என் மலர்
வேலூர்
- மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார்
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
வேலூர்:
வேலூர் அடுத்த வெங்கடாபுரம் வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது17). இவர் நேற்று பாலமதி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்தது.
மாடு மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி சசிகுமார் கீழ விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் மீது எஸ்.பி.யிடம் புகார்
- நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
வள்ளலாரை சேர்ந்த ரமேஷ் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வள்ளலார் பிஎப் அலுவலக சாலையில் அரசுக்கு சொந்தமான 10 மரங்கள் இருந்தன. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி மர்ம நபர்கள் மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்.
இது குறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தால் அவர்கள் வீட்டு வசதி வாரிய அலுவலகத்துக்கு சொந்தமான மரங்களை வெட்டியதாக தெரிவிக்கின்றனர்.
சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர்.
எனவே மரம் வெட்டியவர்கள் மீதும் குற்றவாளிகளுக்கு துணை போகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
- வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் வாணியர் வீதியில் நேற்று ஒரு கோவில் திருவிழா வையொட்டிசாமி ஊர்வலம் நடந்தது. அப்போது வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பவருக்கும், ஞானவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைப்பார்த்த அதேபகு தியை சேர்ந்த ராஜேஷ் (20), அரவிந்த் (21), கார்த்திகேயன் (29) ஆகியோர் தடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் கத்தியை எடுத்து, ராஜேஷ், அரவிந்த் ஆகியோரை குத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் கார்த்திகேயனையும் தாக்கி உள்ளார். காயமடைந்த அவர் கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முருகர் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
- ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி சாத்துப்படி செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறப்பு வழிபாடு
ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.
அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி, வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளையாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவான்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் ஆடிகிருத்திகை முன்னிட்டு பூக்காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து 'அரோகரா' கோசமிட்டபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவில்களில் காவடி தண்டி சாத்துபடி செய்யும் இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பக்தர்கள் வெள்ளி வேல் அலகு குத்தியும், சிறிய மற்றும் பெரிய தேரை இழுத்து வந்தும், அந்தரத்தில் தொங்கிய படி பறக்கும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருத்தணி செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல் வள்ளிமலை ரத்தினகிரி உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டு பகுதியில் உள்ள தென்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மயில்வாகன மலை முருகப்பெருமான், மூலைகேட் பகுதியில் அமைந்துள்ள வேலாடும் தனிகைமலை அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோயில், முத்துக்குமாரன் மலையில் அமைந்துள்ள முருகப்பெருமான் ஆகிய கோயில்களில் வழக்கம் போல் நேற்று முதலே திருவிழா கலைக்கட்ட தொடங்கியது. இதில் இன்று திரளான பக்தர்கள் காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
- வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
- போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலூர்:
வேலூர், காகிதப்பட்டறை, நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது18). மேளம் அடிக்கும் தொழிலாளி.
இவர் தற்போது சத்துவாச்சாரி வ. உ.சி நகரில் வசித்து வருகிறார். காகிதப்பட்டறையில் தற்போது ஆடி மாத திருவிழா நடைபெறுகிறது. இதனால் காப்பு கட்டிக் கொள்ள நேற்று இரவு ஆகாஷ் காகிதப்பட்டறை வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). ராஜேஷுக்கும், ஆகாசுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் பீர் பாட்டிலை உடைத்து ஆகாஷ் இடுப்புக்கு கீழே சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்து ஆகாஷூக்கு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகாஷ் மீது 3 திருட்டு வழக்குகள் மற்றும் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வழக்கு ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
- 800 போலீசார் பாதுகாப்பு
வேலூர்:
தமிழகத்தில் ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோவில்களில் விழாக்கள் களை கட்டுகின்றன.
அதேபோல் ஆடி கிருத்திகை விழா வடமாவட்ட முருகன் கோவில்களில் களை கட்டுகிறது. கோவில்களுக்கு பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்க டனை செலுத்துகின்றனர்.
திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு திருத்தணி கோவிலுக்கு வேலூரில் இருந்து 60 சிறப்பு பஸ்களும்,ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், சோளிங்கரிலிருந்து 10 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 35 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டி லிருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என மொத்த 185 பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் வரும் 10-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
மேலும் நாளை ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, அணைக்கட்டு அருகே உள்ள முத்துக்குமரன் மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகப்பெருமாள் கோவில்களில் நடைபெறும் ஆடி கிருத்திகை திருவிழாவுக்கும் பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று முதல் நாளை வரை 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடி கிருத்திகையொட்டி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- தவறி விழுந்ததில் கை முறிந்தது
- 4 பைக்குகள் பறிமுதல்
வேலூர்:
காட்பாடி மெட்டுக்குளம் செக் போஸ்ட் தெருவை சேர்ந்தவர் திருகுமார். இவர் கடந்த மாதம் தனது மனைவியுடன் சினிமா பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி திருகு மாரின் மனைவி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செயினை பறித்து சென்ற நபர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன்,சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சென்று சென்னை கிண்டி பகுதியில் பதுங்கி இருந்த நபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் காட்பாடி தாரா படவேடு குளக்கரை பகுதியை சேர்ந்த பலராமன் என்ற பாலா (வயது 28) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 3 பவுன் செயின் மற்றும் 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது
- வீடுகளில் கொடி ஏற்றி கொண்டாட அறிவுரை
வேலூர்:
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி விற்பனை செய்ய சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
இதனை வேலூர் தபால் நிலைய கண்காணிப்பாளர் என்.ராஜகோபாலன் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது :-
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும். ஒரு கொடி ரூ.25 க்கு விற்கப்படும்.
இதனை பொதுமக்கள் வாங்கி ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை தபால் நிலைய அதிகாரி, என். முரளி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் வீரன், சுந்தர்ராஜன் மற்றும் தபால் நிலைய அலுவலர்கள் செய்திருந்தனர்.
- 250 கிலோ சிக்கியது
- ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேலூர் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரில் இருந்து அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அதில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரனாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் சுமார் 250 கிலோ குட்கா போன்ற போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் விசரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த
தினேஷ்(28) மற்றும் திலிப்திவாசி(22) என தெரியவந்தது. பின்னர் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எடி. எஸ்.பி. மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படுத்தினர்.
வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஏலத்தில் மொத்தம் 359 பைக், ஒரு ஆட்டோ ஏலம் விடப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 45,160 என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.
- கட்டுப்பாட்டை இழந்து பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் மகன் கார்த்திக் (வயது 27).
இவர் பைக்கில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருகம்புத்தூர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் திடீரென தறிக்கெட்டு ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்
- 10½ பவுன் நகை, பைக் பறிமுதல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருணாசலநகர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டுக்குச் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அனிதா என்பவரின் கழுத்தில் இருந்த 2 ½ பவுன் தங்கச் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ஆனந்தன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து அதனை பின்தொடர்ந்தனர்.
பள்ளிகொண்டா அருகே உள்ள ஒரு ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளில் கொள்ளையர்களின் பதிவு மிக தெளிவாக பதிவு ஆகியிருந்தது.
அவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பள்ளிகொண்டா அடுத்த கீழ்வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிரஞ்சன் (வயது 25) பொய்கை பகுதியில் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவரது தம்பி நிதீஷ்குமார் (21) என தெரியவந்தது.
விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கீதாஞ்சலி என்பவரிடம் 7 சவரன் செயின், அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே அரசு மருத்துவமனை நர்சு சுதா என்பவரின் கழுத்தில் இருந்த 6½ பவுன் நகையையும், பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் பகுதியில் சாவித்திரி என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்ததும் சில தினங்களுக்கு முன்பு அனிதாவிடம் 2½ பவுன் நகை பறித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 10½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.






