search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special worship in temples"

    • விஜயகாந்த் கடந்த 18-ந் தேதி உடல் நல குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கடந்த 18-ந் தேதி உடல் நல குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் சுகவனேஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் தக்காளி ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் சுகவனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அப்போது விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி தங்க தேரை இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் தனசேகர், துணைச்செயலாளர் ராஜ், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.நாராயணன், கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம், கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் எம்.பி.விஜய், அம்மாபேட்டை பகுதி செயலாளர் செல்வகுமார், சேலம் ஒன்றிய செயலாளர் அப்பாவு, பேரூர் செயலாளர் கார்த்தி மற்றும் செவ்வாய்பேட்டை நிர்வாகிகள் குணசேகர், கார்த்தி, வார்டு நிர்வாகிகள் செல்வம், ஆசைத்தம்பி, கிருஷ்ணன், விஷ்வா, பாபு, ஷபி, சம்பத், முனியப்பன், ஏழுமலை, முருகன், சக்திவேல், ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    • ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார்.
    • அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் விஜய தசமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    போடி வள்ளுவர் சிலை அருகில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையும் பிரசித்தியும் பெற்ற ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து பூரண அலங்காரத்தில் மங்கள ரூபிணியாக காட்சி அளித்தார். அம்மனுக்கு விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    திருமலாபுரம் அருகே அமைந்துள்ள சவுடாம்பிகை கோவிலில் அம்மனுக்கு அன்னை சாரதாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் உற்சவ அம்மன் சிலைக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு மகிஷாசூரவர்த்தினியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    போடி அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கும், சிவலிங்கத்திற்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிம்மவாகினியாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த கோவிலில் இளம் பெண்களுக்கு சப்த கன்னியர் போல அலங்காரம் செய்யப்பட்டு கன்னிமார்கள் அமரச் செய்து சுமங்கலிப் பெண்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    அனைத்து கோவில்களிலும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்று வழிபட்டுச் சென்றனர்.

    • பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    ஓமலூர்

    ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    நீண்ட வரிசை

    இதையொட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் புரட்டாசி கடைசி வாரம், ஐப்பசி மாத முதல் வாரத்தில் தேரோட்டம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    சங்ககிரி

    சங்ககிரி அருகே ஒருக்காமலையில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் சங்கரன் தலைமையில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து திருக்கோடி ஏற்றப்பட்டது. சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமியை வழிபட்டனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உத்திரவின் பேரில் சங்ககிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    வேலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி ஆடி அமாவாசை தினமான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப் பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதேபோல், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், காவிரி ஆற்றங்கரை அருகே மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி, கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் கோவில், அய்யம்பாளையம் முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் மார்கழி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

    • பாலமுருகனுக்கும் மார்கழி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்குக்கும், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கும் மார்கழி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகை

    யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்க ளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பால

    சுப்பிரமணியசாமி கோயில், பரமத்தியை அடுத்த பிராந்த கத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள

    வேல் வடிவம் கொண்ட

    சுப்ரமணியர், பிலிக்கல்பா ளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவே லீஸ்வரர் கோவிலில் உள்ள

    ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி

    திருக்கோவில், அய்யம்பாளை யத்தில் உள்ள முருகப்பெருமாள் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×