என் மலர்tooltip icon

    வேலூர்

    • வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நடக்கிறது
    • பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள அகராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் விவசாய நிலத்தில் நேற்று புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அதனை அங்கிருந்த நாய்கள் துரத்தி வேட்டையாடியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மான் இறந்து போனது.

    அதேபோல் கரடிகுடி அடுத்த சென்ராயன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பனின் விவசாய நிலத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தி கடித்தது.

    நாய்களிடம் இருந்து தப்பிக்க பயந்து ஓடிய மான் விவசாய கிணற்றில் விழுந்து பலியானது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று 2 புள்ளி மான்களின் உடல்களை கைப்பற்றி கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்த பின்பு காப்பு காட்டில் எரித்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஒடுக்கத்தூர் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் தொடர்நது உயிரிழக்கிறது. வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற சம்பவம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மலைப்பகுதிகள் அதிக அளவில் கானப்படுகின்றது. இங்கு காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

    தற்போது மழை இல்லாமல் வெயில் காலம் என்பதால் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது.

    அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன.

    மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதியை உயிருடன் அதிகம் செல்வதில்லை.

    பல நேரங்களில் நாய் கடித்தும், பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது.

    வெயில் காலத்தில் மட்டுமே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றது. அவ்வாறு வரும் விலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் அனுப்ப வேண்டுமே தவிர அவற்றை அடக்கம் செய்ய கூடாது என ஆவேசமாக பேசி வருகின்றனர். வன ப்பகுதியில் விலங்குகளுக்கு என தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.

    அதனை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பினால் போதும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் முழுமையாக தடுக்கலாம். வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்புகள் சம்பவம் நடக்கிறது.

    இதுபோல் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் இணைப்பு பெட்டியை தொட்டபோத விபரீதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்ததம் அடுத்த அக்ராவ ரம் ஊராட்சி ஏரிப்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந் தன். இவரது மனைவி சங் கீதா. விவசாயக் கூலித்தொழி லாளிகள்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆதித்யன் (வயது 11), குடியாத்தம் நெல் லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. அதன் அருகே சிறுவன் விளையா டிக் கொண்டிருந்தான்.

    அப் போது குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின்சார இணைப்பு பெட்டியில் எதிர்பாராதவித மாக ஆதித்தன் கை வைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தான். உடனடி யாக பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு சிகிச் சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த கரிகிரி ஹாஸ்பிடல் பின்புறத்தை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி ஷாகிதா.

    தம்பதியினருக்கு பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஷாகிதாவின் மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் அவர் புத்தாடை வாங்கித் தருமாறு தனது தாயிடம் கேட்டார்.

    தன்னிடம் பணம் இல்லாததால் புத்தாடை வாங்கி தர முடியாது என மகனிடம் ஷாகிதா கூறினார்.

    இதனால் தாய் மற்றும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஷாகிதா வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாகிதாவின் விரைந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது
    • பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கியது

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சின்ன அரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 16), காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார். காட்பாடி-குடியாத்தம் சாலையில் பஸ் செல்லும் போது எதிர்பாராத விதமாக படியில் இருந்து கார்த்திகேயன் தவறி கீழே விழுந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து திகைத்து நின்றனர்.

    தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்கிறார்களா? என போலீசார், ஆசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த கண்காணிப்பு குழுவினர் பஸ் நிறுத்தங்களில் நின்று கண்காணிப்பார்கள். சமீப காலமாக பஸ் நிறுத்தங்களில் கண்காணிப்பு குழு நிற்பதில்லை.

    அவர்களை மீண்டும் தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கதவின் பூட்டு உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காட்பாடி:

    வள்ளிமலை அடுத்த பெரியமிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). லாரி டிரைவர்.

    இவ ரது மனைவி ஜெயந்தி (39). இவர்கள் இருவரும் நேற்று காலை வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    பின்னர் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென் றது தெரிந்தது.

    இதுகுறித்து வெங்கடே சன் கொடுத்த புகாரின் பேரில் மேல்பாடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினர்
    • போலீசார் தீவிர விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் பாலாஜி (48), வேலூர் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டாக பணி புரிகிறார். இவர், காகிதப்பட்டறையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க பைக்கில் சென்றார். தொடர்ந்து, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த 3 பேர், திடீரென செல்போனை பறித்து கொண்டு ஓடினர். அதிர்ச்சி அடைந்த பாலாஜி, துரத்திச்சென்று பிடிக்க முயன்றார். ஆனால், தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய் தனர்.

    அதில் செல்போன் பறித்து தப்பிய காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்த சிவா (26), சுகுமார் (23) தேவராஜ் (26) என தெரிந்தது, பின்னர் 3 பேரையும் கைதுசெய்து, செல்போனை பறிமுதல் செய் தனர். இதுபோன்று வேறு எங்கா வது கைவரிசை காட்டினரா? என அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    • பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்

    அணைக்கட்டு:

    வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலஅகலமாக நடைபெற்றது இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிம்ம வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம்,யானை வாகனம், குதிரை வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவம் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் அருள்மிகு எல்லையம்மன் அலங்கரிப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.

    வீதியில் வந்த தேரின் மீது பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது சூறையிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். திருத்தேர் முக்கிய மாட வீதிகளின் வழியாக சென்றது.

    • ஒரு மாணவிடியை 4 பேர் காதலித்து வந்தனர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    வாலிபர் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவியை அதே நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மேலும் 3 பேர் காதலித்து வந்தனர்.

    அந்த மாணவியும் எல்லோரிடமும் காதலிப்பது போல் சரிசமமாக பேசி வந்துள்ளார்.

    இது குறித்து 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு தெரிய வரவே, அவர் மாணவியை கண்டித்து உள்ளார். இது தொடர்பாக மாணவியை காதலித்து வரும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், கரடிகுடியில் உள்ள 2-ம் ஆண்டு மாணவனின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படு காயமடைந்த மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மாணவனின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    ஆடி மாதத்தின் 4-ம் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப் பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    வெட்டுவாணம்

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    குடியாத்தம் கோபால புரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    வெட்டுவாணம்

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    • 13-ந் தேதி வரை அமல்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தெற்கு ரெயில்வேயில் குண்டக்கல் டிவிஷனில் ரயில் பாதை பராமரிப்பு பணிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனால் விழுப்புரம் திருப்பதி இடையிலான முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.30 மணி அளவில் புறப்பட்டு திருவண்ணா மலை, போளூர், ஆரணி, வேலூர் கண்டோன்மென்ட், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் இந்த ரயில் காட்பாடி உடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல் மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பாகாலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட் வழியாக விழுப்புரம் செல்லும் ரெயிலும் காட்பாடியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலை 4.40 மணிக்கு திருப்பதிக்கு மீண்டும் திரும்பி புறப்பட்டு செல்லும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று தொடங்கி வரும் 13-ந் தேதி வரை அமலில் உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டம்

    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பயன்பாட்டில் இருந்து முழுபாகம் சேதமடைந்த, ஒழுகும் நிலையில் இருந்த பஸ்கள் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டிருந்தது.

    அதனுடன் பழைய வண்ணம் மாற்றப்பட்டு மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த பஸ்கள் நீலம் மற்றும் சில்வர் வண்ணத்தில் இருந்தவை ஆகும். வண்ணத்தில் மட்டுமின்றி உட்கட்ட மைப்பிலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் ரீடிங் விளக்குகள் தரம் உயர்த்தி வடிவ மைக்கப்பட்டுள்ளது.

    ரெக்சீன்கள் கொண்டு இருக்கைகள் அமைக்கப் பட்டுள்ளதால் இவை எளிதில் அழுக்கு அடைவது இல்லை. முழுக்க முழுக்க புதியதாக பஸ் பாடி கட்டப்பட்டுள்ளதால் பளிச்சென்று காணப்ப டுகிறது.

    தனியார் பஸ்களுக்கு போட்டியாக வடிமைப்பும், தரமும் அமைந்துள்ளது. நீண்டதூர வழித்தடங்களில் இந்த பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

    வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் முதற்கட்டமாக 12 பழைய பஸ்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இன்னும் சில வாரங்களில் இப்பணி முழுமையாக முடிக்கப்படும். அதன்பிறகு இந்த பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்தம் அடுத்த புவனேஸ் வரிபேட்டையில் ஸ்ரீமுத் துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும்.

    வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இத னால் அதிகளவு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல் கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி கோவிலுக்கு பூசாரி வந்தபோது, கோவி லுக்குள் இருந்த மைக்செட், ஸ்பீக்கர் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயி ரம் மதிப்பிலான பொருட் கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் கோவில் நிர்வாகத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு வாலிபர் கோவிலுக்குள் நுழைந்து, பொருட்களை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து அந்த வாலிபர் குறித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பது தெரிந்தது.

    இந்த நிலையில் நேற்று புவனேஸ்வரி பேட்டையில் சுற்றி திரிந்த நித்தியா னந்தத்தை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தியானந்தத்தை மீட்டனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கோவிலில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×