என் மலர்tooltip icon

    வேலூர்

    • முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
    • மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது

    வேலூர்:

    பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் 50 ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனை நடந்தது.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சி. அலமேலு வரவேற்று பேசினார்.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் என். ரமேஷ் மற்றும் துணைத்தலைவர் என். ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிமொழி மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பணிமனையை தொடக்கி வைத்து பேசியதாவது:-

    பணிமனையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் மிகச் சிறந்த தேர்வு வினா தயாரிப்பா ளராகத் திகழ வேண்டும்.

    நல்ல தரமான வினாக்களை தயாரித்து மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதன் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுமை பெறச் செய்து தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களாக வர வேண்டும்.

    எந்த நேரத்திலும் கல்விப் பணி ஒன்றையே ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் வினாக்கள்தான் தமிழகத்திலேயே மிகச் சிறந்த வினாவாக இருக்க வேண்டும்.

    ஆசிரியர்களது வாழ்க்கையில் எப்போதும் தேடல் வேண்டும்.

    நிறைய புத்தகங்களை படியுங்கள். அதிக முயற்சி, கடுமையான பயிற்சி மேற்கொண்டு அரசுத் தேர்வுகளில் வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சியை 100 சதவீதம் பெறுவதற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் சி. குமார் நன்றி கூறினார்.

    • கண்காணிப்பி கேமராவில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர், வடுகன் தாங்கல் ஆகிய பகுதிகளில் காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பேக் கரி கடையில் கடையின் பூட்டை உடைத்து கடந்த மாதம் 25-ந் தேதி 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்டவை திருடுபோனது.

    இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து திருட்டு தொடர்பாக கடைகளில் உள்ள சிசி டிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதில், வடுகன் தாங்கல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) உள்பட வேலூரை சேர்ந்த 2 சிறுவர்கள் கடை யில் திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நேற்று மணிகண்டன் உள் ளிட்ட 3 பேரை போலீ சார் கைது செய்தனர்.

    மணிகண்டனை வேலூர் சிறையிலும், சிறுவர்களை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.

    • மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், சைதாப்பேட்டை, சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர்.

    மதுவுக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் மது போதையில் வந்து அவரது மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வெங்கடேசன் மாமியார் வீட்டிற்கு சென்று பலமுறை குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். அவர் வர மறுத்ததால் விரக்தியில் இருந்த வெங்கடேசன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்புக் காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓ.ராஜாபாளையத்தில் உள்ள ஓம் சக்தி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று இரவு 8 மணியளவில் பக்தர்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வர காலதாமதம் ஆனதால் அப்பகுதி இளைஞர்களே அந்த மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    இதனை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

    • கலெக்டர் அதிரடி உத்தரவு
    • நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், கால்நடை மருத்துவமனை, சிறிய வணிக வளாகங்கள், துணி கடைகள், உள்ளிட்டவைகள் உள்ளன.

    சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி, மலைவாழ் மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அணைக்கட்டுக்கு தான் அதிகம் வருகின்றனர். சிறிய வர்த்தக நகரமாக திகழும் இந்த அணை க்கட்டில் மக்கள் அதிகம் கூடுவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    அணைக்கட்டு பஜாரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. கடைகள், வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சேகரிக்கின்றனர்.

    தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பை களை அணைக்கட்டு- வேலூர் சாலையில் உள்ள கெங்கநல்லூர் சந்தைமேடு அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டு ஏற்படுகிறது. மலைபோல் குவிக்கப்படும் குப்பைகள் சில சமயங்களில் பகல் நேரங்களிலேயே தீயிட்டு கொளுத்து கின்றனர்.

    அந்த சமயத்தில் கரும்புகை மண்டலம் உருவாகி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கண்களில் எரிச்சலை உருவாக்குகிறது.

    இது தொடர்பான செய்தி மாலைமலரில் புகைப்படத்துடன் வெளியானது.

    இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அணைக்கட்டு சாலை யோரத்தில் குப்பகைளை தீ வைத்து எரிப்பதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது எரிந்து கொண்டிருந்த குப்பை களை தண்ணீர் ஊற்றி அணைத்து கொட்ட ப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இனிமேல் இங்கு குப்பைகள் கொட்ட கூடாது. சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அகற்றாமல் வைத்திருந்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அணைக்கட்டு அல்லது கெங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை அமைக்க இடம் வழங்க வேண்டும்.

    மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை உரமாக மாற்றி உடனடியாக அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து அணைக்கட்டு தாலுகா ஆஸ்பத்திரி மற்றும் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி, வின்சென்ட்ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் 11 வகையான திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

    இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவற்றி செல்கின்றனர். மேலும் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதே போல் நேற்றும் தேய்பிறை முன்னிட்டு யாகசாலைகள்.

    அமைக்கப்பட்டு 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் 11 வகையான திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அருகே அமைக்கப்பட்டு இருக்கும் வினாயகர்க்கு பூஜைகள் செய்யப்பட்டனர்.

    பின்பு புனித கலச நீர் கொண்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதாவெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செலயாளலர் செங்கடேசன் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார்
    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த வெங்கடாபுரம் வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது17). இவர் நேற்று பாலமதி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தது.

    மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி சசிகுமார் கீழ விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மீது எஸ்.பி.யிடம் புகார்
    • நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    வள்ளலாரை சேர்ந்த ரமேஷ் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

    வள்ளலார் பிஎப் அலுவலக சாலையில் அரசுக்கு சொந்தமான 10 மரங்கள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி மர்ம நபர்கள் மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்.

    இது குறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தால் அவர்கள் வீட்டு வசதி வாரிய அலுவலகத்துக்கு சொந்தமான மரங்களை வெட்டியதாக தெரிவிக்கின்றனர்.

    சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர்.

    எனவே மரம் வெட்டியவர்கள் மீதும் குற்றவாளிகளுக்கு துணை போகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் வாணியர் வீதியில் நேற்று ஒரு கோவில் திருவிழா வையொட்டிசாமி ஊர்வலம் நடந்தது. அப்போது வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பவருக்கும், ஞானவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதைப்பார்த்த அதேபகு தியை சேர்ந்த ராஜேஷ் (20), அரவிந்த் (21), கார்த்திகேயன் (29) ஆகியோர் தடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் கத்தியை எடுத்து, ராஜேஷ், அரவிந்த் ஆகியோரை குத்தியதாக கூறப்படுகிறது.

    மேலும் கார்த்திகேயனையும் தாக்கி உள்ளார். காயமடைந்த அவர் கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முருகர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    • ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி சாத்துப்படி செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சிறப்பு வழிபாடு

    ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

    காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளையாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவான்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் ஆடிகிருத்திகை முன்னிட்டு பூக்காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து 'அரோகரா' கோசமிட்டபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவில்களில் காவடி தண்டி சாத்துபடி செய்யும் இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பக்தர்கள் வெள்ளி வேல் அலகு குத்தியும், சிறிய மற்றும் பெரிய தேரை இழுத்து வந்தும், அந்தரத்தில் தொங்கிய படி பறக்கும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருத்தணி செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல் வள்ளிமலை ரத்தினகிரி உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கட்டு பகுதியில் உள்ள தென்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மயில்வாகன மலை முருகப்பெருமான், மூலைகேட் பகுதியில் அமைந்துள்ள வேலாடும் தனிகைமலை அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோயில், முத்துக்குமாரன் மலையில் அமைந்துள்ள முருகப்பெருமான் ஆகிய கோயில்களில் வழக்கம் போல் நேற்று முதலே திருவிழா கலைக்கட்ட தொடங்கியது. இதில் இன்று திரளான பக்தர்கள் காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    • வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர், காகிதப்பட்டறை, நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது18). மேளம் அடிக்கும் தொழிலாளி.

    இவர் தற்போது சத்துவாச்சாரி வ. உ.சி நகரில் வசித்து வருகிறார். காகிதப்பட்டறையில் தற்போது ஆடி மாத திருவிழா நடைபெறுகிறது. இதனால் காப்பு கட்டிக் கொள்ள நேற்று இரவு ஆகாஷ் காகிதப்பட்டறை வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). ராஜேஷுக்கும், ஆகாசுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் பீர் பாட்டிலை உடைத்து ஆகாஷ் இடுப்புக்கு கீழே சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்து ஆகாஷூக்கு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆகாஷ் மீது 3 திருட்டு வழக்குகள் மற்றும் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வழக்கு ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
    • 800 போலீசார் பாதுகாப்பு

    வேலூர்:

    தமிழகத்தில் ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோவில்களில் விழாக்கள் களை கட்டுகின்றன.

    அதேபோல் ஆடி கிருத்திகை விழா வடமாவட்ட முருகன் கோவில்களில் களை கட்டுகிறது. கோவில்களுக்கு பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்க டனை செலுத்துகின்றனர்.

    திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு திருத்தணி கோவிலுக்கு வேலூரில் இருந்து 60 சிறப்பு பஸ்களும்,ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், சோளிங்கரிலிருந்து 10 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 35 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டி லிருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என மொத்த 185 பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு பஸ்கள் வரும் 10-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

    மேலும் நாளை ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, அணைக்கட்டு அருகே உள்ள முத்துக்குமரன் மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகப்பெருமாள் கோவில்களில் நடைபெறும் ஆடி கிருத்திகை திருவிழாவுக்கும் பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று முதல் நாளை வரை 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆடி கிருத்திகையொட்டி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×