்துமதுரை துர்க்கையம்மன், திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் பொங்கலிட்டு, கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
- காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
- மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
வேலூர்:
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ள சுப்பிரமணியசாமி, வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில், கைலாசகிரி மலைகொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளையாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூளை கேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை தண்டகோடிமலை முருகன் கோவில், ரெட்டிபாளையம் முருகன் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது
- இரவு நாடகம் நடைபெற உள்ளது
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரம் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 18-ம் ஆண்டு 3-வது வெள்ளி ஆடி திருவிழா நாளை தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.
நாளை காலை 6 மணிக்கு வலம்புரி விநாயகருக்கு கணபதி பூஜையும், ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும். 108 சங்கு அபிஷேகமும் நடைபெறும். மதியம் 12 மணிக்கு கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் கருமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை, முருகன் வீதி உலா நடைபெறும். 5-ந்தேதி (சனிக்கிழமை)மாலை 6 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு பரதநாட்டியமும், 7-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு நாடகமும் நடைபெற வுள்ளது.
விழா விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் விழா குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சின்ன அல்லா புரத்தை சேர்ந்தவர் முகமது (வயது30). மீன் வியாபாரம் செய்து வந்தார் . இவர் இன்று அதிகாலை பென்னாத்தூர் பகுதியில் மீன் வியாபாரத்திற்கு சென்றார்.
அப்போது அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது
- அதிகாரி விசாரணை நடத்தினார்
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை அங்குள்ள வீட்டு வசதிய வாரிய குடியிருப்பு அருகே செயல்பட்டு வருகிறது.
இந்த பணிமனையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் மற்றும் நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பணிமனையில் பணிபுரியும் தலைமை அதிகாரி ஒருவர் சக அதிகாரி பணி ஒதுக்கீடு செய்வதற்காக லஞ்சம் கேட்டு போனில் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் பணி ஒதுக்கீடு செய்ய பணம் தருமாறு தலைமை அதிகாரி கேட்பதும் அதற்கு பணி ஒதுக்கீடு பெற்ற அதிகாரி மறுப்பு தெரிவிப்பதும் என அவர்களுக்கிடையே வாக்குவாதம் செய்தது பதிவாகி இருந்தது.
இந்த ஆடியோ விவரம் தொடர்பாக வேலூர் போக்குவரத்து மண்டல பொதுமேலாளர் உடனடியாக விசாரணை நடத்தினார். ஆடியோவில் பேசும் தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜை சஸ்பெண்டு செய்து பொது மேலாளர் இன்று உத்தரவிட்டார்.
- விவசாயிகள் வலியுறுத்தல்
- ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் கி.வேண்டா தலைமை தாங்கினார். தேர்தல் தனிப்பிரிவு தாசில்தார் திருக்குமரேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:-
தற்போது விலையில் வின்னைத்தொட்டு இருக்கும் தக்காளி நகரப் புறத்தை தொடர்பு கிராம புரத்தில் உள்ள அணைத்து ரேஷன் கடையிலும் கொடுக்க வேண்டும். விவசாய பம்பு செட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்,
பிறப்பு இறப்பு சான்றிதழ் வந்தால் உடனடியாக பயனாளிகளிடம் கொடுக்க வேண்டும், சேர்ப்பாடி கூட்டுறவு சங்கத்தில் நடவை இயந்திரம் மற்றும் அறுவடை இயந்திரம் கொடுக்க வேண்டும், ஒடுகத்தூரில் இருந்து மேல் அரசம்பட்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். குரங்குகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
தற்போது வழங்கப்படும் ஆட்டுக் கொட்டகைகளை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பி னர்களே எடுத்துக் கொள்வதாக கூட்டத்தில் ஆதங்கமாக பேசி விவசாயிகள் கண்ணீர் விட்டனர்.
இது சம்பந்தமாக அணைக்கட்டு பிடிஓ நேரடியாக வந்து உரிய பதிலளிக்க வேண்டும் என விவசாயிகள் அங்கேயே அமர்ந்து கூட்டத்தை நடக்க விடாமல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிடிஓ சாந்தி அடுத்த கூட்டத்திற்குள் உரிய பதிலளிக்கப்படும் என தெரிவித்ததனால் கூட்டம் சிறிது நேரத்திற்க்கு பின் தொடர்ந்து நடைபெற்றது.
- 3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
- குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23), இவரது மனைவி செல்வி(21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
தலை பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்தார். அங்கு செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது.
திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை அவரது உறவினர்கள் மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






