என் மலர்
வேலூர்
- வேலூர் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு
- வாலிபர் தாக்கியதால் மண்டை உடைந்தது
வேலூர்:
வேலூர் ஓல்டு டவுன், செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இன்று காலை மோதல் ஏற்பட்டது.
அப்போது எதிர் தரப்பை சேர்ந்த வாலிபர் பெண்ணை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் வேலூர் தெற்கு போலீசில் நிலையத்திற்கு ஓடி வந்தார்.
பெண்ணை தாக்கிய வாலிபர் அவரை பின்தொடர்ந்து போலீசில் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து வைத்துக்கொண்டனர். பெண்ணை ஆஸ்பத்திரிக்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் பெண் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து போலீஸ் நிலைய நுழைவாயில் அமர்ந்து தன்னை தாக்கிய வாலிபரை வெளியே அனுப்புங்கள். நானும் ரவுடிதான் என்று கூறினார்.
மண்டையை உடைத்த அவனது மண்டையும் உடைக்க வேண்டும்.அப்போதுதான் ஆஸ்பத்திரிக்கு செல்வேன் என அடம் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் போலீசார் செய்வது அறியாது திகைத்து நின்றனர்.
சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த பெண்ணிற்கு தெரிந்த வாலிபருடன் பைக்கில் ஏறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றார்.
ரத்தம் சொட்ட, சொட்ட போலீஸ் நிலையம் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சா லையில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு கண்ணாடி லோடுகளை ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் வந்துக் கொண்டிருந்த வேன் மோதியதில் வேன் டிரைவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேலம் ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். பிரகாஷ் (வயது 36) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி வெண்ணிலா (வயது 35) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் பிரகாஷ் சேலத்தில் இருந்து சென்னைக்கு லோடு ஏற்றி கொண்டு சென்னைக்கு சென்றார். லோடு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு திரும்பினார்.
கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
+2
- காலப்போக்கில் முழுக்க முழுக்க மூங்கில்களால் தனக்கு தானே கோவில் போன்று அம்மன் அரண் அமைத்து கொண்டதாக நம்பப்படுகிறது.
- அம்மனை தரிசனம் செய்ய சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒடுகத்தூரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கிராமத்தில் காட்டு காளியம்மன் கோவில் உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தம் பகுதியில் வசித்து வந்த ஆதி பழங்குடியினத்தவர்கள் இயற்கையை மட்டுமே சார்ந்து வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் அங்குள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று காடுகளில் கிடைக்கும் கிழங்குகள் மற்றும் தேன் போன்றவைகளை எடுத்து உண்டும், விற்பனை செய்தும் வாழ்ந்து வந்தனர்.
அப்படி ஒரு நாள் அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று கிழங்கு எடுத்து கொண்டிருக்கும் போது மண்வெட்டியால் ஓரிடத்தில் தோண்டிய போது ரத்தம் கொட்டியதாம். அப்போது, புகை மூட்டத்துடன் ஓர் அசரீரி வந்து 'நான் இங்கு தான் இருக்கிறேன், உலகத்தை காக்க வனத்தில் குடி கொண்டிருக்கிறேன்' நீ திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு சென்று விடு என்று சொல்லி விட்டு மறைந்து விட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆனால் அந்த நபர் திரும்பி பார்த்தார். மேலும் இதை பற்றி ஊர் பெரியவர்களிடம் நடந்ததை கூறினார். அதன் பின்னர் ஊர் பொதுமக்கள் அங்கு சென்று தோண்டி பார்த்த போது கிழங்கில் அம்மன் வடிவில் ஒரு உருவம் இருந்துள்ளது.
மேலும், இதனை தோண்டிய நபர் அன்றே இறந்தும் போயியுள்ளார். அவரின் சடலத்தை அம்மன் தோன்றிய இடத்தின் அருகிலேயே புதைத்துள்ளனர்.
பின்னர், காலப்போக்கில் முழுக்க முழுக்க மூங்கில்களால் தனக்கு தானே கோவில் போன்று அம்மன் அரண் அமைத்து கொண்டதாக நம்பப்படுகிறது. அன்று முதல் இன்று வரை காலம் காலமாக கிழங்கு வடிவிலான அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும் வனத்தில் தோன்றியதால் அம்மனுக்கு வன காட்டு காளியம்மன் என்று அழைத்தனர்.
இந்நிலையில், ஆண்டு தோறும் கொண்டாடப்படும் வன காட்டு காளியம்மன் கோவில் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, ஊர் மக்கள் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, குளக்கரையில் இருந்து அம்மனின் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வந்து வன காட்டு காளியம்மனுக்கு வைத்து சிறப்பித்தனர்.
அப்போது, வழி நெடுகிலும் குழந்தை வரம், திருமணம் வேண்டி தரையில் படுத்திருந்தனர். அந்த பக்தர்கள் மீது ஏறி நின்று சாமியாடி அருள் வாக்கு கூறினார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்த அம்மனை தரிசனம் செய்ய சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வன காட்டு காளியம்மனை பக்தியுடன் வேண்டி கொண்டு விரதம் இருந்தால் அவர்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். அதேபோல், குழந்தை இல்லாதோர் இங்குள்ள மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டி மடி ஏந்தி சாமியாடி வரும் போது மனமுருக வேண்டி கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறுகின்றனர்.
இதனால், நேற்று நடந்த திருவிழாவில் சாமியாடி வரும் போது ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடி ஏந்தி வேண்டி கொண்டனர்.
- வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடவடிக்கை
வேலூர்:
நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு காட்பாடி ெரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் காட்பாடி வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
- போலீசாரின் ரோந்து பைக்கை உடைத்ததால் பரபரப்பு
- மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகரில் ஆடி 4-ம் வெள் ளிக்கிழமையான நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது.
இதனையொட்டி நெல்லூர்பேட்டை ஏரிக் கரை பகுதியில் இருந்து பேரணாம்பட்டு சாலை வழியாக மேளதாளத்துடன் பூங்கரகம் ஊர்வலமாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது புத்தர் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்(வயது 20), மகாவி(29) ஆகியோர் பட்டாசுகளை கொளுத்தி பக்தர்கள் மீது வீசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பூங்கரக ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பட்டாசு வீசியவர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை மிரட்டிய தோடு, அங்கு நிறுத்தியிருந்த போலீசின் ரோந்து பைக்கை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ், மகாவி ஆகியோரை கைது செய்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பேரில் வைத்து எழுந்தருளினார்.
இதேபோல் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்கா ரங்களும் பூஜை களும் செய்யப்பட்டது தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டு தேரில் எழுந்தருளினார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரு தேரோட்ட நிகழ்ச்சி களிலும் ஆயிரக்கண பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரு இடங்களில் நடந்த தேர் திருவிழாவில் குடியாத்தம் புதுப்பேட்டை, பிச்சனூர், காளியம்மன பட்டி, சாமியார்மலை உள்ளிட்ட பகுதிகளில் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
தெருக்களில் வண்ண விளக்கு களால் அலங்கரி க்கப்பட்டு பல இடங்களில் அன்னதான மும் தண்ணீர் பந்தலும் அமைக்க ப்பட்டுள்ளது.
காளியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் சார்பில் ராட்சதமாலைகள் டிராக்டரில் வைத்தும் பொக்லைன் எந்திரத்தில் வைத்தும் கொண்டு வந்து அம்மனுக்கு அணிவித்தனர்.
இரு நிகழ்ச்சிகளிலும் கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள், விழா குழுவினர், திருப்பணி கமிட்டியினர், நகர மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு, அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஏரி கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டம்
- நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் அடுத்த கணபதி நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக தெருக்களின் ஓரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம், மோர்தானா அணையில் இருந்து நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக தற்போது குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையின் ஓரத்தில் செல்லும் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த கால்வாய் பணி முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த கால்வாயில் வரும் கழிவுநீர், பாதியில் கால்வாய் கட்டிடம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செல்ல வழியில்லாமல் அதிகளவில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.
பல நாட்களாக தேங்கிநிற்கும் கழிவுநீரில் கொசக்களின் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
பொதுமக்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குடியிருப்பில் இருந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு கழிவுநீர் எடுத்துசெல்ல கடந்த 2 மாதத்திற்கு முன்பு கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அந்த பணியும் முழுமையாக முடியாததால், கழிநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இரவு நேரத்தில் கொசுக்கள் துரத்தி, துரத்தி கடிப்பதால் நாங்கள் தூக்கத்தை இழந்து தவிக்கிறோம். மாலையில் கொசுக்கள் தொல்லை அதிகாம இருப்பதால் நாங்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது.
கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் இருக்கும் விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகிறது. மழை காலங்களில், ஏரிக்கு வரும் மழைநீர் கழிவுநீரோடு கலந்து, விவசாய நிலத்தில் தேங்கி பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் மழை காலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே மக்களின் நலன் கருதி கால்வாய் கட்டும் பணியை முழுமையாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
- போலீசார் ரோந்துயின்போது சிக்கினர்
- பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக தகவல்
வேலூர்:
வேலூர் அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் ஜானகி (வயது 42). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை இவர் வல்லண்டராமம் கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 2 பேர் பைக்கில் பின் தொடர்ந்தனர். யாரும் இல்லாதபோது திடீரென அவர் கள் ஜானகியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை கழற்றி கொடுக்கு மாறு கூறினர்.
அதிர்ச்சி அடைந்த அவர் மறுக்கவே அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஜானகி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து சென்ற போது 2 வாலிபர்கள் சந்தே கத்துக்கு இடமளிக்கும் வகை யில் பைக்கில் வந்தனர்.
அவர்களை போலீ சார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித் தனர்.
அதில் அவர்கள் விரிஞ் சிபுரம் பகுதியை சேர்ந்த சுதா கர் (29), அஜித் (21) என்பதும், அவர்கள் ஜானகியிடம் செயினை பறித்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து, பைக்கையும், செயினையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
- ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
அவரி டம் பல ஆண்டுகளாக அதேப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி வந்துள்ளனர். ஒவ் வொருவரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பல்வேறு சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தனர்.
முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கு பணத்தை அந்த நபர் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது. இந்த நிலையில் அந்த நபர் மற்றும் இதில் தொடர்புடைய அவரது குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் போலீசார் அப்போது அவர்கள் கூறுகையில்:-
ஏலச் சீட்டு நடத்தி பலலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள நபரிடம் ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். தலைமறைவாகிய அவரை பிடித்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
கேரளா மாநிலம், எர்ணாகுளம், புதுவை நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.
இதனால் விஷ்ணுவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. விஷ்ணுவுக்கு அவரது பெற்றோர் வேலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி விடுதியில் தங்கி இருந்த விஷ்ணு திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் விஷ்ணுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விஷ்ணுவின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விஷ்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே பயன்பாட்டில் இல் லாத சுரங்க நடைபாதை உள்ளது.
இதன் மேற்பகுதியில் சர்வீஸ் சாலையோரம் விஜயன் என்பவர் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக் கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களே போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முன்பகுதி எரிந்து நாசமானது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நீதிபதி வழங்கினார்
- ஏராளமான வழக்குகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது
வேலூர்:
சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட பொறுப்பு நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார்.
இதில் விபத்து இழப்பீடு சொத்து பிரச்சனை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது.
கடந்த 2021 -ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விருதம்பட்டை சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாலதி காட்பாடியிலிருந்து குடியாத்தம் சென்ற போது போலீஸ் வேன்மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு விபத்து இழப்பீடு தொகையாக ரூ.72 லட்சத்துக்கான இழப்பீட்டுத் தொகையை நீதிபதி சாந்தி வழங்கினார்.






