என் மலர்
நீங்கள் தேடியது "காரில் திடீர் தீ"
- பொதுமக்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே பயன்பாட்டில் இல் லாத சுரங்க நடைபாதை உள்ளது.
இதன் மேற்பகுதியில் சர்வீஸ் சாலையோரம் விஜயன் என்பவர் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக் கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களே போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முன்பகுதி எரிந்து நாசமானது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஆத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே அழகர்நாயக்கன் பட்டி சாமிகண்ணு தெருவில், அஜித் என்பவருக்கு சொந்தமான கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கார் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிவதாக ஆத்தூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் வந்தது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த காருக்கு யார் தீ வைத்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக காருக்கு தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






