என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
    X

    வாகன ஏலத்தில் கலந்து கொள்ள வந்தவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி.

    போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி குடியாத்தம் ஆகிய 3 சப் டிவிஷனில் கலாச்சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் டி எஸ் பி மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படித்தனர். வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×