என் மலர்
வேலூர்
- ஏரி கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டம்
- நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் அடுத்த கணபதி நகரில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வசதிக்காக தெருக்களின் ஓரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம், மோர்தானா அணையில் இருந்து நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் ெகாண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக தற்போது குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையின் ஓரத்தில் செல்லும் மழைநீர் கால்வாயில், கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த கால்வாய் பணி முழுமையடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த கால்வாயில் வரும் கழிவுநீர், பாதியில் கால்வாய் கட்டிடம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செல்ல வழியில்லாமல் அதிகளவில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.
பல நாட்களாக தேங்கிநிற்கும் கழிவுநீரில் கொசக்களின் உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
பொதுமக்களின் வசதிக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் மட்டும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக குடியிருப்பில் இருந்து நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு கழிவுநீர் எடுத்துசெல்ல கடந்த 2 மாதத்திற்கு முன்பு கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அந்த பணியும் முழுமையாக முடியாததால், கழிநீர் குளம்போல் தேங்கி கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இரவு நேரத்தில் கொசுக்கள் துரத்தி, துரத்தி கடிப்பதால் நாங்கள் தூக்கத்தை இழந்து தவிக்கிறோம். மாலையில் கொசுக்கள் தொல்லை அதிகாம இருப்பதால் நாங்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது.
கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் இருக்கும் விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகிறது. மழை காலங்களில், ஏரிக்கு வரும் மழைநீர் கழிவுநீரோடு கலந்து, விவசாய நிலத்தில் தேங்கி பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் மழை காலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே மக்களின் நலன் கருதி கால்வாய் கட்டும் பணியை முழுமையாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
- போலீசார் ரோந்துயின்போது சிக்கினர்
- பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக தகவல்
வேலூர்:
வேலூர் அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் ஜானகி (வயது 42). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை இவர் வல்லண்டராமம் கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 2 பேர் பைக்கில் பின் தொடர்ந்தனர். யாரும் இல்லாதபோது திடீரென அவர் கள் ஜானகியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை கழற்றி கொடுக்கு மாறு கூறினர்.
அதிர்ச்சி அடைந்த அவர் மறுக்கவே அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஜானகி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து சென்ற போது 2 வாலிபர்கள் சந்தே கத்துக்கு இடமளிக்கும் வகை யில் பைக்கில் வந்தனர்.
அவர்களை போலீ சார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித் தனர்.
அதில் அவர்கள் விரிஞ் சிபுரம் பகுதியை சேர்ந்த சுதா கர் (29), அஜித் (21) என்பதும், அவர்கள் ஜானகியிடம் செயினை பறித்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து, பைக்கையும், செயினையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
- ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.
அவரி டம் பல ஆண்டுகளாக அதேப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி வந்துள்ளனர். ஒவ் வொருவரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பல்வேறு சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தனர்.
முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கு பணத்தை அந்த நபர் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது. இந்த நிலையில் அந்த நபர் மற்றும் இதில் தொடர்புடைய அவரது குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் போலீசார் அப்போது அவர்கள் கூறுகையில்:-
ஏலச் சீட்டு நடத்தி பலலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள நபரிடம் ஏராளமானவர்கள் சீட்டுப்பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். தலைமறைவாகிய அவரை பிடித்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
கேரளா மாநிலம், எர்ணாகுளம், புதுவை நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்.
இதனால் விஷ்ணுவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. விஷ்ணுவுக்கு அவரது பெற்றோர் வேலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி விடுதியில் தங்கி இருந்த விஷ்ணு திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் விஷ்ணுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விஷ்ணுவின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விஷ்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் போராடி அணைத்தனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே பயன்பாட்டில் இல் லாத சுரங்க நடைபாதை உள்ளது.
இதன் மேற்பகுதியில் சர்வீஸ் சாலையோரம் விஜயன் என்பவர் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக் கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களே போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முன்பகுதி எரிந்து நாசமானது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நீதிபதி வழங்கினார்
- ஏராளமான வழக்குகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது
வேலூர்:
சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட பொறுப்பு நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார்.
இதில் விபத்து இழப்பீடு சொத்து பிரச்சனை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளுக்கு இன்று தீர்வு காணப்பட்டது.
கடந்த 2021 -ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விருதம்பட்டை சேர்ந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாலதி காட்பாடியிலிருந்து குடியாத்தம் சென்ற போது போலீஸ் வேன்மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு விபத்து இழப்பீடு தொகையாக ரூ.72 லட்சத்துக்கான இழப்பீட்டுத் தொகையை நீதிபதி சாந்தி வழங்கினார்.
- வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நடக்கிறது
- பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள அகராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் விவசாய நிலத்தில் நேற்று புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அதனை அங்கிருந்த நாய்கள் துரத்தி வேட்டையாடியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மான் இறந்து போனது.
அதேபோல் கரடிகுடி அடுத்த சென்ராயன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பனின் விவசாய நிலத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தி கடித்தது.
நாய்களிடம் இருந்து தப்பிக்க பயந்து ஓடிய மான் விவசாய கிணற்றில் விழுந்து பலியானது.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று 2 புள்ளி மான்களின் உடல்களை கைப்பற்றி கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்த பின்பு காப்பு காட்டில் எரித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஒடுக்கத்தூர் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் தொடர்நது உயிரிழக்கிறது. வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற சம்பவம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மலைப்பகுதிகள் அதிக அளவில் கானப்படுகின்றது. இங்கு காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது மழை இல்லாமல் வெயில் காலம் என்பதால் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது.
அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன.
மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதியை உயிருடன் அதிகம் செல்வதில்லை.
பல நேரங்களில் நாய் கடித்தும், பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது.
வெயில் காலத்தில் மட்டுமே வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றது. அவ்வாறு வரும் விலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் அனுப்ப வேண்டுமே தவிர அவற்றை அடக்கம் செய்ய கூடாது என ஆவேசமாக பேசி வருகின்றனர். வன ப்பகுதியில் விலங்குகளுக்கு என தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.
அதனை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பினால் போதும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் முழுமையாக தடுக்கலாம். வனத்துறையினரின் அலட்சியத்தாலே இதுபோன்ற உயிரிழப்புகள் சம்பவம் நடக்கிறது.
இதுபோல் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின் இணைப்பு பெட்டியை தொட்டபோத விபரீதம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடி யாத்ததம் அடுத்த அக்ராவ ரம் ஊராட்சி ஏரிப்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந் தன். இவரது மனைவி சங் கீதா. விவசாயக் கூலித்தொழி லாளிகள்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆதித்யன் (வயது 11), குடியாத்தம் நெல் லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. அதன் அருகே சிறுவன் விளையா டிக் கொண்டிருந்தான்.
அப் போது குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின்சார இணைப்பு பெட்டியில் எதிர்பாராதவித மாக ஆதித்தன் கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தான். உடனடி யாக பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு சிகிச் சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த கரிகிரி ஹாஸ்பிடல் பின்புறத்தை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி ஷாகிதா.
தம்பதியினருக்கு பிளஸ் 2 படிக்கும் 17 வயது மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷாகிதாவின் மகனுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால் அவர் புத்தாடை வாங்கித் தருமாறு தனது தாயிடம் கேட்டார்.
தன்னிடம் பணம் இல்லாததால் புத்தாடை வாங்கி தர முடியாது என மகனிடம் ஷாகிதா கூறினார்.
இதனால் தாய் மற்றும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஷாகிதா வீட்டில் உள்ள சீலிங் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாகிதாவின் விரைந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது
- பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கியது
வேலூர்:
காட்பாடி அடுத்த சின்ன அரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 16), காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார். காட்பாடி-குடியாத்தம் சாலையில் பஸ் செல்லும் போது எதிர்பாராத விதமாக படியில் இருந்து கார்த்திகேயன் தவறி கீழே விழுந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து திகைத்து நின்றனர்.
தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்கிறார்களா? என போலீசார், ஆசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த கண்காணிப்பு குழுவினர் பஸ் நிறுத்தங்களில் நின்று கண்காணிப்பார்கள். சமீப காலமாக பஸ் நிறுத்தங்களில் கண்காணிப்பு குழு நிற்பதில்லை.
அவர்களை மீண்டும் தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கதவின் பூட்டு உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
காட்பாடி:
வள்ளிமலை அடுத்த பெரியமிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). லாரி டிரைவர்.
இவ ரது மனைவி ஜெயந்தி (39). இவர்கள் இருவரும் நேற்று காலை வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் ததை கண்டு அதிர்ச்சிய டைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென் றது தெரிந்தது.
இதுகுறித்து வெங்கடே சன் கொடுத்த புகாரின் பேரில் மேல்பாடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினர்
- போலீசார் தீவிர விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் பாலாஜி (48), வேலூர் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டாக பணி புரிகிறார். இவர், காகிதப்பட்டறையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க பைக்கில் சென்றார். தொடர்ந்து, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 3 பேர், திடீரென செல்போனை பறித்து கொண்டு ஓடினர். அதிர்ச்சி அடைந்த பாலாஜி, துரத்திச்சென்று பிடிக்க முயன்றார். ஆனால், தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய் தனர்.
அதில் செல்போன் பறித்து தப்பிய காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்த சிவா (26), சுகுமார் (23) தேவராஜ் (26) என தெரிந்தது, பின்னர் 3 பேரையும் கைதுசெய்து, செல்போனை பறிமுதல் செய் தனர். இதுபோன்று வேறு எங்கா வது கைவரிசை காட்டினரா? என அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






