search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் வாலிபர் சாவு
    X

    பைக் விபத்தில் வாலிபர் சாவு

    • நண்பரை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வீணா (24) என்ற மனைவியும், 3 வயது மகளும் உள்ளனர்.

    சுபாஷ் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசனுடன்(21), குச்சிபாளையம் பகுதியில் உள்ள மற்றும் நண்பரை பார்க்க தனது பைக்கில் சென்றார்.

    நண்பரை பார்த்துவிட்டு 2 பேரும் பைக்கில் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    போடிபேட்டை அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×