என் மலர்tooltip icon

    வேலூர்

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.ஜி. ஏரியூர் அருகே அருகே உள்ள தாமோதரன் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு யாரேனும் இறந் தால் அங்குள்ள சுடுகாட் டில் தகணம் செய்வது வழக்கம்.

    இப்பகுதி, மக்களுக்கென தனியாக சுமார் 1 ஏக்கர் 20 சென்டில் சுடுகாடு அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் சுடுகாட்டை முழுவதும் ஆக்கிரமித்து அதனை உழுது பயிர் செய்துள்ளார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் கொடுத்தனர்.

    அவரது உத்தரவின் பேரில் தனி வட்டாட்ச்சியர் முரளிதரன் (ஆதிதிராவிடர் நலத்துறை) முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் அபிலேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விரட்டிச் சென்று பிடித்த உறவினர்கள்
    • ரூ.500 பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், செதுவாலையை சேர்ந்தவர் ஜாவித் ரிஸ்வான் (வயது 32). இவர் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    வழிப்பறி

    நேற்று இரவு வேலை முடிந்து வேலூரில் இருந்து செதுவாலை நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். மேல் மொணவூர் சர்வீஸ் சாலையில் சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் ஜாவித் ரிஸ்வானை வழிமடக்கினர்.

    கத்தியை கட்டி மிரட்டி ஜாவித் ரிஸ்வானிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500 பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். ஜாவித் ரிஸ்வான் செய்வது அறியாது தவித்தபடி நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது ஜாவித் ரிஸ்வானின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சினிமா பார்த்துவிட்டு அந்த வழியாக சென்றனர்.

    ஜாவித் ரிஸ்வான் நின்று கொண்டு இருப்பதை பார்த்த அவர்கள் ஏன் இங்கு தனியாக நின்று கொண்டு இருக்கிறாய் என கேட்டனர். வாலிபர்கள் 3 பேர் செல்போன் பணத்தை பிடுங்கி சென்றதாக அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து ஜாவித் ரிஸ்வானின் உறவினர்கள் வழிப்பறி வாலிபர்களை பைக்கில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். கைகலப்பு ஏற்பட்டது. வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    ஒருவரை மட்டும் பிடித்து விரிஞ்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடத்தியதில் அவர் வேலூர், கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 22) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
    • 2 வாலிபர்கள் கைது

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). இவர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை 2 வாலிபர்கள் பாலாஜியின் பெட்டிக்க டைக்கு சென்று கத்தியை காட்டி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வாலிபர்கள் பாலாஜியின் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    அத ன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா க்களை ஆய்வு செய்து விசாரித்தார்.

    விசாரணையில் வியாபாரியிடம் பணம் பறித்தது வேலூர் சைதாப் பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23), ஓல்டுடவுனை சேர்ந்த விக்னேஷ் (23) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காகிதப்பட்டறை பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். 2 பேரையும் பிடிக்க முயன்றபோது தப்பியோட முயன்று தவறி கீழே விழுந்தனர்.

    அதில் அவர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், 2 பேருக்கும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் மடக்கி பிடித்தனர்
    • 9 கட்டைகள், கத்தி பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் மோசஸ், சுரேஷ் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரோந்து சென்றனர்.

    குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் ஆற்றோரம் ரோந்து சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார.

    போலீசார் அந்த மர்ம நபர் அருகில் சென்றதும் அவர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு இருட்டில் தப்பி ஓடி விட்டார். போலீசாரும் விரட்டிச் சென்றனர் அந்த நபர் நேரத்தில் இருட்டில் ஓடி தப்பிவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு மூட்டையில் 9 சந்தனமர கட்டைகளும் அதை வெட்ட பயன்படுத்திய கத்தியும் இருந்தன.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தன மரக்கட்டைகளையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    தப்பி ஓடிய மர்ம நபர் குறித்தும் சந்தன மரக்கட்டைகள் எங்கிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல இந்த வழியாக வந்தனர், இந்த கும்பல் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சந்தன மரக் கட்டைகளை பிடித்த குடியாத்தம் டவுன் போலீசாரை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

    • எஸ்.பி. எச்சரிக்கை
    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

    வேலூர்:

    குற்றங்கள் தடுப்பது குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.பி. மணிவண் ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    கோர்ட்டில் உள்ள வழக்குகளில் இறுதி விசாரணை அறிக்கையை, நிலுவையின்றி தாக்கல் செய்ய பட்டியல்களில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து குற்றம் நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டும்.

    மக்கள் அளிக் கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டும். போலீசாரின் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், டிஎஸ்பிக் கள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி, இருதயராஜ், மனோகரன் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    • ஆடிக்கிருத்திகை திருவிழாவுக் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்கப்படும்
    • தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    வேலூர்:

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலத்திலிருந்து திருத்தணிக்கு 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 185 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    வேலூரிலிருந்து 60 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 30 பஸ்களும், சோளிங்கரி லிருந்து 10 பஸ்களும், திருப்பத்தூ ரிலிருந்து 35 பஸ்களும், ஆம்பூரிலிருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டில் இருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என மொத்தம் 185 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் 9-ந் தேதி அன்று ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, அணைக்கட்டு அருகே உள்ள முத்துக்குமரன்மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்கும் பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    பொதுமக்கள் இந்த பஸ்சை சேவையிைனை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    • வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடக்கிறது
    • 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கல்லூரியில் நடத்துகிறது.

    இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட கல்வித்தகுதி உடைய வேலைதேடுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

    தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விரும்பம் உள்ள நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in-என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • நீண்ட நாட்களுக்கு பிறகு சரிவு
    • 28 கிலோ கொண்ட பாக்ஸ் ரூ.3.100

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

    கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற் பனை செய்யப்பட்டது. நாள்தோறும் தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைய தொடங்கி யுள்ளது. மார்க்கெட்டில் இன்று கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.120 வரை விற் பனை செய்யப்பட்டது.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திராவில் இருந்து தக்காளி லோடு வருகிறது. 28 கிலோ கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.3,100க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து இன்று அதிகரித் துள்ளதால், கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது. மேலும் ஒரு பாக்ஸ் தக் காளி ரூ.2400-க்கும் விற் பனை செய்யப்படுகிறது.

    மார்க்கெட்டில் முதல் ரக தக்காளி மொத்த விலை ரூ.100க்கு விற்பனை செய் யப்படுகிறது. பொடி ரக தக்காளி ரூ.60 முதல் விற் பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100-க்கு விற்பனை செய்யப்படு கிறது. வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிக ரிக்கும் என்பதால் தக் காளியின் விலை மேலும் குறையும் என்றனர்.

    • மனைவி தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியதால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பி.என்.பாளையம், பாறையூர், இருளர் காலனியை சேர்ந்தவர் சோமநாதன். டிராக்டர் டிரைவர்.

    இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மகாலட்சுமி நங்கமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் வற்புறுத்தினார்.

    மது போதையில் இருந்த சோமநாதன் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் விரக்தி அடைந்த சோமநாதன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதனைக் கண்ட சோமநாதன் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லத்தேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சோமநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்
    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளைம் ராகவேந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 43).

    இவரது வீட்டில் நேற்று சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறியடித்துகொண்டு வெளியே ஓடிவந்தனர். ேமலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில், சம்பவம் இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    மீட்கப்பட்ட பாம்பை ஒடுகத்தூர் அருகே உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் பத்திரமாக விட்டனர்.

    • ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டதால் நடவடிக்கை
    • சோதனை வாரம் தோறும் தொடரும் என்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் வீட்டின் முன்பு, வங்கி அருகே நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் அடிக்கடி திருடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வேலூர் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் நேற்று நடந்த வார சந்தையில் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் உரிய ஆவணம் இல்லாமலும், பதிவெண் இல்லாமலும் எடுத்து வரப்பட்ட சுமார் 12 பைக்குகளை போலீசார் ஒரே நாளில் பறிமுதல் செய்தனர்.

    இதில், திருப்பதி, ஆந்திரா போன்ற வெளி மாநில பதிவெண்கள் கொண்ட பைக்குகளும் சிக்கியது. இதில், 3 பைக்குகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணம் கொடுத்து வண்டியை எடுத்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    பல்வேறு பகுதிகளில் திருடப்படும் பைக்குகள் ஒடுகத்தூர் பகுதியில் தான் உள்ளது என எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் வார சந்தை முழுவதும் சோதனை செய்தோம்.

    இதில், 12 பைக்குகள் பறிமுதல் செய்து அதில் உரிய ஆவணம் வைத்திருந்த 3 பைக்குகள் ஒப்படைக்கப்பட்டது. இந்த சோதனை இனி வாரம் தோறும் தொடரும் என்றனர். இப்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    கர்நாடகா மாநிலம் தும்கூரை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவருக்கு மஞ்சள் காமாலையால் பாதிக்கட்டு அவதியடைந்து வந்தார். வாலாஜாவில் மஞ்சள் காமாலைக்கு மருந்து வழங்கப்படுகிறது.

    இதனால் ரவி கர்நாடகாவில் இருந்து வாலாஜாவிற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். அப்போது வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் இறங்கினர். பின்னர் பஸ் மூலம் வாலாஜா செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அந்த வழியாக வந்த ரெயில் ரவி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×