search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fractured arm"

    • தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது.
    • அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும்.

    புரோசன் ஷோல்டர் எனப்படும் உறைந்த தோள்பட்டை என்பது தோள்பட்டை மூட்டில் விறைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துவது. வலிஇருக்கிறது என்பதற்காக தோள்பட்டையை நீண்ட நேரம் அசையாமல் வைத்திருப்பது உறைந்த தோள்பட்டை உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    தோள்பட்டையின் மூட்டுகள் இணைப்புத் திசுக்களால் இணைக்கப்பட்டுள்ளது. உறைந்த தோள்பட்டை நிலையில் இணைப்புத் திசுக்களின் உட்பகுதி கடினமடைந்து, தோள் மூட்டின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது கை முறிவு போன்ற நிலைகளில் நீண்ட காலத்திற்கு தோள் மூட்டை அசையாமல் வைத்திருந்தால் இது வரும் வாய்ப்பு அதிகம். கீழ்க்கண்ட காரணிகள் உறைந்த தோள்பட்டை வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

     1) 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்களுக்கு, உறைந்த தோள்பட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    2) நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்கள், அல்லது குறைந்த உடல் இயக்கம் உள்ளவர்களுக்கு உறைந்த தோள்பட்டை பாதிப்பு வரும் ஆபத்து அதிகம்.

    3) உடைந்த தோள் மூட்டு, பக்கவாதம் போன்ற நோய் நிலையில் உறைந்த தோள்பட்டை உருவாகும் வாய்ப்பு அதிகம்.

    4) நீரிழிவு நோய், அதிக தைராய்டு (ஹைப்பர் தைராய்டிசம்), குறை தைராய்டு (ஹைப்போ தைராய்டிசம்), பார்கின்சன் நோய் போன்ற நோய் உள்ளவர்களுக்கு உறைந்த தோள் பட்டை வரும் வாய்ப்புகள் அதிகம்.

     அறிகுறிகள்:

    உறைந்த தோள்பட்டை நோயின் ஒரு பிரிவு அதிக வலி கொண்ட உறைதல் நிலை' எனப்படும். இந்தநிலையில் தோள் மூட்டின் எந்தவொரு சிறு அசைவும் வலியை ஏற்படுத்துகிறது. மேலும் தோள்பட்டையை அசைக்க இயலாது, அல்லது அசைக்கும்போது வலி கடுமையாக இருக்கும். இந்த நிலை 2 முதல் 9 மாதங்கள் வரை நீடிக்கும்.

    இரண்டாம் நிலையான உறைந்த நிலையில் தோள் மூட்டின் வலி குறையக்கூடும். இருப்பினும், தோள்பட்டை கடினமாகி தோள்மூட்டை பயன்படுத்துவது மிகவும் சிரமமாகிறது. இந்த நிலை 4 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

    மூன்றாம் நிலையான தாவிங் அல்லது உருகும் நிலையில் தோள்பட்டை நகரும் திறன் மேம்படத் தொடங்குகிறது. உறைந்த தோள்மூட்டு

    சித்த மருத்துவம்:

    இந்த நோய் சித்தர்களால் கூறப்பட்டுள்ள வாத நோய்களில் ஒன்றாகும். வாத நோய்களில் முக்குற்றங்களில் மிகுந்து நிற்கும் வாதத்தை சமன்படுத்த பேதி மருந்தை சித்த மருத்துவர்களின் அறிவுரை படி எடுத்து அதன் பிறகு நோய்க்குரிய மருந்தை சாப்பிட வேண்டும்.

    1) ரச கந்தி மெழுகு 500 மி.கி. இருவேளை பனை வெல்லத்தில் வைத்து சாப்பிட வேண்டும்.

    2) சேராங்கொட்டை நெய் 5 மி.லி. இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. நாகப்பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கொடுக்க வேண்டும்.

    4) தோள் மூட்டின் வலி உள்ள இடங்களில் விடமுட்டி தைலம், உளுந்து தைலம், காயத்திரு மேனி தைலம், வாத கேசரி தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    5) எந்தக்கை பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தக்கையின் முழங்கை பகுதியை உயர்த்தி, தோள்பட்டையை நீட்டுவதற்கு மென்மையான அழுத்தத்தைச் செலுத்தி, மேலே கொண்டு வரும் பயிற்சியை செய்யவேண்டும். இதை ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை செய்ய வேண்டும்.

    • கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
    • 2 வாலிபர்கள் கைது

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). இவர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை 2 வாலிபர்கள் பாலாஜியின் பெட்டிக்க டைக்கு சென்று கத்தியை காட்டி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வாலிபர்கள் பாலாஜியின் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    அத ன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா க்களை ஆய்வு செய்து விசாரித்தார்.

    விசாரணையில் வியாபாரியிடம் பணம் பறித்தது வேலூர் சைதாப் பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23), ஓல்டுடவுனை சேர்ந்த விக்னேஷ் (23) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காகிதப்பட்டறை பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். 2 பேரையும் பிடிக்க முயன்றபோது தப்பியோட முயன்று தவறி கீழே விழுந்தனர்.

    அதில் அவர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், 2 பேருக்கும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×