search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
    X

    மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

    • மின் இணைப்பு பெட்டியை தொட்டபோத விபரீதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்ததம் அடுத்த அக்ராவ ரம் ஊராட்சி ஏரிப்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந் தன். இவரது மனைவி சங் கீதா. விவசாயக் கூலித்தொழி லாளிகள்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆதித்யன் (வயது 11), குடியாத்தம் நெல் லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. அதன் அருகே சிறுவன் விளையா டிக் கொண்டிருந்தான்.

    அப் போது குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின்சார இணைப்பு பெட்டியில் எதிர்பாராதவித மாக ஆதித்தன் கை வைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தான். உடனடி யாக பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு சிகிச் சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×