search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரியிடம் பணம் பறிப்பு
    X

    வியாபாரியிடம் பணம் பறிப்பு

    • கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
    • 2 வாலிபர்கள் கைது

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). இவர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை 2 வாலிபர்கள் பாலாஜியின் பெட்டிக்க டைக்கு சென்று கத்தியை காட்டி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வாலிபர்கள் பாலாஜியின் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    அத ன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா க்களை ஆய்வு செய்து விசாரித்தார்.

    விசாரணையில் வியாபாரியிடம் பணம் பறித்தது வேலூர் சைதாப் பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23), ஓல்டுடவுனை சேர்ந்த விக்னேஷ் (23) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காகிதப்பட்டறை பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். 2 பேரையும் பிடிக்க முயன்றபோது தப்பியோட முயன்று தவறி கீழே விழுந்தனர்.

    அதில் அவர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், 2 பேருக்கும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×