search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகனின் பிறந்த நாளுக்கு புது துணி வாங்கி கொடுக்க முடியாததால் தாய் தற்கொலை
    X

    மகனின் பிறந்த நாளுக்கு புது துணி வாங்கி கொடுக்க முடியாததால் தாய் தற்கொலை

    • கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த கரிகிரி ஹாஸ்பிடல் பின்புறத்தை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி ஷாகிதா.

    தம்பதியினருக்கு பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஷாகிதாவின் மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் அவர் புத்தாடை வாங்கித் தருமாறு தனது தாயிடம் கேட்டார்.

    தன்னிடம் பணம் இல்லாததால் புத்தாடை வாங்கி தர முடியாது என மகனிடம் ஷாகிதா கூறினார்.

    இதனால் தாய் மற்றும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஷாகிதா வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாகிதாவின் விரைந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×