என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏல சீட்டு"

    • போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
    • ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

    அவரி டம் பல ஆண்டுகளாக அதேப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி வந்துள்ளனர். ஒவ் வொருவரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பல்வேறு சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தனர்.

    முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கு பணத்தை அந்த நபர் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது. இந்த நிலையில் அந்த நபர் மற்றும் இதில் தொடர்புடைய அவரது குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் போலீசார் அப்போது அவர்கள் கூறுகையில்:-

    ஏலச் சீட்டு நடத்தி பலலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள நபரிடம் ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். தலைமறைவாகிய அவரை பிடித்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் ரூ.2 லட்சம் ஏலச் சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தார்.
    • அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டி உள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் ஏல சீட்டு நடத்தி வந்தனர். அதேப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இதில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தனர். நெய்வேலியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.2 லட்சம் ஏலச் சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தார். முதிர்வு காலம் முடிந்த பின்னரும் இவருக்கு பணத்தை திருப்பியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இவர் கடந்த 24-ந்தேதி நாராயணன் வீட்டுக்கு சென்று சீட்டு கட்டிய பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணன், தனலட்சுமி இருவரும் சேர்ந்து விஜயகுமாரை அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த நாராயணன், தனலட்சுமி இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×