search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்த காயங்களுடன் பெண் போராட்டம்
    X

    ரத்த காயங்களுடன் பெண் போராட்டம்

    • வேலூர் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு
    • வாலிபர் தாக்கியதால் மண்டை உடைந்தது

    வேலூர்:

    வேலூர் ஓல்டு டவுன், செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இன்று காலை மோதல் ஏற்பட்டது.

    அப்போது எதிர் தரப்பை சேர்ந்த வாலிபர் பெண்ணை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் வேலூர் தெற்கு போலீசில் நிலையத்திற்கு ஓடி வந்தார்.

    பெண்ணை தாக்கிய வாலிபர் அவரை பின்தொடர்ந்து போலீசில் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து வைத்துக்கொண்டனர். பெண்ணை ஆஸ்பத்திரிக்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

    ஆனால் பெண் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து போலீஸ் நிலைய நுழைவாயில் அமர்ந்து தன்னை தாக்கிய வாலிபரை வெளியே அனுப்புங்கள். நானும் ரவுடிதான் என்று கூறினார்.

    மண்டையை உடைத்த அவனது மண்டையும் உடைக்க வேண்டும்.அப்போதுதான் ஆஸ்பத்திரிக்கு செல்வேன் என அடம் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் போலீசார் செய்வது அறியாது திகைத்து நின்றனர்.

    சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த பெண்ணிற்கு தெரிந்த வாலிபருடன் பைக்கில் ஏறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றார்.

    ரத்தம் சொட்ட, சொட்ட போலீஸ் நிலையம் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×